Sunday, 20 March 2016

தாண்டியா வளர்க்கும் கலாசாரம்..! தாண்டியா நடனம்; தெரிந்த நடனம் -- தெரியாத விவரம்......

தாண்டியா
வளர்க்கும் கலாசாரம்..!
தாண்டியா நடனம்;
தெரிந்த நடனம் -- தெரியாத விவரம்......


தாண்டியா நடனம் வட இந்தியர்களின் பாரம்பரிய நடனம் என்றாலும், அந்த நடன அமைப்பு, உடையலங்காரம், ஆடும் விதம் ஆகியவை தென் இந்தியர்களையும் கவர்ந்துள்ளது.
தாண்டியா நடனம், தமிழகத்தின் பழங்கால கோலாட்டத்தில் இருந்து வந்ததுதான்
அதனால்தான் தற்போது தமிழகத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் தாண்டியாவும் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது
தாண்டியா நடனம் குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனம்.
இப்படித்தான் தாண்டியா நடனம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது.
ஆனால், நாளடைவில் கலாசார மாறுதல்களுக்குத் தகுந்தவாறு இந்த நடனம் மக்கள் மகிழ்வான தருணங்களில் ஒன்று கூடும் இடங்களில் பார்வையாளர்களின் கவனத்தைக் கவருவதற்காகவும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும் ஆடப்பட்டு வருகிறது.
வட குஜராத் மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் இந்த தாண்டியா நடனம்,
தமிழகத்தின் பழங்கால கோலாட்டத்தில் இருந்து வந்ததுதான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
தமிழக-கேரள எல்லை வனப்பகுதியில் வசித்து வந்தவர்கள்தான் காணிக்காரர்கள் எனும் பழங்குடியின மக்கள்.
இன்னமும் இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. காணிக்காரர்கள் சமூகத்தில் தலைவரை மூட்டுக் காணி என்று அழைப்பார்கள். ஓணம் பண்டிகையின்போது, இவர்கள் ஊர் பொது இடத்தில் பிரம்மாண்டமான கோலாட்டத்தை நடத்துவார்கள்.
ஒவ்வொருவர் கையிலும் நீண்ட குச்சிகள் இருக்கும். இந்தக் குச்சிகள் அனைத்தும் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீத வெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளாகத் தான் இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.
அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தான் இந்த மரங்கள் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மரத்தில் இருந்து பெறப்பட்ட குச்சிகளை வைத்து தட்டும்போதுதான் ஒலி அளவு அதிகமாக இருக்கும். இந்தக் குச்சிகள் மிகவும் பளபளப்பாக இருக்கும்.
காணிக்காரர்களின் கோலாட்டத்தின் போது, காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள் அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாக இருக்கும். இப்படித்தான் கோலாட்டம் தொடக்கக் காலத்தில் இருந்தது.
காணிக் காரர்களின் சமூக மக்கள் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்வு பல்வேறு தரப்பட்ட மக்களையும் வெகுவாகக் கவர்ந்ததால், கோலாட்டம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. காணிக்காரர்கள் மட்டுமே ஆடிவந்த கோலாட்டம் அடுத்ததாகப் பல்வேறு சமூக மக்களாலும் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், பிற சமூக மக்கள் கோலாட்டத்தைப் புராணங்கள், இதிகாசங்களைப் பாடுபொருளாக வைத்து அமைத்தார்கள். தற்போது தமிழகத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளன்று சமயச் சடங்காகவும் இந்தக் கலை நிகழ்த்தப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் இந்தக் கலையைத் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் மட்டுமே நிகழ்த்தி வந்தனர். தொடக்கத்தில் மெதுவாகத் தொடங்கும் இசையும் ஆட்டமும், உச்சத்தை நெருங்கும்போது மிக வேகமாகும். இசையும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இந்தக் கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் தாண்டியா என்ற பெயரில் தற்போது நிகழ்த்தப்படுகிறது.
கோலாட்டத்தில் ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என இரண்டு வகை கலையாடல்கள் உள்ளன. அதேபோல பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
மொத்தத்தில் தாண்டியா தமிழகக் கலையின் மறுபிம்பம் என்று சொல்வதை நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment