Friday, 15 April 2016

தமிழகத்தில் நேற்று 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.



தமிழகத்தில் நேற்று
9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.
 


தமிழகத்தில் நேற்று அதிகப்பட்சமாக தர்மபுரியில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்தபடியாக சேலத்தில் 105.08 டிகிரி, கரூர் பரமத்தி 104.9 டிகிரி, திருப்பத்தூர் 104 டிகிரி, திருச்சி 103.82, பாம்பன் 102.74, வேலூர் 102.56, மதுரை 102.56 டிகிரி, கோவை 101.3 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 99.32 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 97.16 டிகிரி, நாகப்பட்டினம் 96.44 டிகிரி, கன்னியாகுமரி 94.1 டிகிரி, தூத்துக்குடி 93.56 டிகிரி வெயில் பதிவானது. மொத்தம் 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பம் அதிகமாக காணப்படும். தரைக்காற்று அதிகமாக வீசுவதாலும், காற்றின் ஈரப்பதம் குறைந்ததாலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் 3 டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் நேற்று வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கையில், ‘’நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment