Thursday, 28 April 2016

வாழும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக வாழும் நாட்களே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுகின்றது....

வாழும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக வாழும் நாட்களே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுகின்றது....

ஒரு செழிப்பான கிராமத்தில் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் கிராமத்தில் கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது , இதனால் .பெரியவர் தம் குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார் ,
 
பெரியவர் நல்ல இடம் தேடி செல்லும் வழியில் அழகிய கிராமத்தின் , ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு அமைந்திருந்தது , அதில் இறந்தவர்களை புதைத்து அவற்றின் மீது குறிப்புக் கற்களை வைத்திருந்தார்கள் , குறிப்புக் கற்கள் ஒவ்வொன்றிலும் இருந்த வாசகங்கள் பெரியவரை திகைக்க வைத்தன, அதில் " இவர் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவர்", "இவர் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவர்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன அது பெரியவருக்கு ஆச்சரியத்தையும் , அதிர்ச்சியையும் அளித்தது, 
 
இது என்ன சோதனை , இக்கிராமத்தில் அற்ப ஆயுள் படைத்தவர்கள் தான் அதிகம் போலுள்ளதே என்று தமக்குள்ள எண்ணினார் இதனால் இக்கிராமத்தில் தங்க கூடாதென்றும் முடிவுக்கும் வந்தார் , உடனே அங்கிருந்து கிளம்பினார் ,
 
 
அப்பொழுது தங்கள் ஊருக்கு வந்த பெரியவர் திரும்புவதை ஊரில் பலரும் கவனித்தனர் , அவர்களில் முதியவர் ஒருவர் அவர்களை அழைத்து பெரியவரை பார்த்து எங்கள் ஊர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? நீங்கள் இங்கேயே தங்கலாமே என்றார் ..
 
அதற்கு பெரியவர் எனக்கு ஒரு சந்தேகம் , நான் ஊருக்கு வெளியே இருக்கும் குறிப்புக் கற்களைப் பார்த்தேன் , அவற்றை பார்த்த பொழுது இந்த ஊரில் ஐந்து வயதிற்கு மேல் எவருமே வாழவில்லையோ என்ற உறுத்தல் எழுந்தது என்றார்.இதை கேட்ட ஊர் முதியவர் சிரித்தார் , என்னைப் பாருங்கள் எனக்கு எவ்வளவு வயதிருக்கும்?" என்று கேட்டார் .அதற்கு பெரியவர் "அறுபதுக்கு மேல் இருக்கும் என்று பதில் அளித்தார், "சரி என் வயதில் இவ்வூரில் எவ்வளவு பேர் இருக்கிறோம் பார்த்தீர்களா ?..இந்த குறிப்பில் உள்ள வாசகங்கள் என்ன சொல்கின்றது தெரியுமா ? வாழும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக வாழும் நாட்களே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள படுகின்றது என்றார்...

Wednesday, 27 April 2016

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்:

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்:

* உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது.
*யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.
* நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.
* மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுங்கள்.
* 'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள்..
* மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.
* நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்..
* சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்..
* பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.. உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று..
* எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்..
* உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள்..

Wednesday, 20 April 2016

ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும்,

ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும்,
அவனது பலமும், பலவீனமும் கூட ஒரு சில குறிப்பிட்ட நெருக்கமான உறவுகள்  தான்! 

Tuesday, 19 April 2016

உறவுகள் நணபர்களிடமிருந்து மனிதனுக்கு தேவையானது இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிக்கையூட்டும் தரும் சொற்களே..!

உறவுகள் நணபர்களிடமிருந்து மனிதனுக்கு தேவையானது இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிக்கையூட்டும் தரும் சொற்களே..!

உறவுகளும்..நாமும்...

உறவுகளும்..நாமும்...





உறவுகள்....

இதில்தான் எத்தனை வகை..

தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..

வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.

நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.

நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..

நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்

உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.

உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.

உறவுப்பூக்கள் மலரும்..

கடைசியாக ஒரு ஜோக்..

நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!

Sunday, 17 April 2016

தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!



தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!


1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன்
வரிசைக்கு வாருங்கள்.
2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப்
பார்த்துப் பேசுங்கள்.
அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும்,
தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம்
போடுவதெல்லாம் வேண்டாம்.
3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.
நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்
செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும்
என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்
உங்களுடையதாகட்டும்.
5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது

Friday, 15 April 2016

“சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' ஆண்டாள் வழிபாடு..!

“சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' ஆண்டாள் வழிபாடு..!


ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார்.ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை. இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். 

சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 

இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.

தவறை கண்டிக்கும் இடத்தில் நீ இருந்தாலும், கண்டிக்காமல் அதை எப்படி சரி செய்வது என யோசிப்பதே உன் இடத்திற்கான மதிப்பு.

தவறை கண்டிக்கும் இடத்தில் நீ இருந்தாலும், கண்டிக்காமல் அதை எப்படி சரி செய்வது என யோசிப்பதே உன் இடத்திற்கான மதிப்பு.

தமிழகத்தில் நேற்று 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.



தமிழகத்தில் நேற்று
9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.
 


தமிழகத்தில் நேற்று அதிகப்பட்சமாக தர்மபுரியில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது. அடுத்தபடியாக சேலத்தில் 105.08 டிகிரி, கரூர் பரமத்தி 104.9 டிகிரி, திருப்பத்தூர் 104 டிகிரி, திருச்சி 103.82, பாம்பன் 102.74, வேலூர் 102.56, மதுரை 102.56 டிகிரி, கோவை 101.3 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 99.32 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 97.16 டிகிரி, நாகப்பட்டினம் 96.44 டிகிரி, கன்னியாகுமரி 94.1 டிகிரி, தூத்துக்குடி 93.56 டிகிரி வெயில் பதிவானது. மொத்தம் 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பம் அதிகமாக காணப்படும். தரைக்காற்று அதிகமாக வீசுவதாலும், காற்றின் ஈரப்பதம் குறைந்ததாலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் 3 டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் நேற்று வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கையில், ‘’நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

கொலஸ்டிரால் ரிப்போர்டை அறிந்து கொள்வோம்!…

கொலஸ்டிரால் ரிப்போர்டை அறிந்து கொள்வோம்!…

உங்கள் கொல்ஸ்டிரால் டெஸ்டில் பொதுவாக கீழ்காணும் வகை கொலஸ்டிரால்கள் காணப்படும்.
1) மொத்த கொலஸ்டிரால்: இது 200க்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என ரிப்போர்ட் கூறும்
2) எச்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது நல்ல கொலஸ்டிரால்): இது 40க்கு அதிகம் இருக்கணும்
3) எல்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது கெட்ட கொலஸ்டிரால்): இது 130க்கு கீழே இருக்கணும்
4) ட்ரைகிளிசரைட்: இது 150க்கு கீழே இருக்கணும்.
இதில் பலரும் மொத்த கொலஸ்டிரால் 200 தாண்டினால் உடனே தான் கொல்ஸ்டிரால் பேஷண்ட் என நினைத்து பீதி அடைவார்கள். கூடவே கெட்ட கொல்ஸ்டிரால் எனும் எல்டிஎல் 130 (சில நாடுகளில் 100) தாண்டினால் அவ்வளவுதான். “எனக்கு ஸ்டாடினை பரிந்துரையுங்கள்” என தானாக மருத்துவரிடம் போய் நோயாளியாக ஆகிறவர்கள் உண்டு.
உண்மையில் கெட்ட கொல்ஸ்டிரால், நல்ல கொல்ஸ்டிரால் என்பது எல்லாம் பொதுமைபடுத்துதல். எல்டிஎல்லில் பல உள்வகை உண்டு. அதில் சில நமக்கு நல்லது, சில கெட்டது. நல்ல கொல்ஸ்டிரால் எனப்படும் எச்டிஎல்லில் கூட சிலவகை எச்டிஎல் நல்லது, சிலவகை எச்டிஎல் கெட்டது.
எல்.டி.எல்லில் இரு வகை. சின்ன சைஸ் எல்.டி.எல் (LDL-B), பெரிய சைஸ் எல்.டி.எல் (LDL-A).பெரிய சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் ஆபத்தற்றது. காரணம் அது உங்கள் ரத்த நாளங்களில் ஒட்டி மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் சின்ன சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் மிக ஆபத்தானது.
ஆனால் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் இது எதையும் காட்டுவது இல்லை. உங்கள் எல்டிஎல் கொல்ஸ்டிராலின் உள்வகைகள், எச்டிஎல் கொலஸ்டிராலின் உள்வகைகள் இவற்றை உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் பிரித்து காட்டுவது இல்லை. அப்படி பிரித்து ஆராயாமல் உங்களுக்கு இதயநோய் வரும் ஆபத்து உள்ளதா, இல்லையா என்பதை கொலஸ்டிரால் ரிப்போர்டை மட்டும் வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு NMR lipoprifile test என்பது போன்ற மேலும் அட்வான்ஸ்டான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அதை எல்லாம் செய்யாமல் “உங்களுக்கு கொல்ஸ்டிரால் பிரச்சனை” என உங்கள் மருத்துவர் கூறினால் அதை ஏற்று நீங்கள் ஸ்டாடின்களை உண்டு நோயாளியாக வேண்டாம். NMR lipoprofile பரிசோதனை செய்ய சொல்லி கேளுங்கள். அந்த சோதனை முடிவை விளக்க சொல்லி உங்கள் மருத்துவரை கேளுங்கள்.
மேலும் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில்
உங்கள் எல்.டி.எல் கொல்ஸ்டிரால் அளவை நேரடியாக அளக்கும் சக்தி அடிப்படையான கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் இல்லை. பல கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் LDL-calculated என எழுதி இருப்பார்கள். சிலவற்றில் எழுதி இருக்க மாட்டார்கள். ஆனால் எழுதி இருந்தாலும், இருக்காவிட்டாலும் நூற்றுக்கு 99.99% ரிப்போர்டுகளில் உங்கள் எல்.டி.எல் நேரடியாக அளக்கபடுவது இல்லை. கணக்கிடதான் படுகிறது.
எல்.டி.எல்லை கணக்கிட உதவும் பார்முலாவின் பெயர் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா. அது எப்படி கணக்கிடபடுகிறது என எழுதினால் கட்டுரை கணக்கு வகுப்பாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் அதை செய்யவில்லை. ஆனால் தேவைபட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.
எல்.டி.எல்லை நேரடியாக அளக்காமல் பார்முலாவை வைத்து கணக்கிடுவதில் உள்ள தவறு என்ன?
இதில் தவறு என்னவெனில் உங்கள் ட்ரைகிளசரடு எண் 100க்கு கீழ் அல்லது 400க்கு மேல் இருந்தால் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா வேலை செய்யாது. அது உங்கள் எல்.டி.எல் எண்ணை மிகைபடுத்தி காட்டும். ஆக உங்கள் ட்ரைகிலசரைட் நூறுக்கு கீழ் இருந்தால் உங்கள் எல்.டி.எல் எண் என உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் காட்டபடும் எண் முழுக்க தவறானது.
ஆக கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டை வைத்து ஸ்டாடினை உட்கொள்ள துவங்குவது என்பது தெர்மாமிட்டரை மட்டும் பார்த்து டைபாய்டு மருந்து உட்கொள்வதற்கு சமம். தெர்மாமீட்டர் மிக அடிப்படையான சோதனை. டைபாய்டு இருக்கா இல்லையா என்பதை அறிய மேலும் பல சோதனைகளை செய்யவேண்டும்.அப்படி செய்யாமல் ஸ்டாடினை உட்கொள்வது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஸ்டாடின் என்பது விளையாட்டு இல்லை. அதில் நினைவு இழப்பு மாதிரி பல பக்கவிளைவுகள் உண்டு. மேலும் அது கொலஸ்டிராலை குறைக்குமே ஒழிய இதய அடைப்பை தடுப்பதற்கான சாத்தியகூற்றை மிகவும் குறைவாக தான் குறைக்கும். இப்படி பக்கவிளைவுகளை உன்டாக்கும் மருந்தை தவறாக இருக்க கூடிய கொல்ஸ்ட்ரால் ரிப்போர்ட்டை மட்டும் நம்பி உண்பது சரியல்ல.
என்.எம்.ஆர் டெஸ்ட் செலவு பிடிக்கும் விஷயம் தான். ஆனால் கொல்ஸ்டிராலை குறைக்க உண்ணும் ஸ்டாடின் விலையை விட அது குறைவானது தான்.
மற்றபடி உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் முக்கியமான எண்கள் எவை?
எச்.டி.எல் மற்றும் ட்ரைகிளசரைடு
எச்.டி.எல் என்பது குப்பை லாரி மாதிரி. அது உங்கள் ரத்தநாளங்களுக்குல் சென்று கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை வாரி கொண்டு வந்து உங்கள் லிவரில் சேர்க்கும். லிவர் அந்த கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை உடைத்து கழிவாக மாற்றி அனுப்பிவிடும். ஆக எச்.டி.எல் அதிகமாக இருந்தால் அது மிக ஆரோக்கியமான விஷயம். எச்.டி.எல் 40க்கு கீழே இருந்தால் உங்கள் உடனாடி வேலைகள் அனைத்தையும் ஒத்தி போட்டுவிட்டு எச்.டி.எல்லை 40க்கு மேல் உயர்த்த நீங்கள் முயலவேண்டியது அவசியம். உங்கள் எச்.டி.எல் 60 தான்டினால் அது மிக பெரிய பலம். உங்கள் ட்ரைகிளிசரடு 100க்கு கீழ் இருந்து உங்கள் எச்.டி.எல் 60க்கு மேல் இருந்தால் அது நீங்கள் புல்லட் ப்ரூப் ஆடையை அணிந்து இருப்பது போன்ற பாதுகாப்பை உங்கள் இதயத்துக்கு அளிக்கும். உங்கள் எச்.டி.எல் 60 தான்டி, ட்ரைகிளிசரைடு 140க்கு கீழ் இருந்தால் அப்புறம் உங்கள் எல்.டி.எல்  ஆபத்தை விளைவிக்காத நல்ல வகை எல்.டி.எல்லாக இருக்கும் வாய்ப்பு தான் மிக அதிகம்.
ட்ரைகிளசரைடு என்பது என்ன?அது எப்படி உருவாகிறது?அதை எப்படி குறைப்பது? எச்.டி.எல்லை எப்படி அதிகரிப்பது?
இதற்கு இரன்டு வழிமுரைகள் தனியாக இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதாவது……
ட்ரைகிளசரிடு அதிகமாக இருந்தால் எச்.டி.எல் தானாக குறையும்.
ஆக எச்.டி.எல்லை அதிகரிக்க ட்ரைகிளீசரைடை குறைத்தே ஆகவேன்டியது அவசியம். ட்ரைகிளிசரைடை குறைத்தால் எச்.டி.எல் தானாக அதிகரிக்கும்.
ட்ரைகிளசரைடை எப்படி குறைப்பது?
இதை அறிய ட்ரைகிள்சரைடு எப்படி உருவாகிறது என்பதை அறிவது முக்கியம்.
ட்ரைகிளிசரைடு என்பது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை தான் ட்ரைகிளிசரைடு. நீங்கள் அரிசி, கோதுமையை உன்டால் அதில் உள்ள சர்க்கரை உங்கள் உடலால் குளுகோஸ் ஆக மாற்ரபடும். குளுகோஸ் தான் எரிபொருள். ஆனால் அந்த எரிபொருலை செலவு செய்யாவிடில் அதை சேமிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இரன்டுநாளுக்கு மேல் தேவையான அளவு குளுகோசை சேமிக்கும் சக்தி உடலில் இல்லை. ஆனால் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஏராளமாக கொழுப்பை சேர்க்கும் சேமிப்புதிறன் உங்கள் உடலுக்கு உள்ளது. ஆக மீதம் குளுகோஸ் உங்கள் லிவருக்கு அனுப்பபடும். லிவர் அதை ட்ரைகிளிசரைடு ஆக மாற்றி ரத்தத்தில் அனுப்பும். அது உங்கள் உடலில் ஊளைசதையாக சேமிக்கபடும்.
ட்ரைகிளசரைடை குறைக்க வழி இதில் இருந்தே தெரியும்.
சர்க்கரைசத்து (carbohydrates) உள்ள உணவுகளை உண்பதை குறைப்பது, அல்லது நிறுத்துவது.
சர்க்கரை சத்து நிரம்பிய உணவுகளை உண்பதை குறைத்தால் குரைவான அளவில் ட்ரைகிளிசரடை உடல் உருவாக்கும்.
சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகளை உண்பதை சுத்தமாக நிறுத்தினால் ட்ரைகிளிசரைடு உருவாகும் வழியே உடலில் கிடையாது. உடலில் குளுகொஸ் குறைவு எண்கையில் அதிக குளுகோசை சேமிக்கும் அவசியமே இல்லையே?
ட்ரைகிளிசரடு குறைந்தால் எச்.டி.எல் தானாக் அதிகரிக்கும். இவை இரண்டும் நடந்தால் உங்கள் எல்.டி.எல் ஆபத்தை விளைவிக்கும் சின்ன வகை எல்.டி.எல்லில் இருந்து உடலுக்கு நலனளிக்கும் பெரிய வகை எல்.டி.எல் ஆக மாறும். அதன்பின் உங்களுக்கு கொல்ஸ்டிராலை பற்றி யாதொரு கவலையும் வேண்டியது இல்லை.
 http://www.scirp.org/journal/PaperInformation.aspx?PaperID=34065

சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.சித்ரா பெளர்ணமி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு அன்னதானம்,ஆடைதானம் செய்யுங்கள் சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.சித்ரா பெளர்ணமி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு  அன்னதானம்,ஆடைதானம் செய்யுங்கள் சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.


மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரையில் வரும் பெளர்ணமிக்குஎன்று ஒரு தனி சிறப்பு உள்ளது.
புராணக் கதைகளின்படினிதர்களின் பாவபுணணியக் கணக்குகளைஎழுதும் ‌சித்ர குப்தன் அவதரித்த நாளும் ‌‌ன்றுதான்.

அவர் ‌சிவன் வடித்த ‌சித்திரத்தைக் கொண்ட உருவாக்ப்பட்டதாலும், ‌சித்திரைமாதத்தில் ‌பிறந்ததாலும் ‌சித்ர குப்தன் என்று அழைக்கப்படுகிறார்.
சித்ரகுப்தன் பிறந்த கதை

சித்திரை மாதம்சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்தஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தைஒவியத்தை வரைந்தார்.

அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போலதத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான்பார்வதியிடம், “நீ வரைந்த இந்தஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறிகொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடையமூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார்.

ஈசனின் மூச்சுக் காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன்அந்த ஓவியத்தில்இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாகவெளிவந்தது.

இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான்வரைந்த குழந்தை ஒவியம்ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டுமகிழ்ச்சியடைகிறேன்நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்தகுழந்தைக்கு சித்திர குப்தன் என அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார்.

சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம்சித்திரை நட்சத்திரம்,பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரைவணங்குவது நல்லது.

சித்திர குப்தனுக்கு பதவி 



ஒருநாள் யமதர்ம ராஜனுக்கு மனகவலை அதிகமாகிக்கொண்டே போனது.தன் மனகவலையை சிவபெருமானிடம் சொன்னார். “இறக்கும் ஜீவராசிகளைஅழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லபலன்களையும்தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும்விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். 

ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படிகண்டுபிடிப்பது?” என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன்.

உன் கேள்வியை ஜீவராசிகளை படைக்கும் பிரம்மனிடமே கேள்அவர் இதற்குதீர்வு சொல்வார்.” என்றார் சிவபெருமான்.

யமதர்மராஜன்பிரம்மனிடம் சென்று தன்னுடைய கவலையை சொன்னார்.அதற்கு பிரம்மதேவர், “அட இதுதானா உன் கவலை.? சக்திதேவியின்திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம்சிவபெருமானின் அருளால் உயிர்பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறதுஅவன் பெயர் சித்திர குப்தன்.சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன்.அவன் உனக்கு உறுதுணையாக இருந்துயார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்குஎழுதுவான்அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.”என்று ஆலோசனை வழங்கினார் பிரம்ம தேவர்.

அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்துயமதர்மராஜனிடம்அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன்பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திரகுப்தன்தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும்மறுகையில்எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்
.அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள்செய்யும் ஒவ்வொரு பாவ-புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ-புண்ணியங்களை பொறுத்துசித்திர குப்தன் எழுதும் கணக்கின்அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் –துன்பமும் நிகழ்கிறது.

பூஜை:
சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள்தெரிவித்திருந்தாலும்நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின்தேவதையை ஆவாஹனம் செய்து ,
"சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம். 
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்"!!!
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம்தூபம் மற்றும்பூக்களால் அர்ச்சிப்பதுடன்நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதாரபிரார்த்தனை செய்ய வேண்டும். சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தைவில்வஇலைகளால் அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்குஇரட்டிப்பாகும்
வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும்மேலும்இந்த நாளில் உப்புபசும்பால்தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம்இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின்பரிபூரண அருளைப் பெறலாம்..
பூஜையின் பலன்
சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும்இந்த பூமியில் நாம் செய்யும்ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்குதெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்துஇடைவிடாமல்கண்காணிக்கிறதுஇந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.
கோயில்

இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும்,திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.

சித்ரகுப்தனுக்கென்று தென்இந்திய அளவில் தனி ஆலயம்காஞ்சிபுரத்தில்தான் உள்ளது. 

காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனுக்குசிறப்பு வழிபாடுகள்பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழாகொண்டாடப்பட்டாலும்மதுரையில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாககருதப்படுகிறதுஅது ஏன்?
ஒருமுறை விருத்ராசுரன்விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன்கொன்றான்அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனைபிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான்குருபகவான்அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால்ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார்
அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கிவந்தான்ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்ததோஷம் விலகக் கண்டான்இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்பமரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சிகொடுத்தார்


இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில்இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்இத்தலத்து இறைவனுக்கு இந்திரன்விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும்விண்ணில்இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறதுஆலயம்எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னைஇங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.

அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்குவந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறதுஅதனால்தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிற்து.

சித்திரகுப்தர் ஸ்லோகம்

சித்திரைப் பருவந்தன்னில் உதித்தனை 

சித்ரகுப்தர்

அத்தின மவனை உன்னி அர்ச்சனை 

கடன்களாற்றிற்

சித்தியும் பெறுவர் பாவம் தீரமே யேமனூரில்

இத்திறனறிந்தே யன்னேனிரங்கு வானறங்கள் 

சொற்றே

ஓம் தத்புருஷாய வித்மஹே சித்ரகுப்தாய தீமஹிதன்னோ சித்ரகுப்த ப்ரசோதயாது..
சித்ரா பெளர்ணமி அன்னதானம்;சிறப்புகள் ..!
சித்திரை மாதத்தின் பெரும் சிறப்பு, சித்ரா பெள்ர்ணமி தினமாகும்..புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன்....அன்று நாம் செய்யும் புண்ணிய காரியங்கள் பல ம்டங்கு பலன்களை கொடுக்கும்...
சித்ரா பெளர்ணமி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு  அன்னதானம்,ஆடைதானம் செய்யுங்கள்