எந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும்
ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது..
இருந்த இடத்தில் இருந்து நகராமல் வானுக்கும் மண்ணுக்கும் ஒரு மறைமுக பாதையாக இருக்கும் மரங்கள் மழையை பெய்ய வைப்பதிலும்.. ஆரோக்கியமான சுற்றுச்சூழலை தருவதிலும் பெரும் பங்காற்றுகின்றன.
மண் சுவாசிக்க மரம் வேண்டும்..
பூமி குளிர மண் வேண்டும்..
மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்...
மழை கிடைக்கவும் மரம்தான் வேண்டும்..
ஒரு செடி வளர்த்து பாருங்கள்..
முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர் துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது..
நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா? அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..
No comments:
Post a Comment