Thursday, 28 April 2016

வாழும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக வாழும் நாட்களே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுகின்றது....

வாழும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக வாழும் நாட்களே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுகின்றது....

ஒரு செழிப்பான கிராமத்தில் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் கிராமத்தில் கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது , இதனால் .பெரியவர் தம் குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார் ,
 
பெரியவர் நல்ல இடம் தேடி செல்லும் வழியில் அழகிய கிராமத்தின் , ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு அமைந்திருந்தது , அதில் இறந்தவர்களை புதைத்து அவற்றின் மீது குறிப்புக் கற்களை வைத்திருந்தார்கள் , குறிப்புக் கற்கள் ஒவ்வொன்றிலும் இருந்த வாசகங்கள் பெரியவரை திகைக்க வைத்தன, அதில் " இவர் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவர்", "இவர் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவர்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன அது பெரியவருக்கு ஆச்சரியத்தையும் , அதிர்ச்சியையும் அளித்தது, 
 
இது என்ன சோதனை , இக்கிராமத்தில் அற்ப ஆயுள் படைத்தவர்கள் தான் அதிகம் போலுள்ளதே என்று தமக்குள்ள எண்ணினார் இதனால் இக்கிராமத்தில் தங்க கூடாதென்றும் முடிவுக்கும் வந்தார் , உடனே அங்கிருந்து கிளம்பினார் ,
 
 
அப்பொழுது தங்கள் ஊருக்கு வந்த பெரியவர் திரும்புவதை ஊரில் பலரும் கவனித்தனர் , அவர்களில் முதியவர் ஒருவர் அவர்களை அழைத்து பெரியவரை பார்த்து எங்கள் ஊர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? நீங்கள் இங்கேயே தங்கலாமே என்றார் ..
 
அதற்கு பெரியவர் எனக்கு ஒரு சந்தேகம் , நான் ஊருக்கு வெளியே இருக்கும் குறிப்புக் கற்களைப் பார்த்தேன் , அவற்றை பார்த்த பொழுது இந்த ஊரில் ஐந்து வயதிற்கு மேல் எவருமே வாழவில்லையோ என்ற உறுத்தல் எழுந்தது என்றார்.இதை கேட்ட ஊர் முதியவர் சிரித்தார் , என்னைப் பாருங்கள் எனக்கு எவ்வளவு வயதிருக்கும்?" என்று கேட்டார் .அதற்கு பெரியவர் "அறுபதுக்கு மேல் இருக்கும் என்று பதில் அளித்தார், "சரி என் வயதில் இவ்வூரில் எவ்வளவு பேர் இருக்கிறோம் பார்த்தீர்களா ?..இந்த குறிப்பில் உள்ள வாசகங்கள் என்ன சொல்கின்றது தெரியுமா ? வாழும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக வாழும் நாட்களே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுகின்றது என்றார்...

No comments:

Post a Comment