கவனத்தை
திசை திருப்பி காரியம் சாதித்தல்.
திசை திருப்பி காரியம் சாதித்தல்.
அப்படின்னு ஒரு கான்சப்ட் இருக்கு. அதாவது, ஒருவருடைய கவனத்தை ஒண்ணுமில்லாத விஷயத்தில் திருப்பிவிட்டு விட்டு பெரிய மேட்டரை லவட்டுதல்.
உதாரணத்துக்கு நம் வீட்டில் திரியும் பல்லிகள் . இவற்றை பூனை துரத்தினால் தங்களது வாலை கட் பண்ணி போட்டுவிட்டு அப்பால் போய்விடும், அந்த வால் அங்கேயே துடித்துக் கொண்டு கிடக்கும். துரத்தும் பூனை என்னடா அது என்று முன்னங்காலால் சீண்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பல்லி எஸ்கேப் ஆகி பாதுகாப்பான இடத்துக்குப் போய் விடும்.
உதாரணத்துக்கு நம் வீட்டில் திரியும் பல்லிகள் . இவற்றை பூனை துரத்தினால் தங்களது வாலை கட் பண்ணி போட்டுவிட்டு அப்பால் போய்விடும், அந்த வால் அங்கேயே துடித்துக் கொண்டு கிடக்கும். துரத்தும் பூனை என்னடா அது என்று முன்னங்காலால் சீண்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பல்லி எஸ்கேப் ஆகி பாதுகாப்பான இடத்துக்குப் போய் விடும்.
கவனத்தை திசை திருப்புவதில் இது ஒரு விதமானடெக்னிக் என்றாலும் தன் உயிரைக் காத்துக் கொள்ள தன் உடல் உறுப்பையே இழக்கும் பல்லியை குறை சொல்ல முடியாது.
இதே விஷயத்தை மனிதனும் செய்வான், ஆனால் அது மற்றவர்களிடமிருந்து எதையாவது அடிக்க!!. வங்கிகளில் இது நடக்கும்.
சில லட்சங்கள் பணத்தை தனது கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு வெளியே வருபவர் முன்னர், சில நூறு ரூபாய்களை கீழே போட்டுவிட்டு,
"சார் பணம் கீழே கிடக்கிறது பாருங்கள்" என்பார்கள். அந்த கூமுட்டை தான் கொண்டு வந்த லட்சங்களை காரில் வைத்து விட்டு இந்த நூறுகளைப் பொறுக்கப் போவார்,
அந்த சமயத்தில் லட்சங்கள் காணாமல் போயிருக்கும்.
சில லட்சங்கள் பணத்தை தனது கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு வெளியே வருபவர் முன்னர், சில நூறு ரூபாய்களை கீழே போட்டுவிட்டு,
"சார் பணம் கீழே கிடக்கிறது பாருங்கள்" என்பார்கள். அந்த கூமுட்டை தான் கொண்டு வந்த லட்சங்களை காரில் வைத்து விட்டு இந்த நூறுகளைப் பொறுக்கப் போவார்,
அந்த சமயத்தில் லட்சங்கள் காணாமல் போயிருக்கும்.
சாமியார் மேட்டரில் இருந்து, லட்சம் கோடிகளில் நடந்த ஊழல் வரைக்கும் இதே கதை தான். இதிலே மட்டும் ஏதோ பெரிசா கிழிக்கப் போறானுங்கன்னு எதிர் பார்த்தால் ஏமாளி நாம் தான்.
தனி மனித அளவில் இது என்றால், தேசிய அளவில் வேறு மாதிரி நடக்கும்.
ஒரு அரசு ஊழல் போன்ற கடும் பிரச்சனைகளை சந்தித்து மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்ப்பட்டிருக்கும் தருணத்தில், அவர்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்பி விட்டு முக்கிய பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்யும் செயல் இது.
ஒரு அரசு ஊழல் போன்ற கடும் பிரச்சனைகளை சந்தித்து மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்ப்பட்டிருக்கும் தருணத்தில், அவர்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்பி விட்டு முக்கிய பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்யும் செயல் இது.
No comments:
Post a Comment