Tuesday, 22 March 2016

ஆடைகளை திருடும் பூனை! நியூசிலாந்து நாட்டில் வினோதமாக ஆடைகளை திருடும் ஒரு குறும்பு பூனையை கண்டுபிடித்துள்ளனர்.

ஆடைகளை திருடும் பூனை!
நியூசிலாந்து நாட்டில்
வினோதமாக ஆடைகளை திருடும் ஒரு குறும்பு பூனையை கண்டுபிடித்துள்ளனர்.

நியூசிலாந்தில் ஹாமில்டன் நகரில் ஒரு வீட்டில் பெண் பூனை வளர்க்கப்படுகிறது. 6 வயதாகும் அந்த பூனை குறும்புதனம் செய்வதில் கில்லாடி. இந்த பூனை பக்கத்து வீடுகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை திருடி தனது வீட்டிற்கு எடுத்து வந்து சேகரித்து வைத்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் இந்த திருட்டை இந்த பூனை தான் செய்துள்ளது என கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பூனையின் உரிமையாளர் ஆன்லைனில் மன்னிப்பு கேட்டதுடன், தனது பூனை திருடி கொண்டு வந்த ஆடைகளை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் ஆடைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment