Thursday, 31 December 2015

Say Good Bye 2015 And Welcome 2016.....!

“Don’t Think About Yesterday,
Think About Tomorrow
Because Tomorrow Is A Chance To Correct
The Mistake Of Yesterday.
Lets
Say Good Bye 2015
And Welcome 2016.....!

கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்..!

கைவிரல் கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்?
உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.
* படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கைவிரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். * பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். * இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும்.
எப்படி? கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.
நன்மைகள் இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும். முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.
பெருவிரல் கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும்.
அறுவை சிகிச்சையெனில் கூடாது அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.
மகப்பேறு காலத்தில் கூடாது மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும்
உயர் இரத்த அழுத்தமெனில் கூடாது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த செயலைச் செய்யாதீர்கள். ஏனெனில் இச்செயலின் மூலம் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.
கடுமையாக செய்யக்கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல்நகங்கள் தான் பாதிக்கப்படும்.
நோய்த்தொற்றுக்கள் என்றால் கூடாது கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், இச்செயலைச் செய்யாதீர்கள்.
குறிப்பு முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.
உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.
* படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கைவிரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். * பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். * இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும்.
எப்படி? கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.
நன்மைகள் இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும். முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.
பெருவிரல் கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும்.
அறுவை சிகிச்சையெனில் கூடாது அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.
மகப்பேறு காலத்தில் கூடாது மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும்
உயர் இரத்த அழுத்தமெனில் கூடாது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த செயலைச் செய்யாதீர்கள். ஏனெனில் இச்செயலின் மூலம் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.
கடுமையாக செய்யக்கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல்நகங்கள் தான் பாதிக்கப்படும்.
நோய்த்தொற்றுக்கள் என்றால் கூடாது கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், இச்செயலைச் செய்யாதீர்கள்.
குறிப்பு முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.

‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்....!!!!

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்..!!
‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்,
இனி நடப்பது நல்லதாக அமையட்டும்....!!!!
2016 புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறோம்...
மகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, கோபம், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எண்ணற்றஉணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், நினைத்துப் பார்க்க நிறைய நினைவலைகள்!
பழைய காலண்டரை கழற்றும் போது, ஆண்டு முழுவதும் நம்முடைய இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்வது போன்றதொரு ஏக்கம். புதிய காலண்டரை மாட்டும்போது ‘ஏதோ ஒரு புதிய பலம், நம்பிக்கை நம்மை நாடி வருவது போன்றதொரு உணர்வு.
எந்த ஒரு ஆண்டும் எதிர்பார்ப்பது போலவே அமைந்து விடுவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. என்றாலும் வாழ்க்கை இன்பமானதாகவே அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!

Thursday, 10 December 2015

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..!’

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..!’
என்றொரு பழமொழி சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம்....
ஆ-நெய் என்றால் பசு நெய், பூ-நெய் என்றால் தேன். 40 வயதுக்குள் பசுநெய் சாப்பிட வேண்டும்...
அதற்கு மேல் தேன் சாப்பிட வேண்டும். ஆகவேதான் ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்றார்கள்.

தமிழ் பெண்கள் ஏன் கணவன் மீது அதீத காதலை வெளிப்படுத்துகிறார்கள்?

தமிழ் பெண்கள் ஏன் கணவன் மீது அதீத காதலை வெளிப்படுத்துகிறார்கள்?

தமிழ் பெண்கள் தங்கள் கணவன் மீது உரிமைக் கொண்டாடுவதில் முன்னலையில் இருப்பவர்கள். “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.” என்று பாடாத குறைதான். மற்றபடி முகத்திற்கு முன்னர் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அக்கம், பக்கத்து வீட்டு பெண்களோடு பேசும் போது தனது கணவன் பற்றிய பெருமை புராணம் பேசுவது அனைத்து பெண்களின் அன்றாட செயல்பாடு தான்.

உலக அளவில் பெண்களுக்கான தனி சுபாவம்,

குணாதிசயங்கள் என சில பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட, நமது பாரம்பரியத்தின் சாயலாக நம் நாட்டு பெண்களுக்கு கணவன் மீதான உரிமை என்பது கொஞ்சம் எல்லை தாண்டியது தான். இதை எல்லை தாண்டிய சுபாவம் என்று கூறுவதை விட, எல்லை தாண்டிய காதல் என்று கூறலாம். ஆம், கரைபுரண்டு ஓடும் பெண்களின் காதல் தான் உரிமைக் கொண்டாடுதலாக என காணப்படுகிறது.

மற்ற பெண்கள் புகழ்வது பிடிக்காது

மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக இருந்தாலும் தனது கணவனை வேறு பெண்கள் புகழ்வதை விரும்ப மாட்டார்கள். பெரிதாக தங்கள் கணவன் சாதித்திருந்தாலும் கூட வேறு பெண்கள் புகழ்ந்தால், மனைவிகளுக்கு வயிற்றில் கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்யும்.

என் புருஷன் எனக்கு மட்டும் தான்

என் கணவனை அடிக்கவும், உதைக்கவும், திட்டவும், கொஞ்சவும் என அனைத்திற்கும் தனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்பது இந்திய பெண்களின் குணம். இது ஒருவகையில் இந்திய பெண்களின் கலாச்சாரம் என்று கூட கூறலாம்.

அதிகப்படியான காதல் உரிமை

கொண்டாடுதல் ஆங்கிலத்தில் நாம் கூறும் Possesiveness, பெண்களுக்கு அதிகம் தான். சில சமயத்தில் மற்றவர்கள் இது கொஞ்சம் ஓவர் என்று கூறலாம். ஆனால், இது அதிகப்படியான காதலின் வெளிபாடு என்பது தான் உண்மை. ஆண்களை விட, கோபத்தையும், காதலியும் மிக அதிகமாக வெளிப்படுத்தும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. எனவே, இதை எந்த தருணத்திலும் உதாசீனம் செய்துவிட வேண்டாம்.

வளர்ப்பு முறை

பொதுவாக நமது தமிழக தாய்களின் வளர்ப்பு முறையும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. “புருஷன முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கடி..” என்று கூறி வளர்ப்பது உண்டு. இல்லையேல் கணவன் வேறு பெண் மீது ஆவல் கொண்டுவிடுவான் என்று கூறுவார்கள். இது உண்மையும் கூட. ஆண்களுக்கு போக போக எந்த வேலையாக இருந்தாலும் சலிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, பெண்கள் தான் ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.

பெண்களின் இயல்பு

அம்மாவின் வளர்ப்பு என்று கூறினாலும், பெண்களின் பொதுவான இயல்பே இது தான் என்றும் கூறலாம். ஆம், பொதுவாகவே குழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி அவர்கள் மீது தாய்மை அடைந்த பெண்ணானவள் அதிகமான உரிமை கொண்டாடுவாள். இது பெண்களின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்று.

காளி சொரூபம்

தாங்கள் உரிமை கொண்டாடியும் ஆண்கள் விலகி விலகி சென்றால், கணவன்மார்கள் மனைவியின் காளி சொரூபத்தை காண வேண்டிய கட்டாயம் நேரிடும். தங்கள் முன் வேறு பெண்களை புகழும் போது மனைவியின் கண்களிலும், வயிற்றிலும் எரியும் தீயை வைத்து நூறு குடும்பங்களுக்கு உணவு சமைத்துவிடலாம். இவை அனைத்துமே அவர்கள் தங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு தான் என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எல்லாம் நன்மைக்கே

சில ஆண்கள், தங்கள் மனைவி தன் மீது அதிகம் உரிமை கொண்டாடுவதை, சுதந்திரமாக செயல்பட தடையாக இருப்பதாக கருதுவது உண்டு. உண்மையில், பெண்கள் உங்கள் மீது உரிமையாக இல்லை என்றால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் மக்களே!! மற்றபடி பெண்கள் உங்கள் மீது உரிமையுடன் செயல்படுவது, எல்லாம் நண்மைக்கே!

நம் கொங்கு சமூகத்தின் உண்மையை - உறைக்கும்படி உலகத்துக்கு எடுத்து சொன்னதற்கு நன்றி....!.

தமிழகம் முக்கியமா கொங்கு பெல்ட் ல அரசியலும் சரி சமூக சூழ்நிலையும் சரி சாதி ரீதியாக தலித் மற்றும் தலித் அல்லாதோர் என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது,,
முற்றிலும் இது நேரிடையாகவோ மறைமுகமாகவோ அரசின் பங்கு உண்டு,,
ஏனெனில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு பாராமுகமாய் இருப்பதும் மறைமுகமான ஆதரவுதானே,,
நிற்க..
கொங்கு வெள்ளாளர் மீது தலித் வைக்கும் குற்றசாட்டு
ஆதிக்க சாதி னு,,
ஏம்பா நான் கேட்கறேன் 1947 க்கு முன் நாங்களும் அடிமை சாதி ,
நாங்களும் கோவணம் கட்டிக்கொண்டு சேற்றிலும், மாட்டுத்தொழுவத்திலும் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை கழித்தவர்கள்,,
தலித்களுக்கு அரசு தந்த இட ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை 68 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்,
அரசு கொடுத்த அத்துனை சலுகைகளையும் பயன்படுத்தி இன்று வரை முன்னேறாதது யார் தவறு?
தலித் களை விட அதிகம் பாதிக்கப்பட்டது கொங்கு வெள்ளாளர்களே விவசாயத்தில் நீர் இல்லையென்றாலும், விளைச்சல் இல்லையென்றாலும், நோய் நொடி தாக்கினால் இழப்பு விவசாயிக்குத்தான்,
தற்போது உள்ள தொழில் நிறுவனங்கள் நட்டம் ஏற்பட்டால் தொழிலாளிகளுக்கும் சம்பளம் தருவதில்லை, ஆனால் விவசாயி என்றாவது கூலியை தராமல் இருந்திருப்பானா??
தலித்களுக்கு அரசு கொடுத்த சலுகைகளை பயன்படுத்தியும் இன்று வரை இன்னும் போதவில்லை என்றுதானே சொல்கிறார்கள்,,
இன்று தலித்கள் அனுபவிக்கும் அனைத்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து தருவதில்லை, எங்களுடைய வரிப்பணம்,,
நாங்க கேட்கத்தானே செய்வோம்,,
எங்கள் மீதும் பொருளாதார ரீதியாக அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது,,
யாருக்காவது தெரியுமா?
அந்த அடக்குமுறையே எங்களை முன்னேற தூண்டியது,
தற்போது தமிழக வருவாயில் 60% சதவீதம் கொங்கு மண்டலத்தால் கிடைப்பது,மறுக்க முடியுமா யாரால்??
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்து போனது,நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட
திடீர் பஞ்சத்தில் விவசாயத்தை கைவிட வேண்டிய சூழல், அந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பிய 18 குடிகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்ய மறக்கவில்லை,
கர்நாடக விற்கு பஞ்சம் பொழைக்க போனார்கள் ,,
காசு இல்லாத்தால் நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து தாங்களே கிணறு தோண்டி வீண் தரிசு நிலங்களாக கிடந்தவற்றை பொன் விளையும் பூமியாய் மாற்றினார்கள், சிமோகா, மாண்டியா, பத்ராவதி டைகர் ப்ளாக் பகுதிகளில் இன்று போய் பாருங்கள், இரவு பகல் பாராது காட்டுப்பன்றிகளிடமிருந்து தங்கள் பயிர்களை காப்பாற்றி வளர்த்தார்கள்,,
இப்போதும் கடல்கடந்து ஆப்பிரிக்க கண்டங்களில் திருச்செங்கோட்டை சார்ந்த ரிக் வண்டிகள் சேவை செய்கின்றனர் , மொழி தெரியாமல் குடும்பங்களை விட்டு ஏதாவது ஒன்று என்றால் கேட்க நாதியில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கூட தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறுகின்றனர், அங்கு தற்போது விவசாயமும் செய்கின்றனர்,, எத்துனை பேருக்கு இது தெரியும்,,
அரசிடம் எந்த வித யாசகமும் கேட்கவில்லை, பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்து சென்று விட்டனர்,
தற்போதும் 18 வயது ஆவும் முன் பைனான்ஸ் தொழிலுக்கு மொழியும் எதுவும் தெரியாமல் தனது குல தெய்வத்தையும் , தன்னம்பிக்கை மட்டுமே துணையாக கொண்டு முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து தனது தலைமுறையின் வாழ்வாதரத்தையே பிணையாக வைத்து ,
இரவு பகல் பாராது குறைந்த பட்சம் 200&300 கிமீ தினமும் அலைந்து திரிந்து தனது பொருளாதாரத்தையும் தன்னை நம்பிய தாய் தந்தை உடன்பிறந்த சகோதர சகோதரி களின் நல்வாழ்க்கைக்கு தன் வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர்,,
அரசிடம் கையேந்தவில்லை,,
கரூரின் முக்கிய தொழில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பைனான்ஸ்
இவைகள் முன்பு முதலியார்கள் மற்றும் செட்டியார்கள் கையில் இருந்தது,(KVB,LVB)
ஆனால் தற்போது கொங்கு வெள்ளாளர்களின் சீரிய உழைப்பு., இன்னோவேஷன் மற்றும் தன்னம்பிக்கையால் பல்லாயிரக்கணக்கான அந்நிய செலாவணியை அரசுக்கு ஈட்டித்தருகின்றனர்,
திருப்பூர் ஈட்டித்தரும் அந்நிய செலாவணி வருடாவருடம் அஅதிகரித்துக்கொண்டே இருக்கிறது,,
யார் காரணம்,,
கோவை மாவட்டம் இரும்பு, பஞ்சாலைகளுக்கு பெயர் போனது அதில் கோலோச்சியவர்கள் நாயுடுகள் ஆனால் தற்போது அவர்களுக்கும் போட்டியாய் இருப்பதும் கவுண்டர்களே ,
இப்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கவுண்டர்கள் விவசாயத்தில் நேரம் கழித்தது போக ( உண்மையை சொன்னால் தண்ணீர் இல்லாமை)
வேறு ஏதாவது செய்து பொருளீட்ட வேண்டும் என்று உழைக்க தொடங்கினர்,
கவுண்டர்கள் உழைப்பதற்கு அஞ்சமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ,,
தற்போது கொங்கு மண்டலத்தில் உழைப்பால் முன்னேறிய 100 நிறுவனங்களை பட்டியலிட்டால் 75 கவுண்டர்களுடையது தான் இருக்கும்,,
கவுண்டர்கள் பரம்பரை பணக்காரர்களா இல்லவே இல்லை, ஒரு சில குடும்பங்கள் மட்டுமே,,அப்படி சொல்ல இயலும்!!!
இன்றும் 30% மட்டுமே 1 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ள கவுண்டர்கள்,,
KPN, சக்தி மசாலா,ராம்ராஜ் .ராணா டார் கம்பி , ஜெம் க்ரானைட்ஸ், லீ மெரிடியன் ஓட்டல்கள் , KMCH , இன்னும் பட்டியலிட்டுகொண்டே செல்லலாம்,
மேற்குறிப்பிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆரம்பித்தவைகள் அல்ல!!
சில ஆயிரங்களும், உழைப்பையும் கொண்டு புகழ் பெற்றவை!!
பேருந்துகள்,மில்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இவைகள் அனைத்துமே 50வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றுக்கு காரணம் இப்போது தெரியும் உங்களுக்கு!!
இந்தியாவிற்கே படியளப்பது நாமக்கல் மாவட்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் நாட்டில் ஓடும் லாரிகளில் 75% நாமக்கல்மாவட்டத்தை சார்ந்தது,
நாமக்கல் பெரும்பான்மையான இடங்கள் வானம் பார்த்த பூமி , கோழிப்பண்ணையும் லாரியும் விவசாயத்திற்கு மாற்றாக வந்தவை,,
நாமக்கல் மாவட்டமே தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்றழைக்கப்படுகிறது ,,
அவைகளை பெரும்பாலும் நடத்துவது கவுண்டர்கள் , எப்படி அவர்களது உழைப்பு,,அனைத்துமே பூஜ்யத்தில் ஆரம்பித்தவை!!
இப்படி அரசுக்கு பொருளாதார ரீதியாய் பின்புலமாக இருப்பது கவுண்டர்களே!!
தலித் மக்களுக்கு ஒரே கேள்வி ?? நீங்கள் ஏன் உழைப்பை தன்னம்பிக்கையை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க வில்லை??
காரணம் உழைக்காமல் அரசு தரும் இலவச மின்சாரம், அரசி, மற்றும் பல ,,
இவற்றோடு உங்களை மழுங்கச்செய்கிறது,
மானியங்களை புறந்தள்ளி உழைக்க பழகுங்கள்,,
மறைமுகமாக உங்களை சோம்பலாக்கி,
அடிமைபடுத்தியது அரசுகளே தவிர கவுண்டர்கள் அல்ல, இப்போதும் மறைமுகமாக உங்களை இயக்குவது உங்க சாதி தலைவர்கள், அவர்கள் பொருளாரீதியாய் எங்கேயோ சென்று விட்டார்கள்,,
ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கு ஆளான நீங்கள் தான் அங்கேயே நிற்கிறீர்கள், நின்றுகொண்டே இருப்பீர்கள்!!
---நன்றி பவித்திரம் புனிதா...

https://www.facebook.com/Er.Punitha/posts/1994753270749184

Wednesday, 2 December 2015

Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? கணினி, செல்பேசி, தொழிநுட்பம்

Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? கணினி, செல்பேசி, தொழிநுட்பம்
இந்த வார்த்தையை அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப் பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
நிறைய தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Check அல்லது Paypal மூலம் தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.
இந்த பதிவில் Paypal Account உருவாக்குதல், Bank Account சேர்த்தல், Bank Account க்கு பணத்தை பெறுதல் போன்றவற்றை காண்போம்.
1. முதலில் Payapal.com என்ற முகவரிக்கு செல்லவும்.
2. அதில் Sign Up என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் முதலில் உங்கள் நாடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும், அடுத்து என்ன மாதிரி கணக்கு தொடங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு Personal என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Upgrade செய்து கொள்ளலாம். [நிறுவனங்கள் பெயரில் என்றால் மூன்றாவதை தெரிவு செய்ய வேண்டும்]
3. அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். இதில் உங்கள் First Name என்பதில் உங்கள் பெயரை தரவும், Last Name என்பதில் Initial தரவும். இதில் உங்கள் உண்மைப் பெயரை பயன்படுத்தவும். தவறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பின் Agree & Create Account -ஐ கிளிக் செய்யுங்கள்.
4. அடுத்த பக்கத்தில் My Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் Bank Account கேட்கப்படும். அதில் Add bank என்பதை கிளிக் செய்யவும்.
6. அதில் உங்கள் அக்கௌன்ட் பெயர், பேபால் கணக்கோடு ஒத்துப் போக வேண்டும். அடுத்து உள்ள கட்டங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பவும். NEFT/IFSC Code அறிய நீங்கள் உங்கள் பேங்க் பெயர் மற்றும் ஊர் போன்றவற்றை இங்கே கொடுத்து தேடலாம்.
7. இந்த தகவல்களை நிரப்பிய பின்னர் Continue கொடுக்கவும்.
8. அடுத்த பக்கத்தில் Save என்பதை கொடுத்து விடவும்.
9. இப்போது Paypal உங்கள் வங்கிக் கணக்கில் 4 முதல் 5 நாட்களுக்குள் கொஞ்சம் பணம் போடும். [இந்திய ரூபாயில் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.] Two Deposits ஆக போட்டு இருக்கும்.
அதை செக் செய்து அதை உங்கள் Paypal கணக்கில் நுழைந்து Account Overview பகுதியில் “Confirm Bank Account” என்பதை கிளிக் செய்து தர வேண்டும்.
இது சரியாக இருந்தால் உங்கள் Paypal கணக்கு Verify செய்யப்பட்டு விடும். இனி Paypal கணக்கில் நீங்கள் பணங்களை பெற இயலும். அதை எளிதாக உங்கள் வங்கிக கணக்குக்கு Transfer செய்யவும் இயலும்.

Tuesday, 24 November 2015

இனிய கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..!

இனிய கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..!
கார்த்திகை தீபம் ஏற்றி!… வாழ்வின் இருளுக்கு ஒளியேற்றுவோம்!..
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம். எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி .. வாழ்வில் வளம் பெறுவோமாக!

கார்த்திகை தீபம் ஏற்றி!… வாழ்வின் இருளுக்கு ஒளியேற்றுவோம்!.. கார்த்திகை விளக்கின் தத்துவம்

இனிய கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..!
கார்த்திகை தீபம் ஏற்றி!… வாழ்வின் இருளுக்கு ஒளியேற்றுவோம்!..
கார்த்திகை விளக்கின் தத்துவம்
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம். எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்ட போது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின, ஆறு தீபப் பொறிகளும் சரவணப் பொய்கையில் மூழ்கி சிறு குழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ் சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் சின்ன சின்ன குழந்தைகளாக, முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும் போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல் தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. தீபத்தின் ஆடி பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு,நெய், எண்ணெய் நிறையும் இடத்தில சிவபெருமான் வாசம் செய்கிறார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி .. வாழ்வில் வளம் பெறுவோமாக!

Sunday, 22 November 2015

தவுன். அட ! இது நம்ம சீப்பைங்க!!

தவுன்.
அட ! இது நம்ம சீப்பைங்க!!
பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருள் தவுன். ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.
கர்ப்பகதருகு
மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.
பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.
பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுன்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
60 நாள் மட்டும்
பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள்.
பனம்பழங்களிலிருந்து எடுக்கப்படும் கொட்டை என்று அழைக்கப்படும் பனம்விதைகளை சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக கொட்டைக்குழி என்றழைக்கப்படும் மண் குவியலில் இட்டு வைப்பார்கள் இது பொங்கல் நேரங்களில் பனங்கிழங்குக்காக வெட்டி எடுக்கப்படும் அந்த நேரங்களில் அரிவாள் வைத்து பனங்கொட்டைகளை பிளந்து அதன் உள்ளிருக்கும் தவுனைப் பெறலாம் இதை வெட்டுவது சற்று கடினம்தான் வெட்டினால் கிடைப்பது தின்ன தின்ன திகட்டாத சுவையுடய தவுன் எங்கள் ஊர் பனை மரங்கள் அதிகம் கானப்படுவதால் எங்களுக்கு இதை சாப்பிட அதிகம் வாய்ப்பு கிடைக்கும்.
இப்போதைய தலைமுறையினருக்கு தவுனை குறித்து பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மருத்துவ குணமிக்க இந்த தவுன் திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் ராமச்சந்திரப்பட்டினம் பகுதியில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பனைஓலையால் உருவாக்கப்பட்ட பட்டையில், 20 துண்டுகள் வரையிலான தவுண் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்தளம்பாறை கிராமத்தில் பெரும்பாலானவர்கள் பனைத் தொழிலாளிகள். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பகுதியில் தவுண் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், ஜூன், ஜூலை மாதங்களில் குற்றால சீசன் நேரங்களிலும் பழைய குற்றாலம் பகுதியில் ஒரு பட்டை தவுனை ரூ.60-க்கு விற்க்பப்படுகிறது.
டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுனையும் கூடவே விற்பனை செய்கிறார்கள்.

Monday, 9 November 2015

தீமையென்னும் இருளகற்றி இன்ப ஒளியேற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
தீமையென்னும் இருளகற்றி இன்ப ஒளியேற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.
"தமஸோ மா ஜ்யோதிர்கமய' எனும் வேதவாக்கிற்கிணங்க, இருளிலிருந்து பேரின்பப் பேரொளிக்கு அழைத்துச் செல்லும் தீபாவளித் திருநாளுக்கு தத்துவங்கள், காரணங்கள், வழிபாட்டு நியதிகள், நீராடும் முறைகள் ஏராளம் உண்டு.
தீபாவளியின் முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்பவன் பௌமன்.
ஒருசமயம், இரண்யாட்சன் என்னும் அரக்கன் பூமியை கடத்திச் சென்று கடலுக்குள் ஒளித்துவைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, அந்த அரக்கனை அழித்து பூமியைக் கடலுக்குள்ளிருந்து மீட்டுவந்தார். அப்போது, பூமிதேவியின்மீது அவரது ஸ்பரிசம், அருள்பார்வை பட்டதால் உருவானவன்தான் பௌமன்.
அவன் வளர்ந்து பிராக்ஜோதிஷபுரம் எனும் நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தான்.
தனக்கு மரணம் ஏற்படவேண்டுமென்றால் அது தன் தாயால் மட்டுமே ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.
அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனுக்கு அசுரகுணம் தோன்றியது. அதனால் கொடுமைகள் பல புரிந்தான். தீய செயல்களில் ஈடுபட்டான். அவனது கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பகவானை பிரார்த்தித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார்.
நரகாசுரன் என்று சிறப்புப்பட்டம் பெற்றிருந்த பௌமனின் கொடுமைகளை அழிக்க பகவான் உறுதிகொண்டார். தன் மனைவி சத்யபாமாவுடன் தேரில் ஏறி போருக்குப் புறப் பட்டார்.
கடும்போர் நடந்தது. சத்யபாமா, கிருஷ்ணனின் சாரதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பௌமனின் ஆயுதத்தால் அடிபட்டதுபோல் பாவனை செய்து மயக்கமுற்று வீழ்ந்தார் கிருஷ்ணன். கோபம்கொண்ட சத்தியபாமா, பௌமன்மீது பாணத்தை எய்தாள். அடிபட்டு தரையில் வீழ்ந்த பௌமன், ""அம்மா அம்மா'' என்று குரல் கொடுத்தபடி சத்தியபாமாவைப் பார்த்தான். அவனது "அம்மா' என்ற குரல் சத்தியபாமாவுக்கு உண்மையை உணர்த்தியது. அடிபட்டு வீழ்ந்து கிடப்பவன் தன் மகன் என்பதை உணர்ந்தவள், தேரில் கிடந்த கிருஷ்ணனைப் பார்த்தாள். கிருஷ்ணன் சத்தியபாமாவைப் பார்த்தார். கிருஷ்ணரின் மாயா விளையாட்டினைப் புரிந்து கொண்டாள் சத்தியபாமா. தன் மகனை தானே கொன்ற துயரம் இருந்தாலும், தீயசக்தியாகத் திகழ்ந்த தன் மகன் இறந்த நாளை எல்லாரும் மகிழ்ச்சியோடு தீபங்கள் ஏற்றி கொண்டாட வேண்டுமென பகவானிடம் வரம் கேட்டாள். பகவானும் அப்படியே அருளினார். இது புராணச் செய்தி. இன்னொரு தகவலும் புராணத்தில் உண்டு.
தீர்க்கதமஸ் என்ற முனிவர், இயற்கை சூழ்ந்த இடத்தில் குடில் அமைத்து தன் மனைவி, மக்களுடன் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் அரக்கர்களாலும், காட்டில் வாழும் மிருகங்களாலும் அவரது தவத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டன. இதற்கு வழிகாண இறைவனை வேண்டினார்.
அப்போது அங்கே தவத்தில் சிறந்த சனாதன முனிவர் வந்தார்.
அவரை வணங்கிய தீர்க்கதமஸ் தனக்கு ஏற்படும் இடையூறுகளைச் சொல்லி வருத்தப்பட்டார்.
""தீர்க்கதமஸ் முனிவரே, உமது துயரங்களும் இன்னல்களும் நீங்க ஓர் அருமையான விரதம் உண்டு. அதனைக் கடைப்பிடித்தால் நீங்கள் நலமுடன் வாழலாம்'' என்றார் சனாதன முனிவர்.
துலா மாதமான ஐப்பசி மாதத் தேய்பிறையில் திரயோதசி நாளில், மகாபிரதோஷ வேளையில் பூஜை செய்து, எமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வழிபடவேண்டும். எமதர்மராஜனை மனதார பிரார்த்தனை செய்வதால் துன்பங்கள் நெருங்காது. அகால மரணம் ஏற்படாது. மேலும் தீவினைகளினால் நரகத்தில் துன்பப்படும் முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த எமதீபம் அருள்பாலிக்கும். மேலும் நம் வாழ்வு நலம்பெறும். எடுத்த காரியத்தில் தடைகள் ஏற்படாது'' என்றார். மேலும் சில தகவல்களையும் சொன்னார்.
நரகசதுர்த்தியான தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடவேண்டும். அன்று எண்ணெயில் திருமகளும், எல்லா நீர் நிலைகளிலும் கங்கையும் உறைவதாக சாஸ்திரம் சொல்கிறது. எனவே, எண்ணெய் தேய்த்து புனித நீராடினால் கங்கையில் நீராடிய பலனும், திருமகள் கடாட்சமும் கிடைக்கும். கங்கா ஸ்நானம் முடிந்ததும் புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்கள் படைத்து இறைவனை வழிபட்டால் எல்லாம் நலமாகும்.
இந்தப் புனித நாளில் அரப்புப் பொடியில் கலைவாணியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினி களும், புத்தாடைகளில் விஷ்ணுவும், பட்சணங் களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு தீபாவளி வழிபாடு குறித்த நியதிகளை சனாதனர் கூறியதைக் கேட்ட தீர்க்கதமஸ் முனிவரும் அவ்வாறே வழிபட்டு இறையருள் பெற்றார்.
மேலும் சில நிகழ்வுகள் தீபாவளித் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. இறைவனைப் பிரிந்து வருந்திய உமாதேவி, கேதாரகௌரி விரதம் கடைப்பிடித்து அவருடன் இணைந்ததும் தீபாவளி நாளில்தான்.
கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால் கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த் தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.
சாவித்திரி, எமனோடு வாதிட்டு சத்தியவானை உயிருடன் மீட்ட நாளும் இதுவே.நசிகேதன், எமலோகம் சென்று வரம்பெற்று திரும்பிய நாளும் இதுதான்.
வாமனரால் பாதாள உலகத்திற்கு அழுத்தப்பெற்ற மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களைக் காண பூமிக்கு வரும் நன்னாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
சமணர்கள் மகாவீரர் மகா நிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடு கின்றனர்.
தீபாவளி குறித்து இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
"தீபாவளியார்' என்றொரு துறவி கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். அப் போது, அவர் வாழ்ந்த பகுதியை சந்திரகுப்தன் ஆட்சி புரிந்துவந்தான்.
ஒருநாள் அந்தத்துறவி மன்னனைச் சந்தித்து, "ராமபிரான் இராவணனை வென்று சீதையை மீட்டுவந்த நாளை திருநாளாகக் கொண்டாடவேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். ஆனால், மன்னன் ஏற்கவில்லை. உடனே அந்தத் துறவி, மன்னனுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார்.
இதனால் கோபமடைந்த மன்னன் அந்தத் துறவியை கழுவேற்றிக் கொன்றுவிட்டான்.
அந்தத் துறவி மரணமடைந்ததிலிருந்து நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. அரண்மனை ஜோதிடர்கள் துறவியின் வேண்டுகோளை நிறைவேற்றினால் நாட்டில் சுபிட்சம் ஏற்படும் என்றனர். எனவே சந்திரகுப்தன் ராமபிரான், இராவணனை வென்ற நாளை திருநாளாகக் கொண்டாட ஆணையிட்டான். அதற்குப்பின் நாட்டில் மழை பெய்தது; நாடு சுபிட்சம் அடைந்தது. அந்தத் துறவியான "தீபாவளியார்' பெயரிலேயே, ராமரின் வெற்றித்திருநாளாக அனைவரும் கொண்டாடினார்கள். அதுதான் தீபாவளித் திருநாள் என்று ஒரு கதை உள்ளது.
தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து முதலில் விஷம் தோன்றியது. அதை உலகம் உய்யும்
பொருட்டு சிவபெருமான் உண்டார். அடுத்து பல பொருட்கள் தோன்றின. அதில் பாற்கடலிலிருந்து மகாலட்சுமியும் தோன்றினாள். ஸ்ரீமகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். பிறகு, தன்வந்திரியானவர், கீழ் வலது கையில் அட்டைப்பூச்சி, இடது கையில் அமிர்த (மூலிகை) கலசத்துடனும், மேலிருகைகளில் சங்குசக்கரத்துடன் தோன்றினார். இவரே ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். இந்நிகழ்ச்சி கள் எல்லாம் தீபாவளித் திருநாளில் நடந்ததாகப் புராணம் கூறுகிறது.
பகீரதன், தன் முன்னோர்கள் புனிதமடையவேண்டி தேவலோக கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த நாளும் தீபாவளித் திருநாள்தான்.
புனிதமான தீபாவளித் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி மனிதநேயம் வளர்ப்போம்.

தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள்.
அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான். அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.
எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.
தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்….உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். மகா லக்ஷ்மியும் பாற்கடலில் தானே அவதரித்தாள் !
கங்கா ஸ்நானம் செய்தபின் மகாலக்ஷ்மி பூஜையில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்க வீட்டில் செல்வம் பெருகும்;

தீபாவளித் திருநாளில் யமனுக்கும் சனிக்கும் மகிழ்ச்சி! யமனுக்கு மகிழ்ச்சி...!

தீபாவளித் திருநாளில் யமனுக்கும் சனிக்கும் மகிழ்ச்சி!
யமனுக்கு மகிழ்ச்சி...!
தீபாவளித் திருநாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன்.-யமன்
ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியின் வீட்டிற்கு யமன், சென்றார். யமனின் சகோதரியான எமி, தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள்.
இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது.
அப்போது, யமன், "இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு யமவாதனை கிடையாது' என்று வரம் கொடுத்தாராம்.
இந்தப் புராணக்கதையின் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவார்கள். சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக இது திகழ்கிறது.
மேலும் மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.
பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற் குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம்.
இந்த நாள் திரயோதசி. இதனை தன திரயோதசி என்றும் சொல்வர். இந்நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம்.
இந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர் கள் மட்டுமல்ல; யமனும் மகிழ்வானாம்.
யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.
சனி பகவானும் யமனும் சகோதரர்கள். எனினும் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள்.
தீபாவளித் திருநாளில் சனிக்கும் மகிழ்ச்சி...!
மனதளவில் யமனுக்கும் சனிக்கும் ஒத்துப் போகாவிட்டாலும், தீபாவளி அன்று மட்டும் அவர்கள் தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வது வழக்கம்.
சனி பகவானுக்குப் பிடித்தமானது கருப்பு எள். தீபாவளிப் பண்டிகை தினத்தில் காலையில் கோள்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும்போது, சனிக்கோள் தனக்குப் பிடித்தமான எள்ளுக்குப் புத்துயிர் ஊட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
அதனால், அன்று அதிகாலையில் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பூஜித்து மக்கள் தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளிப்பதால், சனி பகவான் அவர்களை வாழ்த்துவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. மேலும், அன்று நல்லெண்ணெயில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை.
எனவே, தீபாவளித் திருநாள் சனி பகவானுக்கு மகிழ்ச்சியூட்டும் நாள் என்பர். மேலும், தீபாவளிக்குப் பலகாரங்கள் செய்யும்போது, முறுக்கு தயாரிக்க மாவு பிசையும்போது அதில் கருப்பு எள் சேர்ப்பார்கள்.
அதேபோல எள் தட்டை என்னும் பலகாரத்திலும் எள் சேர்க்கப்படுவதால் சனி பகவான் மகிழ்ச்சி அடைகிறார்.
இதுபோல
கங்கா ஸ்நானம் செய்வதற்காக உகந்த நேரம்:
* காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை.
* காலை 4.30 மணிக்கு முன்னதாக குளிக்க கூடாது.
* சூரிய உதயத்துக்கு பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நீங்கள் பட்டாசு வெடித்த பின் குளிக்கலாமே.
குளிப்பது எப்படி?: நல்லெண்ணெயில் இஞ்சி துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலி மஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து
நன்றாக காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும் வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளியலுக்கு பின் தீபாவளி பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். சாப்பிட பிறகே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.
அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !

கிருஷ்ணர் வாழ்க்கை சொல்லும் பாடம்.... பிரச்சனை என்றவுடன் அதையே நினைத்து பூதாகரமாக வளர்த்து விடுகிறோம், என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

கிருஷ்ணர் வாழ்க்கை சொல்லும் பாடம்....
பிரச்சனை என்றவுடன் அதையே நினைத்து பூதாகரமாக வளர்த்து விடுகிறோம், என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.
பிரச்சனையும் பூதாகரமும் -
பால கிருஷ்ணரும், அவரது அண்ணன் பலராமரும், நண்பர் சுதாமரும் காட்டு வழியில் நடந்து வந்தார்கள். இருட்டுவதற்குள் ஊர் திரும்பி விடலாம் என்று அவர்கள் வேகமாக நடந்தாலும் இரவைத் தடுக்க முடியவில்லை. இரவு நேரத்தில் காட்டுக்குள் தங்கியாக வேண்டிய நிலைமை.
காட்டுக்குள் பூதம் ஒன்று இருந்தது. அது அங்கு இரவு நேரங்களில் வரும் மக்களுடன் சண்டையிட்டு அவர்களை அடித்து சாப்பிட்டுவிடும். சண்டையிடும் போது எதிராளியின் வலிமையும் பூதத்திற்குச் சேர்ந்து விடும். இந்த மூவரும் திடகாரமானவர்கள். பார்த்ததும் பூதத்திற்கு ‘இன்று நல்ல வேட்டை தான்’ என்று தோன்றியது.
மூவர் முன்பும் வந்து நின்றது. நான்கு பேரும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மூன்று ‘ஷிப்ட்’ போட்டு பூதத்துடன் சிறுவர்கள் சண்டையிட வேண்டும். யாரையாவது ஒருவரை பூதம் அடித்து வீழ்த்திவிட்டால், மூவரையும் சாப்பிட்டு விடும். ஒப்பந்தத்திற்கு மூவரும் ஒப்புக்கொண்டதும் முதலில் பலராமர் சண்டையிட்டார்.
பலராமர் வீரர் தான். ஆனால் பெரிதாக பூதம் வளரத் தொடங்கியதால், பலந்த காயத்தோடு சுதாமரை எழுப்பினார். அடுத்து சுதாமரும் ஆக்ரோஷத்துடன் போரிட்டார். இன்னும் நான்கு மணி நேரம் கழிந்தது. அவராலும் பூதத்தை வீழ்த்த முடியவில்லை. கடைசியாக கிருஷ்ணரை எழுப்பிவிட்டு சுதாமர் தூங்கிவிட்டார்.
சண்டையிட்டதால் பலராமர், சுதாமர் இருவருக்கும் நல்ல தூக்கம். மறுநாள், சூரிய ஒளி நன்றாகத் தெரிந்த பிறகு தான், இருவரும் எழுந்தனர். கிருஷ்ணர் உடலில் சிறு காயம் கூட இல்லாமல் தூங்கி கொண்டிருந்தார். இருவருக்கும் ஆச்சரியம். பூதம் என்னவானது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருவரும் கிருஷ்ணரை எழுப்பினார்கள். கிருஷ்ணர் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்தார்.
“பூதம் எங்கே?” என்று இருவரும் கேட்டார்கள். “பூதமா... அப்படின்னா” என்று பதில் கேள்வி வந்தது. இருவரும் வற்புறுத்தவே, கிருஷ்ணர் தனது அங்கியில் இருந்த முடிச்சை அவிழ்த்து, “இதுவா...” என்று கேட்டார். ஆம், அது பூதம் தான். கட்டை விரல் வடிவத்தில் இருந்த அந்த பூதம், விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிட்டது.
உண்மையில் நடந்தது இதுதான். சண்டையிடும் போது பெரியதாகும் பூதம், எப்போது சிறியதாகும் என்று யாரும் யோசிக்கவே இல்லை. பூதம் சண்டையிட கிருஷ்ணரைப் பார்த்தப் போது அவர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது போல இருந்தார். பூதம் உற்சாகம் குறையத் தொடங்கியதும் வடிவமும் சிறியதாகத் தொடங்கியது. கிருஷ்ணர் அப்போதும் அதைக் கண்டுகொள்ளாமல் போகவே கட்டை விரல் வடிவத்தில் சுருங்கிவிட்டது.
பெரிய தத்துவத்தை உணர்ந்து கொண்டது போல பலராமரும், சுதாமரும் கிருஷ்ணரைப் பார்த்தார்கள். எதுவும் நடக்காதது போல, புன்னகைத்துக் கொண்டிருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை. உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –

பெருந்தன்மை....
உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை.
உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –
ஆலயத்தின் முன்னால் இருந்தது அந்தஉண்டியல்.. செல்வந்தர்கள் வந்தார்கள் தங்கள் கைகளில் அள்ளி வந்திருந்த பணத்தை அதில் கொட்டினார்கள்.
தங்கள் பெருந்தன்மையை அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் எனும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது.
அப்போது ஒரு ஏழை விதவையும் வந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டே இரண்டு காசுகள் இருந்தன. அதைப் போட்டாள். அமைதியாய்க் கடந்து போனாள்.
அள்ளிக் கொட்டியவர்கள் இந்தப் பெண் கிள்ளிப் போட்டதை ஏளனமாய்ப் பார்த்திருக்கக் கூடும்.
ஓரமாய் அமர்ந்திருந்த கடவுள் சொன்னார். “இந்த உண்டியலில் அதிகமாய்க் காணிக்கை போட்டது அந்த ஏழை விதவை தான்.
எல்லோரும் தன்னிடமிருந்ததில் மிகுதியானதைப் போட்டார்கள். இவளோ தன்னிடம் இருக்கும் முழுவதையும் போட்டுவிட்டாள்” என்றார்.
பெருந்தன்மை என்பது பிச்சையிடுதல் அல்ல. பெருந்தன்மை என்பது தேவையில் இருக்கும் இன்னொருவரின் தேவையை நிறைவேற்றும் மனநிலையும், செயல்பாடும்.
ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது, ஒரு அன்பின் செயலுக்கான கதவு நம் முன்னால் திறக்கிறது என்பார்கள். அந்தக் கதவைக் கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடும்போது மனித நேயத்தை மறுதலித்தவர்களாய் மாறிவிடுகிறோம்.
தன்னலம் தாண்டிய இடங்களில் மட்டுமே பெருந்தன்மை கிளை விட்டுச் செழிக்க முடியும்.
எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறுவயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது. “தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?” மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன் “சரி” என்றான்.
அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், ”நான் எப்போது சாகத் துவங்குவேன் ?”.
நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள். தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள் ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான்.
தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இது தான் தன்னலமற்ற அன்பின் வடிவம் !
“நான்” என்பதை பின்னால் நிறுத்தி “நீ, உனது விருப்பம்” என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன.
ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.
நமக்கு என்ன கிடைக்கிறது என்பது நமது வாழ்தலின் அடிப்படையாகிறது. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதே நமது வாழ்வின் அடிப்படையாகிறது – என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
கொடுத்தல் என்பது வெறும் பணம் சார்ந்ததல்ல ! அது உங்கள் திறமை, நேரம், அருகாமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மன்னிப்பு, ஆறுதல் என அதன் முகம் வேறு படலாம். வகைகள் எதுவானாலும் வேர் என்பது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்வோம்.
பெருந்தன்மை என்பது வெறுமனே மனதுக்குள் சொல்லிப் பார்க்க வேண்டிய கவிதையோ, பாடலோ அல்ல. அது ஒரு செயலாக வெளிப்பட வேண்டிய உயரிய குணாதிசயம்.
ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும் போதும் பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் எனும் சிந்தனை மனதின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கட்டும். பெருந்தன்மையைக் கவனமாகச் செயல்படுத்தத் துவங்கினாலே அது நமது வாழ்வின் பாகமாக மாறிவிடும்.
யாருக்கு உதவி செய்தால் அவர்களால் திருப்பி உங்களுக்குத் தர இயலாதோ அந்த அளவுக்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவது உயரிய நிலை.
நமது வீட்டின் கதவுகள் ஏழைகளுக்காகவும் திறந்தே இருப்பது பெருந்தன்மையின் அழகிய நிலை. பெருந்தன்மை உடையவர்கள் தான் மனதளவில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கொடுப்பது என்பது இழப்பது அல்ல ! சேமிப்பது ! பிறருடைய அன்பையும், வாழ்வுக்கான அர்த்தத்தையும் !

தித்திக்கும் தீபாவளி திருநாளில்

தித்திக்கும் தீபாவளி திருநாளில் 
வண்ண மயமான ஆடைகள் உடுத்தி 
மகிழ்ச்சி பொங்க பட்டாசு வெடித்து 
பலகாரம் பகிர்ந்து உண்டு 
குடும்பத்தில் சந்தோசம் உண்டாக 
அனைவருக்கும்,என் மனமார்ந்த வாழ்த்துகள்...

Saturday, 31 October 2015

பழஞ்சோறும் சின்ன வெண்காயமும் நோய் தீர்க்கும் அருமருந்து... ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோத்து நீர் இரண்டையும் போக்கும்



பழஞ்சோறும் சின்ன வெண்காயமும் நோய் தீர்க்கும் அருமருந்து...
ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோத்து நீர் இரண்டையும் போக்கும்
எம் முன்னோர்களும், தற்காலத்தில் தாயகத்தில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும் சேர்த்துப் பிரட்டி சாப்பிடும் போது ஒரு தனி ருசியை உணர்ந்து கொள்ளலாம். கறி இல்லாத விடத்து அதனுடன் வெங்காயம், பச்சமிளகாய், ஊறுகாய், தயிர் என்பனவற்றை சேர்த்து திரணையாகவோ அல்லது நீர் ஆகாரமாகவோ அருந்தி உற்சாகமாகவும், தைரியசாலிகளாகவும், பலகாலம் சுகதேகிகளாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய. பழஞ்சோறும் தொட்டுக் கொள்ள வெண்காயமும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர்.
தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது புளுங்கல் அரிசி என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் சொல்லி விபரிக்க முடியாதவை.
பழந்தண்ணீராக கரைத்துக் குடிப்பதற்கு பதிலாக பழங்கறிகளுடன் குழைத்தி கவளமாக சாப்பிடுவதும் வித்தியாசமான ருசியைத் தரும்.

“உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” -



“உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” -
ஒரே வரியில் உயரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன்!
எப்படி நம்மை அறிந்து கொள்வது? ஒரு பிண்டமாகத் தான் பிறக்கிறோம்.
பிறந்த சில மாதங்களுக்கு நமக்கு ஒன்றும் தெரியாது. பிறகு அம்மா, அப்பா, தாத்தா பாட்டி, அத்தை மாமா என்ற உறவுகளை அறிகிறோம்.
அப்பொழுதும் நாம் யார் என்று நமக்குத் தெரியாது.
இன்னும் சிறிது காலம் போனால் நம் பொருள் எது என்று அறிந்து கொள்கிறோம்.
நம் விளையாட்டுப் பொருளை எடுத்தால் அடுத்தக் குழந்தையுடன் சண்டைக்குப் போகவோ அழவோ தெரிகிறது.
பள்ளி செல்லும் பருவத்தில் நம் பெயர், இன்னாரின் பிள்ளை ஆகிய விஷயங்கள் தெரிய வருகிறது.
அதன் பின் மெது மெதுவாக அகந்தை உருவாகிறது. நான் அடுத்தவனை விட வெளுப்பு, அவனை விட உயரம், அவனை விட பணக்காரன், அவனை விட அறிவாளி ஆகியவை நம் மூளையில் பதிகிறது.
இப்படியே வளரும் நாம் பல வருட வாழ்க்கைக்குப் பிறகு
ஆன்மிகத் தேடலின் துவக்கத்தில் நீ யார் சொல், உன்னை நீ முதலில் அறிந்து கொள்
என்று யாரவது சொல்லும் போது திடீரென்று விழித்துக் கொள்கிறோம்.

எது முழு ஆரோக்கியம்....? எதைத்தின்னா பித்தம் தெளியும்...!

எது முழு ஆரோக்கியம்....?
எதைத்தின்னா பித்தம் தெளியும்...!
* “நீங்க 8 மணி நேரம் தூங்கறதே இல்லையா…அந்த “டிவி’ பேட்டில சொன்னாரே கேட்கலையா, முதல்ல அதை செய்யுங்க!’
* “நான் அந்த பாரின் மேகசின்லே படிச்சேன்; சூப்பரா போட்டிருக்காங்க, அதை பாலோ பண்ணா ஒபிசிட்டி வரவே வராதாம்!’
* “காய்கறி, பழங்களை தான் சாப்பிடறேன்; அப்படியும் குண்டு கரைய மாட்டேங்குதே; என்னத்த செய்ய…’
* “காலைல எழுந்து ஒரு மணி நேரம் நடக்கிறேன்; போதாக்குறைக்கு அருகம் புல் ஜூஸ் குடிக்கிறேன்; ஆனா தொப்பை கரைய மாட்டேங்குதே…!’
இப்படி எல்லாம் பேசுவதும், புலம்புவதும் இப்போதெல்லாம் வாடிக்கை தான். அதற்கேற்ப, ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்களின் அதிரடி ஆய்வு முடிவுகள், நூற்றுக்கணக்கான வெப்சைட் தகவல்கள், “டிவி’ பேட்டிகள் , பத்திரிகை தகவல்கள்.
நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவைப் பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடைபிடிக்கும் விஷயங்களை நாம் கடைபிடித்தால் எக்குத்தப்பாக தான் இருக்கும்.
அதுபோல, யார் சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றி, உணவில், பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. பாட்டி வைத்தியத்தை இப்போது பலரும் வாய்க்கு வந்தபடி சொல்லி மக்களை குழப்பியும் வருகின்றனர் என்பதும் வேதனையான விஷயம்.
எது முழு ஆரோக்கியம்?
தினமும் சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதா? அதிக காய்கறி , பழங்களை சேர்த்துக் கொள்வதா? 8 மணி நேரம் தூங்குவதா? ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதா?
“ஆம், ஆனால் இல்லை’ என்கிறார் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர் சூசன்லவ்; “எல்லாம் சரி தான்; ஆனால், முழு ஆரோக்கியம் என்று ஆளாளுக்கு ஏதாவது செய்வதும், கடைபிடிப்பதும் தான் தவறாக இருக்கிறது. ஒவ்வொருவரும் முழு ஆரோக்கியத்துடன் தான் இருக்கின்றனர்; அவர்கள் உணவு, பழக்க வழக்கத்தில் தடம் மாறுவதை திருத்திக்கொண்டால் போதும்; மற்றபடி, அதிகபட்ச மகிழ்ச்சியான வாழ்க்கை தான் வாழ்கின்றனர். அதனால், ஆபீஸ் வேலை போல, உடற்பயிற்சி செய்வதும், காய்கறி, பழங்களை நேரம் தவறாமல் சாப்பிடுவதும் மட்டும் ஆரோக்கியத்தை தராது’ என்று தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
உதாரணமாக, தூக்கத்தை எடுத்துக்கொண்டால், 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதையே அமெரிக்க நிபுணர்கள் இன்னும் ஏற்கவில்லை. “ஒருவர் 5 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலோ, 7 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலோ தான் சிக்கல்; ஒவ்வொருவரின் உறக்க முறையும் வித்தியாசமானது; ஆனால், போதுமான அளவுக்கு தூக்கம் இருந்தாலே போதும்; வலுக்கட்டாயமாக திணிக்கவோ, உறக்கத்தை குறைக்கவோ கூடாது’ என்று சொல்கின்றனர் நிபுணர்கள்.
பாத்திரம் கழுவுங்க
நீங்க வீட்டை சுத்தம் செய்ய மனைவிக்கு உதவுவீர்களா? பாத்திரம் கழுவி தருவீர்களா? தோட்டத்தையாவது சுத்தம் செய்வீரா? சரி, இதை விடுங்க, கார், பைக்கையாவது விடுமுறையில் சுத்தம் செய்வீங்களா?
இப்படி வீட்டு வேலையில் ஒத்துழைப்பதே உடற்பயிற்சி தான். அதை விட்டு “ஜிம்’முக்கு சென்று உடல் குண்டு குறைய வேண்டும் என்று வியர்வை சிந்துவது சரியா? என்று கூட பலருக்கு தோன்றலாம்.
“ஆம், இதெல்லாம் கூட பயிற்சி தான்; இதனால் தான் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; நன்றாக தூக்கம் வரும்; நல்லா சாப்பிட தோன்றும். இதெல்லாம் தெரியாமல் காசு கொடுத்தால் தான் உடற்பயிற்சி என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது’.

Thursday, 29 October 2015

கொங்கு வெள்ளாளர் 60 குலக்காணியாளர்களின் குலமும் அதன் சிறப்புக்களும்....



கொங்கு வெள்ளாளர் 60 குலக்காணியாளர்களின் குலமும் அதன் சிறப்புக்களும்....
1 . அந்துவன் குலம் :
கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது. அந்துவன் செரலிரும்பொறை என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன் மண உறவு வைத்துள்ள சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய அவசியம் இல்லை. அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக் கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி, அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலணி இடங்களாம்.
2. ஆதிக்குடி:
முதற்குடியினர் இவர்களே. அந்துவன், ஆதி இரண்டுமே பழமையானகுடிகளாகும். ஆதியும் அந்தமும், அந்தாதிதொடர்களை அறிக. ஆதி முதன்மையானக் குடியாகும். இதன் காணிகள் கீரனூர், வெள்ளக்கிணறு, கோவை, அவிநாசி, கோபி,பாவனி ஆகிய வட்டங்களில் உள்ளன.
3 . ஆந்தைக்குலம்:
வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து குடி பெயர்ந்து வந்தார்கள் என்பது கற்பனை . திருச்செங்கோட்டினை முதன்மையிடமாகக் கொண்டவர்கள். மோருர்நாட்டை, சூரிய காங்கேயன் வென்றதால் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். வேணாடர்களுக்கு வெற்றியைத் தேடிதந்தனர்.காங்கேயன் அகிலாண்டபுரம் அகத்தீச்சுவரர் ஆலயத்தின் முதல் மண்டபத்தை ஆந்தையர் கட்டினர். ஆந்தை குலத்து குழந்தைவேலன் குலோத்துங்கனுக்கு தொடையல் மாலை அணிவித்தான். கொன்றையாறு முத்தூர் பருத்திப்பள்ளி , மாணிக்கம் பாளையம் , பட்டணம் , பாலமேடு , தென்னிலை , தோளூர், பிடரியூர்,திண்டமங்கலம் , திருவாச்சி , கோதூர், வெள்ளக்கோவில் , கூத்தம்பூண்டி, குற்றாணி, ஒருவங்குறிச்சி, முறங்கம், கரியாண் குலம், பொன்பரப்பு, கொற்றனூர் ஆகிய ஊர்களில் ஆந்தை குலத்தினர் காணி கொண்டனர்.
4 . ஆடர்குலம் :
"ஆடு ஆடு என்ப: என்கிறது புறம். ஆடு என்பதற்கு வெற்றி என்றே பொருள். வெற்றியே பெறுகின்ற ஆடர் குலத்தினர் கொங்கெங்கும் பரந்துள்ளனர். சென்னிமலையில் அதிகம் உள்ளனர்.
5 . ஈஞ்சன் குலம்:
கொங்கு நாட்டை வறண்ட பகுதிகளில், புறம்போக்கு நிலங்களில் ஈஞ்சி வளர்த்திருக்கும். மழை இல்லாத காலத்தில் கூட இது வளரும். அழியாமல் இருக்கும். எத்தகைய துன்பத்தையும் தாங்கி கொள்ளும் குடிமக்கள் ஈஞ்சன் குலத்தினர். ஈங்கூர் இவர்களின் முதன்மை இடம் . தம்பிரான்பட்டியம்மன் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாம். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர், கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் பிற காணியிடங்களாம்.
6 . ஓதாலன் குலம்:
"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாலர்கள்.வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது. அந்த அரசனுக்கு, சோழன் பொன்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40,௦௦௦ வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா ? சீதனம் கொடுக்க . வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர் . ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான். வெற்றிப்பெற்றான் . சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான் . வடுகநாதர் கோயில் , பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள் . சோழன் தோழன் பெருமாள் ஓதாலன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும் . கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி , பெருந்தொழவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாலர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.
7 .கண்ணன் குலம்:
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொங்கு நாட்டின் கண்ணாக விளங்கியவர்கள் கண்ணன் கூட்டத்தினர். கண்ணபெருமானை வணங்கியவர்கள் கண்ணன் குலத்தினர் . கண்ணன் ஆனங்கூர் காணிமுத்தையனை கொங்கு நாடதை விளக்கம் செய்தார், என்று அழகுமலைக் குறவஞ்சி கூறுகிறது. கொங்கு நாட்டை நன்கு பெருமையுடையதாக ஆக்கினான்.மூவேந்தருக்கும் எல்லை பற்றிய வேறுபாடு இருந்தது. முத்துச்சாமிக் கவுண்டர் மகன் நல்லத்தம்பி கவுண்டர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் வழக்குதிர்த்து வைத்தான். மூவேந்தரும் மன்றாடிப் பட்டம் கொடுத்து கண்ணிவாடி என்ற ஊரின் தலைமையையும் கொடுத்தனர். கண்ணிவாழ ,கண்ணம்பாழ ஆனது இவன் கண்ணன் குலத்தினன். கண்ணன் குலத்தினர் முதல் காணி கண்ணிவாடிதான் . பொன்பரப்பு என்ற ஊரிலிருந்து நல்லதம்பி அமராவதி ஆற்றைக்கடந்து நத்தைக்காடைவூரில் தங்கினர் .சூரிய காங்கேயன் பிறந்தான் . மோரூரில் காணி கொண்டு அதனை ஆட்சி செய்தான் .
இந்தவழி முறையில் வந்தவர் முத்துக்கவுண்டர் . இவர் இறந்தபோது மனைவியர் மூவரும் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினர்.தீப்பாய்ந்தம்மன் வீரமார்த்தியம்மன் என்றனர் .நாமக்கல் மோகனூர் சாலையில் இது உள்ளது . மோரூர் நாட்டுக் கண்ணன் குலத்தினர் நல்ல புள்ளியம்மனை வழிபடுகின்றனர் பதினாறு கோயில்களை இவர்கள் கட்டினர் . நன்றாகக் கருதி போற்றியம்மனை முளசிக் கண்ணன் குலத்தினர் வழிபடுகின்றனர் கண்ணிவாடி , காலமங்கலம் , கீழாம்படி,கொளாநல்லி, கோக்களை, சித்தோடு , உஞ்சணை, நசியனூர், தொக்கவாடி , மண்டபத்தூர் , காஞ்சிக்கோயில் , மணியனூர், மாவுருட்டி , சித்தாளந்தூர்,கூத்தா நத்தம், மோரூர், நல்லிபாளையம், மோழிப்பள்ளி, தகடைப்பாடி , மங்கலம் ஆகிய ஊர்கள் கண்ணன் குலத்தினரின் காணியிடங்களாம்.
8 . ஆவின் குலம் :
ஆவின் குலம், ஆவன் குலம் ஆனது . ஆ என்பதற்கு பசு என்று பெயர். ஆவினைப் பாதுகாபவர்கள் கொங்கு வேளாளர்கள் . இக்கூட்டத்தினர் காங்கேயத்தின் ஆநிரைகளை மிகுதியாக வளர்த்த பெருமையால் பெயர் பெற்றவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்களாம்.
9 . கணவாளன் குலம்:
கணம் என்பதற்குக் கூட்டம் என்றும், தொகுப்பு என்றும் பொருள் உண்டு . கணநாதர், தேவகணம்-கடவுள் கூட்டம் . ஆண் தன்மையுடன் நல்ல குணத்தைப் பெற்றவனே கணவன் ஆகிறான். ஆண் தன்மையின் தொகுப்பினன் கணவன். கண்ணபுரத்தை முதன்மைக் காணியாகக் கொண்ட கணவாளன் குலத்தினர் கொங்கெங்கும் பரவியுள்ளனர். அக்காலத்தில் ஊர்ப் பெருமக்கள் ஒன்று சேர்ந்து ஊரின் பொதுக்காரியன்களைச் செய்வர் . இவர்களையே பல்லவக் கல்வெட்டு கணப்பெருமக்கள் என்கிறது . கணநாதன் ஆன கணபதி - விநாயகன் மூலக்கடவுள் . முதன்மையான கூட்டத்தினரானவர்கள் கணவாளர்கள் ஆயினர் .திருச்செங்கோட்டில் பரசேகரி, இராசசேகரிவர்மன் கல்வெட்டுகள் கோயில் பணிகளை ஒன்று பட்டுச் செய்யும் பணியாளர்களை , கணப்பெருமக்கள் என்றனர். கணவாளன் குலத்து நல்லயக் கவுண்டன் தீரத்தைச் சதகநூல் போற்றும் . குன்றத்தூர் கோயில் பணிகளை யெல்லாம் கணவாளர்கள் செய்தனர் என அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.
10 . காடைக்குலம் :
கொங்கு நாட்டுப் பறவை காடை . பறவையின் பெயர்களை , குலப்பெயர்களாக வெள்ளாளர்கள் ஏற்றுள்ளனர். விலங்கு, பறவை, மரஞ்,செடி , கொடிகளைப் பாதுகாக்கும் ஒரே இனம் வெள்ளாளக் கவுண்டர்கள் தாம். இவர்களும் கொங்கின் குடி மக்களே . கரிகாலன் காலத்தில் காடுகெடுத்து நாடாக்கப்பட்டது. கொங்கு நாடு. எல்லாருந்தான் செய்தார்கள். காடு கெடுத்தவர் காடை ஆனது இல்லை . இவர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களும் இல்லை. காடல் காடை ஆனார் என்பதும் தவறு . மூவேந்தர் எல்லை சிக்கல் வந்த போது மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் காடை குலத்தினரும், சந்தி செய்து வைத்தனர். விஜயநகரப் பேரரசு காலத்தில்கோயில் சிற்ப மண்டபங்கள் தமிழகத்தில் நிறைந்தன. பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமை பெற்று இருந்தனர். பூந்துறைப் புட்பவன நாதர் கோயில் பணியைச் செய்தார்கள்.
"காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வன் "
மாடையும் தெய்வ அமுதும் இட்டான் என்று கொங்கு மண்டலச் சதகம் கூறும். வாரணவாசி என்பான் அன்னக்கொடி கட்டி உணவளித்தனாம். சூரிய , சந்திரன் இருக்கும் வரை இது நடக்க வேண்டும் என எண்ணினான்.
பூந்துறை காடைக் குலத்துத் தலைவர் நன்னாவுடையார் பட்டம் பெற்றார் . இவர்கள் கொலை புரிந்த நன்னன் வழியினர் அல்லர். நன்மை பல செய்த சிறப்பால் நன்னன் என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கரூர்ப்பசுபதி ஈசுவரர் கோயில் கலசம் குடமுழுக்கில் நீங்காதிருந்தது . இந்த நன்னா உடையார் வைத்தபின் நின்றதாம் . நல்ல குணமுடையோர் செயல் நன்றாகும் . நிலைக்கும் . மூவேந்தரும் நன்னா உடையார்க்கு , பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமையை வழங்கினர் . புகழ் நாவேற்றும் பூந்துறை நன்னாவுடையர் நால்வருக்கும் மூவேந்தர் சூட்டும்முடி என்ற பழம் பாடல் இதனை உணர்த்தும் .சோழர் ஆட்சியில் இவர் குறுநில மன்னராக இருந்தார் . காங்கேய நாட்டுக் காடையூரை உருவாக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு . கீரனூர் , பில்லூர், பெருந்துறை , கோனூர், ஆத்தூர்,பவுத்திரம் ஆகிய ஊர்களின் இவர்கள் காணிகளாம். பிற குலத்திற்கு இல்லாத சிறப்பு இவர்களுக்கு உண்டு. காணி கொண்ட ஊர்ப் பெயருடன் சேர்த்து கொள்கின்றனர். பூந்துறைக் காடை, மேலைசார் காடை,கீழைச்சார்க்காடை, எழுதுமத்தூர் காடை,கீரனூர்க் காடை, அரசூர்க்காடை, பறற்பினிக்காடை , ப @@@@@ த்திரக்காடை,வையப்ப மலைக் காடை , கூடச் சேரிக்காடை, ஆனங்கூர்க் காடை என்று 18 காடைக் குலத்தினர் உண்டு.
11 . காரிக்குலம்:
காரி என்பது கருமை நிறக் குதிரை என்று பொருள் கூறினார் . உ.வே.சா. ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்றார். காரிக்குதிரைகளை வைத்திருந்த சிறப்பால் மலையமான் காரி எனப்பட்டான் . ஓரி நிறக்குதிரை வைத்த சிறப்பால் அவன் ஓரி எனப்பட்டான். இவை காரணப் பெயர்கள் . காரி மழவர் குடியினன் . ஓரியுந்தான். காரி வழியினர் , காரிக்குலத்தார் அல்லர் . கருப்பின் கண்மிக்கது அழகு என்பர் . கருமை நிறமுடைய திருமால் காரி எனப்பட்டார் . சங்க காலத்தில் காரிக்கண்ணனார் என்ற கொங்கு வேளாளப் புலவர் இருந்தார் . அவர் வழியினரே காரிக் குலத்தவர் . உஞ்சணை, சேமூர், ஆனங்கூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி , நல்லிபாளையம், ஆகிய ஊர்களை காரிக் குலத்தினர் காணியாகக் கொண்டனர்..
12 . கீரன் குலம் :
சங்க காலப் புலவர்கள் பலர் நமது இனத்தினர். கீரன், நக்கீரன், கீரனார் இவையெல்லாம் இடு குறிப் பெயர்கள். கீர்+அன் என்று பிரித்தல் தவறு. பொருளற்ற வேர்ச் சொல் தமிழில் இல்லை . நாமக்கல் வட்டத்தில் உள்ள கீரனூர் தான் கீரம்பூர் ஆகியது . நக்கீரரை, அந்தணர் என்று தவறாகக் கூறுகின்றனர் . கபிலர் தன்னை `அந்தணன் புலவன்` என்று செல்வக்கருங்கோவிடம் அறிமுகபடுத்திக் கொண்டான் . கீரன் மரபிலே வந்தவர்கள் கீரன் குலத்தினர் . காங்கேய நாட்டுக் கீரனூர் இவர்களின் முதற்காணியாகும். நசியனூர், கோடத்தூர், கண்ணிவாடி ஆகிய பிற ஊர்கள் இவர்களின் காணி ஊர்களாம் .
13 . குயிலர் குலம் :
செம்பூத்து ,காடை போலக் கொங்கு நாட்டுப் பறவைகளில் குயில் முக்கியமானது . குயில் கூவித் துயில் எழுப்பும் கொங்கு நாடு இது . வெள்ளாளன் கோழி கூவி துயில் எழுமாட்டன் . வைகறையில் இறை கிணறு . நீர்ப்பாய்ச்சும் வேலை கெடும் . குயில்தான் வைகறையில்முதலில் கூவும் பறவை. 4 மணிக்கே குயில் குவும் . வேடர்கள் குயில், காடைகளைக் கொன்று உண்பர் . குயில் குலத்தினர் குயிலைக் குலதெய்வமாக மதிப்பர் . கொங்கு நாடெங்கும் பரவலாகக் குயிலர் கூட்டத்தினர் உள்ளனர் .
14 . குழையர்குலம்:
வந்புலத்தை புன்செய் என்பர். மென்புலத்தை நய்செய் என்பர். வெள்ளாளர்கள் வெள்ளத்தை அடக்கி வாய்க்கால் அமைத்து புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக்குகின்றனர் . வன்னிலத்தை நீர் விட்டுக் குலைத்து நன்செய் நிலமாக்குவர் இல்லை . நிலத்தை மருத நிலமாக்கும் குழையர் குலத்தினர் மருத நிலத்தினரே அன்றி நெய்தல் நிலத்தினர் அல்லர் .குழையரே குழாயர் எனப்பட்டனர். குலையர்களின் முதர்காணி கோயிலூராகும். இவர்களே சேர மன்னர்களுக்குப் படை உதவி புரிந்தனர் . கொங்கு நாடெங்கும் இவர்கள் பரந்துள்ளனர். சேர அரசனுக்கு வேடர் , வேட்டுவர் , துன்பம் செய்தனர் , கோவிலூர் குழையர்குல குமாரத்தினமால் வேட்டுவர்களை வென்று இலவந்திக் கோட்டையைப் பிடித்தான் . சோழ அரசன் இந்த வெற்றி விழாவை நடத்தினான் . ஒதாளன் பொன்னர் , சாத்தந்தை , குழையர் , செம்பர் ஆகிய ஐம்பெரும் வெளிர்களுக்கும் மன்றாடி பட்டம் கொடுத்தான். மன்றாடி என்பதற்குப் போரில் வெற்றி பெரும் வீர்ம்மிக்கவர்கள் என்று பொருள் . மன்றத்தில் வாதாடி வெல்வோரையும் மன்றாடி என்பர் .பழைய மன்றாடி போலும் என்று பெரிய புராணம் கூறும் . குழையர்களின் கோவிலூர் குளித்தலை வட்டத்தைச் சார்ந்தது . குழையர் குலத்தினர் வேத மன்றாடி பட்டமும் பெற்றார்கள் . பொங்கலூர் நாட்டின் புத்தரசன் கோட்டையை ஆட்சி புரிந்தனர் . காப்புளி அம்மனையும் , அங்கியம்மனையும் இவர்கள் வழிபட்டனர். கொங்கு பூந்துறை நாட்டில் விளக்கேத்தி என்ற இடத்தில் மாந்தரஞ்ச்சேரல் செய்த போருக்கு குழையர் உதவி செய்தனர். சேரல் கொளாநல்லியை அளித்தான் .இதில் குழவி அம்மனையும் மாரியம்மனையும் வைத்து வழிபட்டனர் . கொளா நிலையில் கோட்டை கட்டி கொடி, படை முரசோடு அரசு புரிந்தனர் .காவலியரை வென்று தென்கரை நாட்டையும் கைப்பற்றினர் . "காவல் குழார் கதித்த குலர் " என்று அக்காணிப்பாடல் கூறும் வேணாடர் இவர்களை வென்றனர் . அதன்பின் வடுகனூரிலும், பிற கொங்கு நாடெங்கும் இக்கூட்டத்தினர் சென்றனர் . வேள் அரசி குழையர் குழாயர் கொற்றனூர் , புத்தரசன் கோட்டை , குள்ளம்பாளையம் , கொளாநல்லி ஆகிய ஊர்களில் காணி கொண்டனர் .
15 . கூறைக்குலம் :
கொங்கு வேளாளர்கள் மணப் பெண்ணுக்கு கூறைப்புடவை எடுக்கின்றனர் . கூறை என்பது இங்கே மணப்புடவை என்பர் . புதுப்புடவை என்றும் , பட்டுப் புடவை என்றும் பொருள் தரும் .புதுமை, மணம்,பட்டு என்ற பொருளில் கூறை வருகின்றது . பட்டுப் புடவை கூறிட்டு நெய்வதால் அது கூறைப் புடவை ஆயிற்று . மணமிக்கப் புதுமையைப் படைப்போர் கூறை குலத்தினர் . வேணாட்டில் கூறை நாடு என ஒன்று உண்டு. அந்தக் கூறை நாட்டவரே கூறைக் குலத்தினர் என்றும் கூறுவர்.கூறைக்குலத்தவர் குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது தவறு . கொங்கு மைந்தர்களே அவர்கள் . கூறைக் கூட்டத்தினரின் காணி இடம் தலையநல்லூர். தெய்வம் பொன்காளியம்மன். தலைய நல்லூர் கொங்கு நாட்டு ஊர். ஈரோடு , நசியனூர் , பெருந்துறை , சேலம், திருச்செங்கோடு , நாமக்கல் , ராசிபுரம் , பகுதிகளிலும் கூறைக் கூட்டத்தினர் வாழ்கின்றனர் . சென்னிமலை முருகனுக்கு விளக்கிட்டு நானில் முதல் விளக்கு வைக்கும் உரிமை கொண்டவர்கள் கூறைக் கூட்டத்தினர் . தலைய நல்லூரில் பங்காளி சண்டை வந்தது . அதனால் சிலர் நசியனூர் அருகில் ஓலைப்பாளையத்தில் பொன்காளியம்மன் கோவில் கட்டி வழிபட்டனர் . மதுரை நாயக்கன் மன்னன் கூறைப்பாளையத்தில் குளத்து அமராவதிக் கவுண்டரை வரிவசூல் செய்ய வைத்தான் . 28 ஊர்களை இவர் பொறுப்பில் விட்டார். ஈரோடு, திருச்சி , அருகில் உள்ள கூர கூறைக் கூட்டத்தினர் அப்பத்தாள் , பாவாத்தாள், தெய்வங்களை வைத்தனர் . கூறைக் குல முத்தண்ணக் கவுண்டர் தீபாவளிக்கு எள் நெய்யும் புத்தாடையும் ஏழைகளுக்கும் வழங்கினார் என்று கந்தநாதசாமி சதகம் கூறுகிறது . 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாய்க்கன் காலத்தில் காறைக் கூட்டத்து தன்டிகைக் காளியண்ணன் , கொடுங்கூர் - கொடுமுடி மகுடேசருக்கு நாள்படி , நந்தாவிளக்கு , வழிபடு பொருள் கொடுத்தானாம் நந்தவனம் , அமைத்தானாம் . கொடுமுடிக் குறவஞ்சி கூறுகிறது. தலைய நல்லூர் , மின்னாம்பள்ளி , சோமூர், சோழன் மாதேவி , திருமால் நசியனூர் , வெள்ளியணை , மேச்சேரி , சௌதாபுரம், கொற்றனூர் பார்பதி, பிடாரியூர், மண்மலை , திண்டமங்கலம், நவணி,அரசிலாமணி , பொய்ப்புவியூர், காளம்பாடி, களங்காணி, ஆகிய ஊர்களை இவர்கள் காணியாகப் பெற்றுள்ளனர் .
16 . கோவேந்தர் குலம் :
கோ என்பதற்கு பல பொருள் உண்டு. கோ - அரசன் பசு, இறைவன் என்றெல்லாம் பொருள் உண்டு. கருங்கோ , பூரிக்கோ , என்ற அரசர்கள் இருந்தனர். கோ என்பதும் ஒரு பொருள் பன்மொழியாகும் . சிறப்பு குறித்தே ஒரு பொருள் பன்மொழி அமையும் . மீ மிசை , மேலே என்று பொருள் தரும் . ஒரு பொருள் பன்மொழியாகப் பதிற்றுப் பத்து கூறும் . பொங்கலூர் இவர்களின் முதல் காணியாகும். "கோவேந்தர் பனங்காடை நற்குல வேளிர் வாழ்வுற்று இருக்கு பொங்கலூர்" என்று அழகு மலைக் குறவஞ்சி கூறுகிறது. குடி மல்லம் மற்றொரு ஊராகும் . குடிமங்கை கோவேந்தர் குட்டிவேள் என்று அதே நூல் கூறுகிறது . நாளும் வழிபடுவோர் , செல்வந்தர் , மூவேந்தருக்கும் பல்லக்கு கொடுத்த பெருமை பெற்றவர்கள் , என்று அது போற்றும் . குடி மங்கலம் , இலக்காபுரம், நம்னேரி ஆகிய காணிகளை கொண்டவர்கள் இவர்கள் .
17 . சாத்தந்தைக் குலம் :
புறத்தில் நான்கு பாடல்கள் சாத்தன் பற்றி கூறுகிறது . கொங்கு நாட்டுப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் கொங்குக்கவுண்டர் . அந்துவன் சாத்தன் என்ற அரசனைப் பற்றி புறம் - 71 கூறுகிறது. பெரும் பெயர் சாத்தன் என்கிறது புறம் - 173 . ஒல்லையூர் கிழான பெருஞ்சாத்தனை
புறம் 242 கூறுகிறது . வல்வேல் சாத்தன் என்கிறது அது . சாத்தன் + தந்தை என்பதே சாத்தந்தை ஆக்கும். சால் + தந்தை சாற்றந்தை என்றே ஆகும். இவ்வாறு பிரித்தல் தவறு. கொங்கு மண்டல சதகம் சாத்தந்தையார் முதற்காணி அத்திபநல்லூராகும். சாத்தந்தையம்மன் இவர்களின் குல தெய்வமாகும் . சோழன் சார்பில் சரவணமகீபன் வேட்டுவர்களை வென்று அள்ளாளப்புரி, உகையனூர் ஆகியவர்களைக் கைப்பற்றினான் சோழன் . "உலகுடைய மன்றாடிப் " பட்டம் நல்கினான் . வீரராஜேந்திரன் காலத்தில் பிள்ளான் தேவன் என்ற சாத்தந்தைக் குலத்தானுக்கு கொடுகூர் ஆட்சியை அளித்தான் கொடுங்கூர். கொடுமுடியாகும் . பூந்துறை வேட்டுவர்களை வென்றனர் . சாத்தந்தையர். உலகபுரம், கனகபுரம் , தேவனாம்பாளையத்தையும் பெற்றனர் .சாத்தந்தைக் குலத்தில் கந்தான் காலிங்கராயன் ஊத்துக்குளி பாளையப்பாட்டின் முதல்வன் இவன். வெள்ளோட்டில் ஆட்சி நிறுவியவன். இவன் வீரபாண்டியனின் அமைச்சனாக இருந்தான். காலிங்கராயன் வாய்க்காலை அமைத்து பூந்துறை நாட்டை வழமை செய்தான் . அது இன்றும் காலிங்கராயன் வாய்க்கால் என்றே அவன் புகழ் பாடி ஓடிக்கொண்டிருக்கிறது . வெள்ளோடு முத்தையக் கவுண்டர் சந்திர சூரியர் உள்ளவரை சாத்தந்தைக் குலத்தவர் கம்பரின் தமிழுக்கு அடிமை என்று சாசனம் தந்தனர் . கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் சாத்தந்தைக் குலத்தவரே , வெள்ளோடு , நாகம்பள்ளி , கூகலூர், விஜயமங்கலம் , குன்றத்தூர் , அல்லலாபுரம், கூடலூர், உகையனூர், காங்கேயம், இலவமலை , பாலத்தொழு, கருவேலம்பாடி, காரைத்தொழு, அத்தாணி, அல்லிபுரம் , ஆகியன சாத்தந்தைக் குலத்தார் காணியூர்களாம்.
18 . செங்கண்ணன் குலம் :
கண்ணக்குலத்தார் வேறு, செங்கண்ணக் குலத்தார் வேறு, குளித்தலை வட்டரமான தென்கரை இராச கம்பீர வளநாட்டின் முதற்குடியாக செங்கண்ணன் குலத்தினர் வாழ்ந்தனர் . சோழ வேந்தன் ,செங்கணான் மரபினன் என்றும் கூறலாம். கடம்பன் குறிச்சி, சிதம்பரம் சிராமலை ஆகியன பண்டைய காணிகளாம். இக்குல லிங்கக்கவுண்டன் ஆதித்த சோழன் காலடியில் வைத்தான் . `பல்லவராயர் ` என்ற பட்டத்தை சோழன் வழங்கினான் .கொங்கு நாட்டின் ஆளுமையையும் அளித்தான் . காங்கேய நாட்டுக் காணியாள் வேல கவுண்டர் . மகளைத்தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் . சீதனமாகக் கங்கேயத்தைப் பெற்றனர். தலைநகரை மாற்றினர் .காங்கேயத்தில் அகிலாண்டபுரம் அமைத்து அகிலாண்ட வல்லி அம்மனை வைத்து வழிபட்டனர் .கோட்டை கட்டி ஆட்சி புரிந்தனர் . அம்மன் கோவில் கட்டினான் . செங்கண்ணர் கொங்கு நாட்டை ஆண்ட போது சோழனுக்குத் திறை செலுத்தினர் ( கப்பம் ) குறுநில மன்னர்களான இவர்கள் பல்லவராயர் என்ற பட்டம் பெற்றனர். செங்கண்ணர்க் குலத்தினர் மெய்க்கீர்த்தி இதைத் தெரிவிக்கும் . யானை தேர்ந்த கரிகால் வளவனுக்கும் சூட்டி பெருமை பெற்றனர் . மதன செங்கண்ண குலமால் - மதியூகி சிற்றழுந்தூர் சிங்கையம் என்ற வாலசுந்தரக் கவி கூறுகின்றார் . காங்கேயப் பல்லவராயன் மகனுக்கு மணி பதித்த வண்டியை , சங்கிராமம் சோழன் அளித்தான் . அச்சிறுவன் தமிழ்ப் புலவருக்கு அளித்தானாம், இதனை , கார்மேகக் கோனார் கொங்கு மண்டல சதகத்தில் கூறினான் . அகிலாண்டபுரம், கொடுமுடி, கண்ணபுரம் , கடம்பன் குறிச்சி , இவர்களின் காணிகளாம்.
19 . செம்பன் குலம் :
செம்பன் - செம்மன் இரண்டும் ஒன்று தான் . கொங்கு வேளாளர்களின் செம்மையான குண இயல்புகளையும், நடத்தையும் உடைய சான்றோர்கள். இவர்களது முதற்காணி பொங்கலூர் நாடாகும் . சோழ மன்னர்களின் படைத்தலைவர்களாக இருந்து செம்மையாக நடந்துள்ளனர் . சோழன் கருத்துரைப்படி சேரனுக்குத் துணையாகப் படை உதவி செய்தனர் . செம்பியன் என்ற பட்டம் பெற்றனர். செம்பியன் என்ற சோழர்களின் சிறப்புப்
பெயர் இவர்களுக்கும் வந்தது.
செம்பையூர்ச் செம்பன் கும்பலில் யானும் கூட்டென வரவே, செம்பன் காவலியர் செருக்கினை அடக்கித் தம்பணன் செம்பைத் தவத்தினிலிருந்தான் என்ற குறவஞ்சித் தொடரால் அறியலாம் . தொடுவாய்ப் போரில் ஓதாளன் , பொன்னர், சாத்தந்தை , குழையர் ,செம்பன் ஆகிய ஐந்து கவுண்டர்களும் சோழனிடம் பரிசு பெற்றனர். இவர்களது முதற்காணி , குளித்தலை வட்டத்து , செம்பாபுரி , பொங்கலூர் நாட்டிலும் இதே பெயரில் ஊரை அமைத்தனர். செம்பாதவரி , செம்பாபுரி அம்மன் செம்பாக் காளியம்மன் இவர்களின் தெய்வங்கள் இக்குலத்து அமராவதிக் கவுண்டன் கம்பருக்கு அடிமை முறி எழுதிக் கொடுத்தான் . காங்கேய நாட்டு பரஞ்சேர்வழி, கோவை கீரனம், மாதம்பட்டி , நாமக்கல் வட்டம் , மணலி ஆகிய இடங்களில் காணி கொண்டு கரியகாளியம்மனை வைத்து வழிபட்டு வருகின்றனர் . சிலர் அவினாசி அப்பரையும் , காஞ்சிக் கோயில் சீதேவி அம்மனையும் வணங்கி வருகின்றனர். பூந்துறை கருமலையாண்டவனும், நசியனூர் மதுரகாளியம்மனும் கூட இவர்களின் தெய்வங்களாகும் . கரூர் , திருவெழுந்தூர்,பரஞ்சேர்வழி, புலியூர், செம்பை முசிறி , குளித்தலை ஆகிய இடங்களையும் காணியுரிமை பெற்றுள்ளனர்.
20 . செம்பூத்தான் குலம் :
கொங்கு நாட்டுப் பறவைகளில் செம்போத்து கருமையில் செம்மையானது .வெயில் நுழை பறியாக் குயில் நுழை பொதும் பரில் வாழ்வது . கொங்கு நாடெங்கும் மிக்க காணிகளைப் பெற்ற இவர்கள் புகழ் பூத்த செம்பூத்தர் எனப்பட்டனர். இது செம்பக்குலத்திலிருந்து ஒழிய காரணம் பெயரன்று . போத்து, பூத்து என்ற சொற்பொருள் தேவையில்லை .செம்பூத்தான் குழந்தை வோன் அன்னமிட்டுப் புகழ் பெற்றான் என்று சதகநூல் கூறும். இரத்தின மூர்த்தி எழுதிய விறலி விடு தூதும் , நல்லக் குமாரக் கவுண்டர் சிறப்பும் உணர்த்தும் . தீரன் எனும் ,செம்பூத்தன்என்ற குலத்திலகன் தென்பொதிகை கும்பன் எனும் நல்லக் கவுண்டர் என்று கூறுகிறது . செம்பூதன், செம்பூத்தர் , செம்போத்து , செம்பூத்தை செம்பூற்று, என்பன எல்லாம் ஒன்று தான் .செம்பூற்றுதிபன் என்று கல்வெட்டுத் தொடர் உள்ளது. செம்பூத்தான் குலத்தார்க்குரிய காணியூர்கள் பற்றிய காணிப்பாடல்கள் உண்டு . அதில் கூறப்பட்ட ஊர்களின் பட்டியல் தரப்படுகிறது. இரணபுரம் மண்டபத்தில் அத்தனூர் வயிரூசி,குமாரமங்கலம் , அந்தியூர் , இராமக்கூடல் , காடனூர், கண்ட குல மாணிக்கம்பாளையம் , கீரம்பூர், தாராபுரம் , தென்சேரி, விதரி அத்திபாளையம், சேமூர் ,மொஞ்சனூர் , கூடச்சேரி, கருமானூர், புல்லூர், சிவதை, வாழவந்தி , உத்தம சோழபுரம் , புத்தூர் திண்டமங்கலம், வைகுந்தம் , முடுதுறை, கொற்றனூர் ஆகிய ஊர் செம்பூத்தனாரின் காணியூர்களாம். கொல்லிமலை சூழ்ந்து 88 ஊர்களுக்கும் செம்பூத்தார் காணியாளர்களாம்.
"இனிய ஒன் கொல்லிமலை எண்பத் தெட்டூருக்கும்
இறைவனே செம்பூதனே"
என்று காணிப்பாடல் கூறும்.
வேட்டம்பாடி , வேலூர் , காதப்பள்ளி , வீசானம்,தோகைநத்தம் , தாராபுரம், தம்மம்பட்டி , தாளப்பதி , கொங்கணாபுரம், வாழவந்தி , தோளூர் , தாளப்பறி , ஆகிய ஊர்களும் , செம்பூத்தான் குலத்தினர் காணியூர்களாம்.
21 . செல்லன் குலம் :
குழந்தையைக் செல்லமாக வளர்ப்பவர்கள் வேளாளர் குழந்தைபோல் ஆனிரைகளையும், பயிர்களையும் செல்லமாக வளர்பவர்கள் செல்லன் கூட்டத்தினர் ஆயினர் . செல்லாக் காசாக இல்லாமல் வேளிர்களில் செல்லுகின்ற செல்வர்களாக இருப்பவர்கள் இவர்களே . பூந்துறை இணை நாடான பருத்திப்பள்ளி நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் இவர்கள் . செல்லன் குலத்தினர் `பருத்திப் பள்ளி ` நாடார் என்ற பட்டம் பெற்றவர்கள் . இராசிபுரம் , திருச்செங்கோடு சாலையில் வையப்பமலையில் இருந்து எட்டாவது கிலோ மீட்டர் தொலைவில் பருத்திப்பள்ளி உள்ளது . திருமணி முத்து ஆற்றங்கரையில் உள்ளது இவ்வூர் . அதன் அருகில் இருப்பள்ளி ஊரில் செல்லன் குலத்தில் இளையாக் கவுண்டன் இருந்தான் .ஏழு ஆண்மக்கள் பிறந்தனர். வேறு ஊர்களுக்குச் சென்று குடிபுகுந்தனர் . இவர்களின் வழியினர் எழுகரை செவ்வாய் குலத்தினர் என்று அழைக்கப்பட்டனர் . திருச்செங்கோட்டில் மடமும், மண்டபமும் கட்டினர். செங்குன்றை மையமாகக் கொண்டு பருத்திப்பள்ளி ,இருப்புலி கொன்னையாறு , கோக்கலை, இடையாறு ,அனுமன்பள்ளி , எழுமாத்தூர் , ஆகியவை செல்லங் குலத்தினரின் ஏழுகரை நாடுகளாம். 16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தாராபுரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்கி மீட்டாள் தேவராயர் முதலிக்காமிண்டன் பட்டமும் , பருத்திப்பள்ளி ஆட்சி அதிகாரத்தையும் நல்கினான். இருப்பள்ளிப் பள்ளு இதனை கூறும் . இளையாக் கவுண்டரின் ஏழுமகன்களில் ஒருவன் இவன். இவனது வழியினர் தான் பருத்திப் பள்ளிச் செல்லங்குலத்தினர். இவர்கள் நாட்டார் எனப்பட்டனர் . 24 நாடுகளையும் ஆளும் உரிமை பெற்றவர்கள் இளையாக் கவுண்டர்களாக இருக்கின்றனர். எனவே ராசிபுர வட்டத்தின் நாட்டாக் கவுண்டர்கள் வேளாளக் கவுண்டர்களின் வழியில் வந்தவர்கள் என்பதற்கு இதுவே சான்றாகும் . காளிப்பட்டி நந்தர் கோட்டத்தைக் கட்டிய செல்லங்குலத்தார் காங்கேய நாட்டு வள்ளரையும் இரண்டாம் காணியாம்.
செம்பூத்தான் குலம் . கோத்திரம் , கூட்டம் என்பதெல்லாம் நன்கு தொன்மையானக் குலப் பெருமை உடையவர்கள் . இவர்கள் சங்ககால இலக்கியங்கள் ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் . ஈழத்துப் பூதன் சாத்தனார் . பூதஞ்சேந்தனார். நப்பூதனார் , மதுரைப் பூதன் இளநாகனார் . கோடை பாடிய பெரும்பூதனார் . சாத்தன் பூதனார் , பெரும் பூதன் கொற்றனார் முல்லைப் பூதனார் என்ற பெயர்கள் பூதன் என்பதற்குச் சான்றாகக் கூறுவர். இங்கெல்லாம் பூதன் என்ற சொல் ஐம்பூதத்து இயற்கைபோல் என்ற தொடர் பொருளையே குறிக்கும் . ஐந்து மூலங்களையே ஐம்பூதம் என்பர் . நிலம், நீர், தீ , வளி, விண்வெளி ஆகியன ஐம்பூதங்களாகும். உலகில் எல்லாம் இவைகளால் ஆக்கப்பட்டன செம்பூத்து , பறவை இடு குறிப்பெயர். செம்பூத்தான் குலத்தினர் வைத்துக் கொண்டனர். செம்போத்தைக் காண்பது நல்ல விரிச்சியாகும் . விரிச்சி - சகுனம் .இப்பறவை செம்போத்து , செங்காகம், செங்குயில், குக்கில் செண்பகம் , செண்பகப் பறவை என்று கூறப்படும் .
வேணாடர் தலைவன் பெரியான் கொற்றன் என்பவனுக்கு , செம்போத்து குலத்தான் அமைச்சனாக இருந்தானாம் . கொங்கு வளநாட்டுக்குப் பட்டியர் கூறும் , கொடுமணல் இலக்கியம் செம்பூதன் குலத்தைக் குறித்தது. அழகுமலைக் குறவஞ்சியும் , செம்யூர் என்று குறித்துள்ளது. வேளாளர் கீர்த்தியில் ,
"கற்புயர் செம்பூதத்தை குழற்" என்ற தொடர் உள்ளது .
கொங்கு நாடெங்கும் பரவியுள்ள செம்பூத்தான் குலத்தினர்க்கு 88 ஊர்கள் காணி ஊர்களாம் . குன்றத்தூர் (குன்னத்தூர்) அருகில் பெரிய நாச்சியம்மன் கோவில் செம்பூத்தாரின் குலதெய்வமாகும். கரூர் வட்டம் நொய்யல் ஆற்றங்கரையில் பெரிய சிறிய பொன்னாச்சியம்மன் கோவில்கள் அத்திபாளையத்தில் உள்ளது. சேரன் ஆட்டன் ஆத்தி ஆண்ட ஊர் இது. செம்பூத்தாரின் குல தெய்வம் இவை .பொன்னாச்சியம்மன் தலவரலாற்றை நாமக்கல் புலவர் தே.ப.சின்னசாமி அவர்கள் எழுதியுள்ளார் . பொன்னர் , சங்கர் மனைவியர்கள் தாம் பெரிய பொன்னாச்சியும் , சின்ன பொன்னாச்சியும் என்று எழுதியுள்ளார் . கீரம்பூர், எட்டிக்கையம்மனையும் , செம்பூத்தான் குலத்தினர் வழிபடுகின்றனர். 3000 குடும்பத்தினருக்கு எட்டுக்கையம்மன் குலதெய்வம் . இராசிபுரம் பாலைப்பாளையத்தில் ஆயாக் கோயிலைக் குலதெய்வமாகக் கொண்டனர் . சேலம் வட்டத்தில் கருப்பூர் வலசு , அத்தனூர் பனைப்பாளையம் , செம்பூத்தார்க்கு உரியது . பொங்கலூர் நாட்டில் வேடனூர், கரிய காளியம்மனையும் இவர்கள் வணங்குவர் . திருச்செங்கோடு பொன் மலை அருகில் மரப்பறையில் பொன்காளியம்மனை 500 செம்பூத்து குலத்தாரும் வழிபடுகின்றனர் வைகைப் பொன்மலை - வையப்பப் மலையில் உள்ள இறைவன் கோவில் அறங்காவலர் இவர்களே , வழிபாட்டில் முதல் மரியாதை இவர்களுக்குத்தான். கரூர் வட்டத்தில் காணி கொண்ட செல்லர்கள் கோட்டத்தூர், நன்செய் இடையாறு ஆகியவற்றில் கோவிலைக் கட்டினர். பூந்துறை நாட்டு அனுமன்பள்ளி சின்ன அம்மன், பெரிய அம்மன் கோவிலை இவர்களே காணியாகக் கொண்டனர். கோவையில் துறவலூர் அண்ணன்மார் சுவாமியையும் அவனாசி, பல்லடம், கோவை வட்டத்து செல்லங்குலத்தார் கோப்பாத்தாள் அம்மனை வணங்குவர். கோபி வட்டத்தார் நீளியம்மனையும், பருத்திப்பள்ளியின் அழகு நாச்சியம்மனையும் வணங்குவர். ஈரோடு வட்ட அஞ்சூரில் வாழ்வோர் செகுடன் தாழியில் உள்ள கோப்பாத்தாளையும், வீரமாத்திர அம்மனையும் வழிபடுவர். அத்திப் பெண்ணுக்கு மத்தியில் வீழ்ந்த பெண்ணுக்கு பணமும், நிலமும், செல்லங்குலத்தார் அளித்தனர். நாராயணபுரம் அங்காள பரமேஸ்வரிக்கு அனுமன் பள்ளி செல்லங்குலத்தினர் அறக்கொடை அளித்தனர். துறவலூர் செல்லன்குலத்து செம்பெரியாக் கவுண்டன் மரத்தைப் பிடுங்கி வேட்டுவப் படையை அடித்து வென்றானாம். உம்மாத்தூர் நஞ்சராக உடையார் வெற்றி பெற்ற கவுண்டனுக்கு `மரம்பிடுங்கி செம்பெரிச்சிக் கவுண்டன்` பட்டம் அளித்தான் . அண்ணமார் சுவாமிகோவில் முற்பாட்டுக்காரன் மதிப்பையும் அளித்தான் . நாமக்கல் , முத்துகாபட்டி, அனுமன் பள்ளி,ஆனந்கூர் இருப்புலி , கபிலர் மலை, காரவல்லி,கோடத்தூர், கொன்றையாறு,எழுமாத்தூர், வள்ளியறைச்சல், கோக்கலை, நன்செய் கிடையாது கருமானார் மணப்பள்ளி,துறவலூர், தாராபுரம், மலையன்பாளையம் ,ஆகிய காணி ஊர்கள் செல்லக்குலக்காணியாம் .
22 . செவ்வாயர் குலம் :
செம்மையான வாய்ச் சொல்லை உடையவர்கள் . உண்மையாக உழைப்பவர்கள் .சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கொள்கையாளர்களையே செவ்வாயர் என்றனர். சே - செம்மை - ஆயர் இடையர் சேவாயர் - செவ்வாயர் ஆதல்தவறு. முல்லை நிலத்து ஆமேய்க்கும் இடையர்கள் ஆயர் எனப்பட்டனர். ஆயர் எப்படி வெள்ளாளக் கவுண்டர் ஆகமுடியும்? வீர ராஜேந்திரச் சோழன் பொன்னிவாடியில் கல்வெட்டைச் செய்தான் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக் குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடையைக் குறித்துள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை , கொங்குப் புலவராக்கினறாம் . இதை பொன்னிவாடிப் பட்டயம் கூறும். சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகிய ஊர்கள் காணிகளாம்
23 . செவ்வந்திக் குலம் :
பறவைகளையும் , பூக்களையும் , குலப்பெயர்களாகக் கொங்கு கவுண்டர்கள் வைத்தான் .செவ்வந்திப் பூவை இவர்கள் குலப்பெயராகக் கொண்டனர். காத்தாங்காணி செவ்வந்திக் குலத் தீத்தாக் கவுண்டன் கண்ணகுலத்து செங்கோட்டு வேலப்பக் கவுண்டனுக்கு, பெண் கொடுத்தான் . சீராக கோவில் உரிமை , முப்பாட்டு உரிமை கொடுத்தானாம் . அவ்வூர்ப் பட்டயம் இதைக் கூறும் . சேலம் மாவட்ட இலக்கியப்பாளையம் அருகில் இருப்புலிப்பெருமாள் கோயில் கல்வெட்டு செவ்வந்திக் குலத்தினர் அப்பகுதில் வாழ்ந்ததாகக் கூறும். இருப்புலி ,கொன்றையாறு (கொன்னையாறு) தேவனாங்குறிச்சி செவ்வந்திக் குலத்தாரின் காணியூர்களாம்.
24 . சேரன் குலம்:
சேர, சோழ பாண்டிய மன்னர்கள் கொங்கு நாட்டை அவ்வப்போது ஆண்டனர் . சேர நாட்டுக்குள் கொங்கு நாட்டை அடக்கி 250 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள் சேரர்கள் . அந்துவன் சேரர் வழிமுறையில் கலந்தவர்கள் அந்துவன் குலத்தினர் . கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். அவன் மாமன் இரும்பிடர்த்தலையர். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர் . சேர, சோழ பாண்டியர் மூவருக்கும் பெண் கொடுக்க முடிசூட, வாள்கொடுக்க, உரிமை பெற்றவர்கள் கொங்கு வேளாளர்கள். வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்தவர்களையே கொங்கு நாட்டு ஆட்சி நடத்த விட்டனர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றது புறம். தென்னாட்டுத் தமிழர் தாம் . சேர, சோழ பாண்டியர்கள் சேர மரபினர் கொங்கு நாட்டு வேளாளர்களுடன் நெருங்கிய தொடர்பினர் . பண்டைய நாளில் ஓரினமாக இருந்தவர்கள் . "கன்னடமும் , தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்துக்கும் எழுந்து ஒன்றுபல ஆயிடினும்" என்றார் மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை . கொங்கு வேளாளர்களே சேரமரபினர் ஆகி இருக்கலாம்
1 . உரின யசேரனுக்கும் , கொங்கு வேளாளர் வெளியன் வேண்மான் மகள் நல்லினிக்குப் பிறந்தவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ( பதிற் I )
2 . பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் நார் முடிச்சேரல் ( பதிற் II )
3 . வேளாவிக் கோமான் தேவிக்கும் , நார் முடிச்சேரனுக்கும் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுக்கும் சேரலாதன் ( பதிற் III )
4 . அந்துவன் குலத்துப் பொறையன் பெருந்தேவிக்குப் பிறந்தவன் செல்வக்கடுங்கோ வழியாதான் ( பதிற் IV )
5 . செல்வக்கடுங்கோவிற்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை ( பதிற் V )
6 . குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செல்லைக்கும் பிறந்தவன் இளஞ்சேரலிரும் பொறை.
கடைச்சங்க கால எட்டுச்சேர அரசர்களில் ஆறுபேர் கொங்கு வேளாளப் பெண்களின் மக்கள் ஆவர் என்பதை பதிற்றுப் பத்து கூறுகிறது .இவர்களைப் பாடியவர்கள் பலரும் கொங்கு வேளாளர்களே . அதனால் சேரன் குலத்தினர் சேர மரபினர் எனலாம் . குளித்தலை வட்டம் மதில்கரைச் செல்லாண்டியம்மன் சேரர் குலத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலை ,கொற்றனூரிலும் கட்டினர். இந்தச் சேரன் குலப்பெண் கணவன் இறந்ததும் தீப்பாய்ந்து உடன் கட்டை ஏறினாள் . வீர மாத்தியம்மன் தீப்பாய்ந்தம்மன் நாமக்கல் நகரிலும் உள்ளது . சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர் . காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர் . நீலாம்பூர் தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாக கொண்டனர்.சேரன் செல்வக் கடுங்கோவை கபிலர் சந்தித்த இடம் . நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர் . கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர் ,கோனூர், சிற்றாளத்தூர்,நாமக்கல் , சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம் .
25 . சேடன் குலம் :
சேடன் குலத்தினர் கொங்கு நாடெங்கும் பரவியுள்ளனர் . காடையூர் இவர்களின் முதற்காணியூராகும். நெகமம் , பொள்ளாச்சி வட்டங்களில் மிகுதியும் உள்ளனர் . ஒரு கதையுண்டு. காடையூரான் பொருளந்தைக் குலத்தாருக்கு வெள்ளையம்மாளை மணஞ்செய்து கொடுத்தான். தன் மகளுக்கு கால்காணி நிலத்தைச் சீராகக் கொடுத்தான் . பின்னாளில் உடன் பிறந்தார்கள் அதனைப் பிடுங்கிக் கொண்டனர். வெள்ளையம்மாள் நாட்டார் சபையில் முறையிட்டாள். இருமுனையில் சத்தியம் செய்தாள். கழுமுனை அவள் கையில் ஒட்டியது . பாண்டியன் வெள்ளையம்மாளுக்கு வேப்பமாலை அணிவித்துச் சிறப்பித்தான் .சகோதரர்கள் வெள்ளையம்மாளிடம் நிலத்தைக் கொடுத்து வெளியூர் சென்றனர் . இதைக் கார்மேகக் கோளார் சதகத்தில் பாடியுள்ளார் ."காடையில் சேடக்குலத்தான் மகள் மொய்யக் கழுவறைந்து, தெய்வப் பேறு பெற்றாள்" என்கிறது.
26 . செங்கண்ணிக்குலம்:
செங்கண்ணக் கூட்டத்தில் பிரிந்த பங்காளிகள் செங்கண்ணிக்குலம் ஆயினர். மருதுறையில் வாழ் அன்பு மிகு சொல் குண்ணியை என்ற சாசனத்தொடர் குறிக்கும் . செங்கண்ணி, செங்குண்ணி எல்லாம் ஒன்றுதான் . செம்மையான குணங்கொண்டவர்கள் என்பது பொருள். காங்கேய நாட்டுப் பகுதிதான் மருதுறை! கரூர், நாமக்கல் , நெகமம் ,காங்கேயம் ,மருதுறை, மேழிப்பள்ளி, (மோழிப்பள்ளி) கரூர்ப்பட்டி வட்டூர், நல்லிபாளையம் ஆகிய ஊர்கள் , செங்கண்ணியரின் காணி ஊர்களாம். செங்குன்றியர் குலமும் இதில் அடங்கும்.
27 . சோமன் குலம் :
சோம சுந்தரன் சிவபெருமான் .சிவபெருமானை வணங்கும் சோமன் குலத்தினர், கொங்கு நாடெங்கும் பரவலாக இருப்பதால் முதற்காணி என்று சொல்வதற்கில்லை .
28 . சிலம்பன் குலம் :
சிலம்பு பற்றி புறம் - 36 , 85 , 116 ,158 ஆகிய நான்கு பாடல்களில் கூறப்பட்டுள்ளது . "செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர் .... தன் ஆண் பொருநை வெண்மணல் சிதைய .... கழங்கிடல் தெற்றி ஆகும். ( புறம் - 36 ) என்று ஆலந்தூர் கிழார் கரூரில் பாடினார். இதை ஆடிய மகளிர் கொங்கு வேளாளப் பெண்களே ".
"அச்சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் பொருந்தி நின்று . ( புறம் - 85 ) என்று நக்கண்ணையார் பாடினார் ".
" பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் மயில் எழுந்து ஆலவும் ( புறம் - 116 ) என்று கபிலர் பாடுகின்றார்" . கொங்கு நாடு மலை கெழுநாடு. சிலம்பு என்பதற்கு மலை என்று பொருள் . மலை நாட்டு வேளாளர் சிலம்பின் குலத்தினர் ஆயினர். "கழைவளர் சிலம்பின் முதிரத்துக் கிழவன் இயல்தேர்க் குமண " ( புறம் - 158 ) என்று பெருஞ்சித்தரனார் பாடினார் . பாடியவர், பாட்பட்டவர் இருவரும் கொங்கு வேளாளக் கவுண்டர்களே . நாடும் கொங்கு நாடே .சிலம்பன் குலத்தினர் . சிலம்பன் என்றே பெயர் வைத்துக் கொள்கின்றனர். நாமக்கல், சிவிகையூர் , செங்கோடு இவர்களின் காணியூர்களாம்.
29 . சேரலன் குலம் :
மாந்தரஞ்சேரல் கரூர் வஞ்சி மாநகரை மற்றும் சேலத்தைக் தலைநகராகக் கொண்டான். இவனையே சேரலன் என்றனர் . சேரன் + தலம் - சேரலம் ஆகியது . சேரலத்தைக் காணிக்கையாகக் கொண்ட வேளாளர்கள் சேரலன் எனப்பட்டனர் . சேரர் தலம் - சேரலமாகி - சேலம் ஆனது. சேரலன் குலத்தினர் சேலம் , நாமக்கல் வட்டத்தில் உள்ளனர் .
30 . தனஞ்செயன் :
தனம் + செல்வம் - எர்ச்செல்வமே செல்வம். பிற செல்வம் அழியும் என்று வேளாளர் புராணம் கூறும். ஏர்த்தொழில் செய் செல்வம் சேர்பவன் தனஞ்செயன் எனப்பட்டான் . தனஞ்செயன் குலத்தினர் கொங்கு நாடெங்கும் பரந்து, பிரிந்து ,வாழ்வதால் காணி குறிப்பிடவில்லை .
31 . தூரன் குலம் :
தூர் என்பது நெல்பயிர் திரண்டிருப்பது . கிணறு ஏரியில் நிறைந்த சேற்றை அகற்றுவதற்கும் தூர் எடுத்தல் என்கிறோம் . வேளாண்மையில் தூர் கட்டி நெற்பயிர் வளர்த்தால் விளைச்சல் பெருகும். வரப்புயர நெல்உயரும் என்றார் அவ்வையார் . உழவுத்தொழிலை உழைப்பால் மிகுதிப்படுத்தி அதிக நெல் விளைச்சல் புரிந்தோர் தூரன் கூட்டத்தினர். துவரை தூரன் ஆகாது . கபிலர் பாடிய புறத்தில் வேளிருள் புலிகடிமால்,இருங்வேள் ஒருவன் , இவன் கொல்லிமலை அடி வாரத்தை ஆண்டவன். கபிலர் இங்கு வந்து பாரி மகளிரை மணந்து கொள்ளக் கேட்டார். இன்று சிவன் ஆண்ட ஊர் புலிக்கரட்டுப் புதூர் எனப்படுகிறது . இவனது புலிக்குத்திக்கல் சேலம் தொல்பொருள் துறையில் உள்ளது.
துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச் சேர்ந்த ஊர் அது . கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர் . ஈரோடு, வெள்ளக்கோயில் , நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன் பாடியே இவர்களின் முதர்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது . துவரை குலம் தூரன் குலம் ஆகாது . வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர் . தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தான் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பனி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.
காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு , தூரன் குலத்தினரில் குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும் , வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும் ,மேழிப்பள்ளி , அண்ணாமாரையும் , குமாரமங்கலம் அங்காளம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர்.
குமாரமங்கலம் , பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர் , நல்லூர் கல்யாணி , காங்கேயம் ,பொன்முடி, தாழம்பாடி , அய்யம்பாளையம் , கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி , பச்சாபாளையம், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம் .பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர் . கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தவர்.
32 . தோடைக்குலம்:
குருவாத்துங்கனிடம் தோடைக்குலத்து காகுத்த நல்லான் தன் எடைக்கு எடை பொன் கொடுத்துத் தானம் செய்வித்தானாம். சோழன் இவனைப் பாராட்டினான் என்று வாலால சுந்தரக் கவி கூறுவர் இவர்களின் முதர்காணி பாப்பினி குலதெய்வம் பச்சை நாயகி அம்மன் . பேரூர் பட்டீசுவரன் பச்சை நாயகி அம்மன் கோவில் இவர்களின் தெய்வமாம் . பழநி, கூத்தம் பூண்டி அத்தனூர் அம்மன் கோயிலும் தோடைக் குலத்தார்க்கு காணி உரிமையுண்டு . கஞ்சிக் கோயில் , பாப்பினி கன்னிவாடி , காலமங்கலம் , முழசி, கொளாநல்லி, நசியனூர் ,, மணியனூர் , கொன்றையாறு, தகடைப்பாடி , ஆலந்தூர் , பட்டணம், கலங்காணி ஆகிய ஊர்கள் இவர்களின் காணியூர்களாம் .
33 . நீருண்ணியர் குலம்:
ஊருணி கிணறு, அதுபோல் நீருண்ணியர்குலம் உள்ளது. ஊரில் உண்ணு நீர் கிணறு தோண்டி வைத்த சிறப்பால் இந்த வேளாளர்கள் நீருண்ணியர்குலம் எனப்பட்டனர். "மகிழ்வுடன் திகழ்பரவு நீருண்ணியை..." ஊரார் மகிழ்ந்திருக்க நீருணி அமைத்த இவர்கள் காங்கேய நாட்டு வள்ளியரச்சில் முதற்காணி கொண்டவர். ஆவும், மாவும் உண்ண நீர் வைத்தவர்கள். பொங்கலூர் நமன் ஏரியில் காணி கொண்டவர்கள் . பொன்னி வாடிப் பட்டயம் நீருண்ணியர் கருப்பக் கவுண்டர் குறிக்கப்பட்டார்.
தாரமங்கலத்தைக் கெட்டி முதலிகள் ஆண்டனர். 1274 இல் வாழ்ந்த வீர ராமநாதன் காலக்கல்வெட்டு நீருணி இளையான் முதலாக ஆறுபேர் .இளமீகரமுடைய நாயனாருக்கு தேவதானாம் செய்தானாம். 1261 இல் கொள்கை ஆண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு நீருணி இளையான் நல்ல உடையப்பன் பெற்றோர் பெயரில் சதுர்வேதி மங்கலம் `அமைத்தானாம் `. சதுர்வேதி மங்கலத்தில் செய்ய பெருமாள் ஏறி நீர் பாயும் நான் கெல்லையும் இறையிரியாகக் கொடுத்தான். பாப்பிணியும், வள்ளியறைச்சலும் நீருண்ணிக் குலத்தார் காணிகளாகும்.
34 . பனங்காடைக் குலம்:
காங்கேய நாட்டுக் காடை ஊரை உருவாக்கியவர்கள் காடைக் குலத்தினர். இவர்கள் பல ஊர்களுக்கும் சென்றனர். ஆத்தூர் , பவித்திரம், கீரனூர், பெருந்துறை ஆகிய ஊர்களுக்கும் சென்றனர். அதனால் ஆத்தூர், காடை, கீரனூர் காடை என்று பதினெட்டுக் காடையகப் பிரித்தனர். கொங்கேங்கும் பனைமரம் உள்ளது .எந்த வறட்சியையும் தாங்கி இருக்கும் பனை மரங்களை , புன்செய் நிலா வரம்புகளில் வைத்து வளர்ப்பது ஒரு கலையாகும் . பனமரத்துப்பட்டி , பனமரத்துப்பாளையம் ஆகிய ஊர்களை அறிந்தால் இதை உணரலாம். பனம்பூ சேரரின் அடையாளப் பூ ! பனைவளர்த்தக் காடையர் பனங்காடை ஆயினர்.
"ஆத்தூரில் இருக்கும் கொங்கு வேளாளரில் பனங்காடைக் கோத்திரம் , முத்து நஞ்சப்பக் கவுண்டர் மகன் சோழியப்பக் கவுண்டர் " என்று நல்லோர் 15 ஆம் நூற்றாண்டு பட்டயம் கூறும். எழுமாத்தூர் பனங்காடைக் குலத்தான் பொங்கியாக் கவுண்டன், சேவூர் வீரவிக்கிரம சோழியாக் கவுண்டரின் அவிநாசி, திருமுருகன் பூண்டி ஆகிய ஊர்களை 5 ,௦௦௦ பொன்கொடுத்துப் பதிவு செய்தானாம் . அவ்வூர்ச் சாசனம் இதைக் கூறும்.
மதுரை நாயக்கன் மன்னன் 24 ,௦௦௦ பொன் வரிகட்ட ஆணை சோழியாண்டருக்கு அனுப்பினான். இயலாமையால் விழித்தான் . எழுமாத்தூர் பனங்காடை பொங்கியாக் கவுண்டன் 5 ,௦௦௦ பொன்கொடுத்து உதவினான் . மருதுறை ஆந்தையன் செல்லப்பக் கவுண்டன் 5 ,௦௦௦ பொன் கொடுத்தான் . தக்க சமயத்தில் உதவியவர்களுக்கு இரு ஊர்களை பதிவு செய்து கொடுத்தான் . பனங்காடையர் பற்றி மெய்க் கீர்த்தி பற்றிப் பட்டயம், சிறப்பிக்கும். உறையூர்ச் சோழன் இராசேந்திரன் எழுமாத்தூர் பனங்காடை குலத்து முத்துக் காங்கேய கவுண்டர் மகன் பொன் கவுண்டருக்கு முடிசூட்டி வைத்தானாம் .சேலம் மாவட்டப் பனங்காடையர் ஒன்று சேர்ந்து செங்கோடு அர்த்த நாரீசனுக்கு நந்தவனம் அமைத்து மலரும், பாலும் கொடுத்தார்கள் என்று பூங்காப் பட்டயம் கூறும் .கொன்றையாற்றுப் பனங்காடையர், தனிப் புலவர்களை வைத்துக் கொண்டனர் . `பனங்காடை மெச்சன்` புலவன் பெயராகும். முதற்காணி பனை நிறைந்த கரூராம் ! சோழியம்மனை அவர்கள் வணங்கினர் எழுமாத்தூரார் பனங்காடையர் பொன்காளியம்மனை வழிபட்டனர். ஆத்தூர், எழுமாத்தூர், மருதுறை , கொடுமலை , பண்ணறை, முகுந்தனூர், திருமுருகன் பூண்டி ,அவிநாசி, பனங்காடையர் காணிகளாம்.
35 . பண்ணைக்குலம்:
கொங்கு வெள்ளாளன் ஆட்டுப்பண்ணை ,மாட்டுப் பண்ணைகளை வைத்துப் பாதுகாத்தவர்கள் . பெரிய நிலத்திற்குரியவன் பண்ணைக்காரன் எனப்பட்டான் . வயலில் பணி செய்வோன் பண்ணை ஆள் எனப்பட்டான் . பெருநிலக் கிழாரானவர் பண்ணைக் குலத்தினர் ஆயினர். பண்ணைக் குலத்தினர் சோழனுக்கு படைமக்களாக இருந்தனர். குளித்தலை வட்டம் ஆந்திப நல்லூரில் பண்ணையார் வாழ்ந்தனர் என்று வாலசுந்தரக் கவி கூறுவார். இருவருக்கு கொங்கு மண்டல சதகம்பாட இந்தப் பண்ணையார் உதவினராம். பண்ணைகோன் வெண்ணெய் நல்லூர் என்று நூற்பாயிரம் கூறம். பண்ணை குலத்தோர் பண்ணைக்கீரை உண்ணார். பண்ணைகுல சடையப்ப வள்ளல் இராமாயணம் பாடக் கம்பருக்கு உதவினான் . நாமக்கல் மாவட்டம் ஏழூர் மும்முடிச் சோழமண்டலம் எனப்பட்டது. இதுதான் பண்ணைக் குலத்தாரின் முதற்காணியூராகும் . ஏழூர் நாடு தலைநகராக இருந்தது . 3 ஊர்கள் அதில் அடங்கியிருந்தது . பல ஆண்டுகள் இதனை ஆண்ட காரணத்தால் நாட்டார் எனப்பட்டனர். ஏழூர் நாட்டுக் கவுண்டர்களின் குலதெய்வம் பண்ணையம்மன், கொங்கு 24 நாட்டார்களும் இவர்களை முன்னிலைப் படுத்தியே மணச் சடங்கைத் துவக்கினர். நாட்டுக்கல் வழிபாடு இதன் காரணமாகவே வந்தது. வெளியன் குலத்தார் ராசிபுரத்தில் இருந்தனர் . மோரூர் கண்ணன் குலத்தார், பருத்திப் பள்ளி செல்லன் குலத்தார் ஆகியோர்களுக்கு வெளியன் குலத்தார் பெண் கொடுத்தனர் ; கட்டினர். பொருளந்தையர் ஏழூரை ஏற்றதால், பண்ணையர் கொங்கெங்கும் பரவினர். பண்ணைக் குலத்துக் காலிங்கராயன் அவன் பெயரால் கால்வாய் அமைத்தான் . ஈரோடு வட்டத்தில் ஏழூர் , கீரம்பூர், அனுமன் பள்ளி , கரூர் , தும்மங்குறிச்சி, தாழம்பாடி , வாழவந்தி , ஆகிய ஊர்கள் பண்ணைக் குலத்தாரின் காணியூர்களாம்.
36 . பதரியர் குலம் :
பதரிக் குலத்தாரின் காணியூர் , காங்கேயம் , அகிலாண்டபுரம் ஆயிஅம்மன் இவர்களின் குலதெய்வம் . காங்கேய நாட்டுக்காணிப் பாடல் , `சாத்தந்தை, பதரி ..... ` என்று பட்டியலிடும் .
பதர் இன்றி நெல்விளைப்போர் பதரியர் எனப்பட்டனர் . பதர் இன்றி நெல் விளைவிப்போர் குறைவு . அதனாலோ என்னவோ பதரியர் பரவலாகச் சிலரே உள்ளனர் . கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஊர் காங்கேயம் . அதனைக் காணியூராகப் பெற்றவர்களே !
37 . பயிரன் குலம்:
பயிர் செய்து வாழ்வோன் பயிரன். கொங்கு வேளாளர்களில் பயிர்த் தொழிலையே நம்பி வாழ்கின்றவர்கள் . புறநானுற்றில் "நெடுமான் நெற்றின், பைம்பயறு உதிர்த்த " ( புறம் - 297 ) என்று தொடர் வருகிறது .பைம்பயறு - பாசிப்பயறு .பயறு வகைகளைச் சிறப்பாகப் பயிரிடும் குலத்தினர் பயிரன் குலத்தினர் என்றும் கூறலாம் . `படியளந்துண்ணும் பயிரன்` எனும் தொடர் இவர்கள் புகழ் கூறும் . அன்னக் கொடி உடையவர்கள் என்பர்.
சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டை ஆண்டான் . உத்தமச் சோழன் படையெடுத்து வந்தான். சேர , சோழ, பாண்டியர்களுக்கு இந்தக் கொங்கு நாட்டின் மீது எப்போதும் நாட்டம் இருக்கும் . கொங்கு நாடு காரணமாவே , மூவேந்தர் பகை தொடர்ந்தது . பாண்டியன் தோற்றான் . காரையூர் சர்க்கரைப் பாண்டியனுக்கு உதவியாகப் போர் மேல் சென்றான் . சோழன் தோற்றான் . அதனால் மகிழ்ந்த பாண்டியன் கரியான் சர்க்கரைக்கு `உத்தமக் காமிண்டன் ` என்ற பட்டம் கொடுத்தான் . காரையூர் , வல்லியரைச்சல்,முத்தூர் , மருதுறை ஆகிய ஊர்களை ஆளும் உரிமை நல்கினான் . வேப்ப மாலை சூட்டினான். மீன் கொடி தந்து காங்கேய நாட்டுப் பட்டக்காரர் ஆக்கினான். `நல்லசேனாபதி ` என்ற விருது அளித்தான் , அதுமுதல் 29 வழிமுறையினர் பாண்டி மன்னர்களின் படைத் தளபதிகளாக இருந்தனர். திறை செலுத்தினர் . பாண்டியர்கள் சார்பில் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தார்கள் . `பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்கள் ` பேரும் புகழும் பெற்று கொங்கினத் தலைவர்களாகவும் இருந்தனர் . பயிரன் குலக்காளியண்ணக் கவுண்டர் சிவபெருமானையே வணங்கினர். மேல் பூந்துறை நாட்டிற்கும் , காங்கேய நாட்டிற்கும் முல்லைப் போர் இருந்தது . காங்கேய நாட்டாரும் , பூந்துறை நாட்டாரும் வஞ்சியங் குளம், சேனாபதி பாளையம் அருகில் சண்டை நடந்தது. பயிரன் குலத்தார் போரிட்டு காங்கேயத்தை தக்க வைத்தனர் . ஆனூர் , பவுத்திரம் , பாலத்தொழுவு , பழையக் கோட்டை , பரஞ்சேர்வழி , வெள்ளோடு வெள்ளியணை, கொன்றையாறு , கொடுமணல் , நாமக்கல் ஆகியன பயிரன் குலத்தாரின் காணி ஊர்களாம் .
38 . பதுமன் குலம் :
கொங்கு 24 நாடுகளில் ஒன்று வையாவி நாடு. திருஆவின் குடிநாடும் இதுவே கொங்கு வேளாளக் கவுண்டன் பதுமன் என்பவன் இதனை ஆண்டான். சேரர்களுக்கு இவன் தன் மகளைக் கொடுத்தான். என்று பதிற்றுப் பத்து கூறும். உதியன் சேரலாதவனுக்கும் வெளியன் வேண்மாள் நல்லினிக்கும் இமயவரம்பன் பிறந்தான் . இமயவரம்பன் வேளாவிக் கோமான் பதுமன் தேவியை இரண்டாம் மனைவியாகப் பெற்றான் . அவன் தம்பியும் , வேளாவிக் கோமான் பதுமன் தேவியை மணந்தான் . பல்யானைச் செல்கேழுக் குட்டுவன் அவன். (பதிற் - 111 ) பல்யானைச் செல்கேழுக் குட்டுவன் மக்கள் இருவர் . நார்முடிச்சேரல் , ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் . ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குச் செல்வக் கடுங்கோ பிறந்தான் . செல்வக்கடுங்கோவிற்கும் வேளாவிக் கோமான் பதுமன் மகன் பதுமன் தேவிக்கும் பெருஞ்சேரலிரும் பொறை பிறந்தான். ( பதிற் - 111 ) பெருஞ்சேரலிரும் பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செல்லைக்கும் இளஞ்சேரல் இரும்பொறை பிறந்தான் ( பதிற் - 111 ) . எனவே ஐந்து சேரமன்னர்கள் வெள்ளாளக் கவுண்டர் பெண்களின் பிள்ளைகள் ஆகின்றனர்.
சங்க காலப் புலவர்களில் பதுமனார், பெரும் பதுமனார் ஆகிய இருவர் பதுமன் கூட்டத்தினரே என அறிகிறோம் . காங்கேய நாட்டிற்கு , பதுமன் குலத்தாரும் காணியாளர்களாம் . காணிப்பாடல் பதுமனை நான்காவதாகக் கூறுகிறது . காங்கேயத்தை முதல் காணியாக்கிக் கொண்ட பதுமந்தன் வையாவி நாட்டில் அமர்ந்தனர். ஆயி அம்மன் , செல்லியம்மன் , அண்ணன்மார் , நாட்டராயன் ஆகிய தெய்வங்களை வணங்குகின்றனர்.
39 . பனையன் குலம் :
கொங்கு நாடெங்கும் பனைமரங்கள் ஆளுமை செய்கின்றன. அதனை வளர்பவர்கள் வெள்ளாளர்கள் . அதை அடக்கி , கல்லும், நுங்கும் தருவோர் சாணார்கள் . இது இல்லாத காணிகளே இல்லை . பண்ணை பாராதவன் பனையைப் பார்ப்பானாம் . கொங்கு நாட்டுப் பழமொழி இது . பண்ணை பயன்தராத போது பனை பயன் தந்து காக்கும் . ஆணைப்பாழி பனையன் குலத்தாரின் முதற்காணியூர் , அருங்கரை , பாலமேடு , மொஞ்சனூர், பழைய பாளையம் , சாணார்பாளையம் , இவர்களின் பிற காணியூர்களாம் .
40 . பாண்டியன் குலம் :
பண்டு , தொன்மை குறிக்கும் சொல், பாண்டு என்பது ஒரு நோய் . கொங்கு நாட்டுக் கொடுங்கூர். கொடுமுடி திருப்பாண்டிக் கொடுமுடி எனப்படுகிறது . பண்டி - வயிறு , பண்டிதர் நோய், தீர்ப்போன் புலவன் என்று பொருள் தரும். பாண்டியன் செய்வான் என்ற கலித்தொகைத் தொடர் எருது பூண்டி வண்டி ஓட்டுவான் என்று பொருள் தரும் . கொங்கவள் பாண்டியஞ் செங்கதிர் என்று பெருங்கதை கூறும். மாலையணிந்த மணித் தொழில் பாண்டியம் என்றும் கைபுனை பாண்டியன் கட்டளை பூட்டி என்றும் கொங்குவேள் கூறுகின்றார் . வேப்பம்ப்பூ மாலை அணியும் பாண்டியர் வேறு. பாண்டு பூட்டி உழுகின்ற பாண்டியர் வேறு . இது இடுகுறிப்பெயர் காரணம் தேட வேண்டாம் பொள்ளாச்சி , சத்தியமங்கலம் ,நசியனூர் , புன்னம் , கொடுமணம் , கொங்கணாபுரம், பாலமேடு ஆகிய ஊர்கள் பாண்டியர் குலத்தினர் காணியூர்களாம் .
41 . பில்லன் குலம் :
பல்லான் நன்னிரை புல்லரும் துகள் (பதிற் - 89 -5 ) பசும்புல்வளர்ந்து கானம் முழுதும் கவினுற அதனை ஆர மேய்ந்த ஆனினம் தருக்கி விளையடுகின்றனவாம் . இதனால் புல்லெருதுகள் என்றார் . பல்லான் நல்நிறை புல்லிடம் மேய்ந்து செருக்குடன் விளையாடுகின்றன . புல் என்பது தான் பில் ஆயிற்று . புல்லன் குலம் என்பதே சரி பில்லைக் கூட்டம் என்றும் கூறுவர் .
பழைய கோட்டை மன்றாடியார்களுக்கு உதவி செய்த புல்லன் கூட்டத்தினர் `தொண்டை மன்றாடி` என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் . `வள்ளியறைக்கல் பில்லர்களிலே தொண்டைமான் மன்றாடிக் கவுண்டன் ` என்று பழையக் கோட்டைப் பட்டயம் கூறுகிறது . மாந்தரஞ் சேரலுக்கு இந்தப் புல்லன் கூட்டத்தினர் படை உதவி புரிந்தனர் . மாந்தை புகி என்ற ஊரை உண்டாக்கி சாத்தன் கோயில் கட்டுவித்தான் . இந்த நாட்டராயன் கோவில் முதன்மைக் காணியாளர்கள் புல்லன் கூட்டத்தினரே , ஈரோடு தொண்டீசன் கோவில் கல்வெட்டு விக்கிர மன்னன் என்ற பில்லன் கூட்டத்தான் நிலக்கொடை அளித்தானாம் . புல்லன் குலத்தார் வீரபாண்டியன் காலத்தில் பல அறச்செயல்கள் செய்தார்கள் என்றும் கல்வெட்டு உள்ளது. வள்ளியறைச்சல் , சத்தியமங்கலம் , சேமூர் ,அனுமன்பள்ளி , இளம்பிள்ளை , கொன்றையூர் ஆகியன புல்லன் குலத்தார் காணியூர்களாம் .
42 . பவழக்குலம் :
தாமரை புரையும் காமாசேவடி, பவழத்தன்ன மேனி வேலங் கொடியோன் முருகனுக்கு, பவழத்தன்ன செம்மையான குணத்தைக் கொண்டவர்கள் பவழக்கூட்டத்தினர் . தாராபுரம் இவர்களது முதன்மைக் காணி. பழனி நறையனூர், கீரனூர் ஆகியனவும் காணி ஊர்களாம் . வானவராயர் சிறப்பினை இவர்கள் பெற்றனர் . வானவராயர் கொங்கு நாட்டின் சிலப் பகுதிகளை ஆட்சி செய்தனர் . 13 ஆம் நூற்றாண்டின் விஜய நகரப் பேரரசு தமிழகத்தை ஆண்டது. பழனிப் பகுதியை ஆண்டவாலராசா கீரனுரை வென்றான் . போரில் தோல்வியுள்ள பவழக்குலத்தினர் . கொங்கெங்கும், பரவினர். அங்கித் தொழவு இரண்டாவது காணியூராகும் . காளியம்மனை வணங்கும் இவர்கள் வேட்டுவப் போரில் செல்லங்குலத்து செம்பொறிச்சிக் கவுண்டருக்கு உதவி செய்து வெற்றி பெற்றனர். பொங்கலூர் நாட்டில் குடிபுகுந்த பவழக் கூட்டத்தினர் அங்கும் காணி கொண்டனர் . கொடு வாயிலில் பவழக் குலத்து வீரன் மாண்ட செய்தியைக் கல்வெட்டுக் கூறுகிறது . சர்க்கார் சாமக் குலத்தில் பவழக் குலத்தினர் காணி கொண்டனர் . பொன் வானவராயக் கவுண்டர் பெயர் கோயில் பாளையத்துக் கல்வெட்டில் இருந்தது. அன்னூர் கல்வெட்டு வானவராயநல்லூரைச் சிவனுக்குப் பவழக் குலத்தான் கொடுத்ததாகக் கூறுகிறது. அங்கித் தொழுவு , கொடுவாயில் , சாமக்குளம், கீரனூர் பேரூர் , கோட்டை மேடு , பழனி தென்பள்ளி , ஆகிய ஊர்கள் இவர்களின் காணிகளாகும்.
43 . பூசன் குலம் :
பூசல் என்பதே பூசன் ஆனது , போர் செய்வதையே பூசல் என்றனர். புறத்துறையில் `வெட்சி நிரை கவர்தல் ` என்று வெட்சித் திணை கூறும் . இதில் பூசல் மாற்று என்ற துறை உள்ளது . ஆநிரை கவர்ந்தார் பூசல் செய்கின்றனர். இதை மாற்றி ஆநிரை மீட்போர் பூசல் செய்வர் . மீட்டல் கரந்தைத் துறையாகும் .`புலம் பெயர்ந்தொளித்த கலையாப்பூசல்` (பதிற் - 44 -12 ) மோகூர் மன்னன் பூசலை செங்குட்டுவன் அடக்கினான் .
`கை சுமந்தாலும் பூசல் மாதிரத்து ` (பதிற் - 31 - 3 )
`சிறை பொள் பூசலில் புகன்ற ஆயம் ` (பதிற் - ௩௦ - 19 ) சிறுபோர் பூசல். பெரும்போர் அமர் ` என்கிறது இலக்கியம் .
போரில் வல்லவர்கள் பூசன் குலத்தினர். மாதிரத்துப் பூசல் செய்பவர் .களப்பிரர் தொண்டை மானை சிறை வைத்தனர் .பூசன் குலத்தினர் போரிட்டுச் சிறைத் தகர்த்து விடுதலை செய்தனர் . தொண்டைமான் என்ற பட்டத்தை பெற்றனர் வாலச்சந்திர கவி இதனைக் கூறினார். வேணாவுடையாக்க கவுண்டர் தென்கரை ஆண்டபோது அச்சுதராயன் மகன் வண்டியில் வந்தான் . காடை , பூச, சேரன் ஆகிய கூட்டத்தினர் எதிர்த்தனர் . 12 ஆண்டுகள் சிறை வைத்தான் .பூசன் குலத்தார் எதிர்த்துக் கேட்டனர் . ராயர் வீரத்தைப் பாராட்டி `மேதகு ` என்ற பட்டம் அளித்தான் . சொல்லாண்மை திகழ் பூசர் என்று அழகுமலைக் குறவஞ்சி கூறும். மூலனூர் பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை அளித்தார்களாம் . ஆவணம் கூறுகிறது . மூலனூர் , புதுப்பை, பகுவாய், அழகாபுரி பெற்றப்பள்ளி , தொண்டாம் முத்தூர் ஆகியன பூசன் குலத்தாரின் காணியூர்களாம். பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம் .
44 . பூந்தந்தைக்குலம் , பூந்தன் குலம் :
பூந்தன் குலத்தின் பிரிவுதான் பூந்தந்தைக்குலம் . பூதந்தகுலம் இது காங்கேயக் காணிப்பாடல், சிங்களப் பூந்விதயை என்கிறது. வள்ளியங்காவில் காணி பெற்ற பூந்தை குலத்தினர். காங்கேய நாட்டில் பல ஊர்களுக்கும் சென்றனர். துடுப்பதில் வாரனாசிக்கவுண்டர் செய்த வீரசாகசச் செயல்கள் அவ்வூர் கல்வெட்டு கூறும். பேராற்றல் மிக்க வீரனுக்குப் பெயர் பூதருதல் வழக்கம். பூந்தந்த குலத்தினர் அவ்வாறு பூ பெற்ற சிறப்பினை பெற்றதால் பூந்தன் குடி எனப்பட்டனர். முத்தூரும் இவர்களது காணி.
45 . பெரியன் குலம் :
செயற்கரிய செய்வர் பெரியர் என்பது குறள் . கொங்கர்களில் செயற்கரிய செயல் செய்த காரணத்தால் இவர்கள் பெரியன் கூட்டத்தினர் ஆயினர். கவுண்டர்களில் முதன்மையானவர்கள் . மன்றாடியார் மரபு வழி குறிப்பில் ஒரு செய்தி உள்ளது . கொங்கு 24 நாட்டுக்கும் வேணாடர் பெரிய வீட்டுக்காரனாக இருந்த படியினாலே என்று குறிப்புக் கூறுகிறது .காலிங்கராயன் குறிப்புரையில் இதேபோல் குறிப்புண்டு . "கங்கா குலதிலகன் , காதாள சிரோன்மணி , மேழிக் கொடியோன் , மாளிகை மார்பன் 48 ஆயிரம் கோத்திரத்திற்கும் , முதன்மையாயிருக்கும் பெரிய குலத்தான் " என்று இவர் புகழ் கூறுகிறது . வேணாவுடையார் மரபியல் , " 48 ஆயிரம் கோத்திரத்துக்கும் பெரிய கோத்திரம், தொண்டை மண்டலம் ,79 வளநாடு 24 கோட்டத்துக்கும் பெரிய வீடு " என்று கூறுகிறது .
பெரிய குலத்தாரின் முதற்காணி குளித்த நலசிவன் மலையாகுமி பெரிய குலத்தலைவன் கரிகாலனை வளர்த்து அரசனாக்கிய நாமக்கல் வட்டத்து இரும்பிடாத் தலைவர் . பெரிய குலத்தலைவராம்.இரத்தின மூர்த்தி பாடிய விறவிடுதூது. மூவேந்தர் கூடி முதல் வீடன் ஆம் எனவே சீரார் முடிசூட்டி என்று பெரிய குலத்தைப் பாராட்டுகிறது . சோழன் கரிகாலன் தன் மகள் ஆதிமந்தியை அத்திபாளையம் சேரன் ஆட்டன் அத்திக்குப் பெண் கொடுத்தான் . தன் மாமன் இருப்பிடம், தலைவரையும் , பெரியகுலத்தானையும் அனுப்பினான் . பெரிய குலத்தினர் , கொங்கு நாட்டில் ஆதிக்கம் செய்தனர். காங்கேய வெள்ளக்கோயில் , கொடுமுடி , தாராபுரம், மூன்றும் அடங்கிய முத்தூர் கோட்டத்துக் தொண்முதிர் வேளிர்கள் ஆட்டன் அத்தி மீது போர் தொடுத்தனர். கரிகாலனும், இரும்பிடர்த்தலையனும் துணைப் படை அளித்து அத்தியை வெற்றிபெறச் செய்தனர். இரும்பிடர்த் தலையரை வேணாட்டிற்கு அரசனாக்கினான் சேரன். அவன் மரபினர் வேணாடர் என்று அழைக்கப்பட்டனர் . பொறோர் ஏறும் உரிமை நல்கினான் சோழன் . மகளிர்க்கு பொன்னூஞ்சல் ஆடும் உரிமை அளித்தான் . சங்காராண்டம்பாளையம் வேணாவுடையார்கள் இந்த வழி முறையினரே .இவர்களின் மெய்கீர்த்திகள் சிறப்பானவை. காகம், விளக்கேற்றி, கொற்றநூர், முருங்கைத் தொழுவு, சோழ மாதேவி, மேகர மாதேவி, சிவியம்பாளையம் ஆகியன இவர்களின் தொன்மையான காணி ஊர்களாகும். ஊதியூர், பாலத்தொடு, குளுகமன்குடி, குறிச்சி, பெருமாநல்லூர் ஆகிய ஐந்தும் ஆம்.
46. பெருங்குடிக் குலம்:
கொங்கு குடியில் பெருமைக்குரிய குடியினர் இவர்கள் என்பதால் பெருங்குடி எனப்பட்டனர். செயற்கரிய செய்தவர்கள் என்பதால் பெருங்குடியர் ஆயினர். பெருங்கலம், பெருங்கிளை, பெருஞ்சிறப்பு பெருமகன் , பெருமான், பெருவிரல் ,பெரும் பெயர் என்ற தொடர்கள் பெருமைபற்றி வந்தனவாம் . கொங்கு நாட்டுக் குடிமக்களில் பெருங்குடியர்களே மிகையாவர்.
47 . பொன்னர் குலம் :
பொன்குறை நாட்டிற்கும் கொங்கு வேளாளர்களுக்கும் தொடர்பில்லை . பொன் அமராவதி , பொன் பரப்பு, பொன் களத்தூர் ,பொன்னம்மாபுதூர், பொன்னேரி , இவைகள் எல்லாம் கொங்கு நாட்டு வேளாளர்கள் காணியூர்கள்தாம். சின்ன பொன்னான், பெரிய பொன்னான் ,பொன்னுசாமி , பொன்னம்மாள் , பொன்னாச்சியம்மன் என்ற பெயர்களை அறியுங்கள் . பொன்னர் குலத்தினர் கொங்கு நாட்டு வேளாளர்களே .நெல்லைப் பொன்னாகக் கருதி விளைவிப்பார்கள் பொன்னங்குலத்திலர் நலமிகு கடம்பநகரில் வாழ் பொன்னகுல பெரியண்ணமால் என்ற செய்தியை அழகு மலைக்குறவஞ்சி கூறும் .
" பொங்கலூர் போற்றும் பொன்னர் தம்குலம்வாழ் "
என்பதால் இவர்கள் பொங்கலூர் நாட்டின் காணி பெற்றவர்கள் என்று அறிகிறோம் .
" மருவிலா வாலை மன்றாடியாம் பட்டம்"
பெற்றிடும் பொன்னர் என்று அக்குறவஞ்சி கூறுவதால் இவர்கள் மன்றாடிப் பட்டமும் பெற்றார்கள் என்று அறிகிறோம் . நீலகாண்டி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டனர். தாராபுரம் அருகில் பொன்னபுரம் அமைத்தனர். பொன்னகுலத்து முத்து நல்லாக் கவுண்டர் சிவனுக்கு முடிசூட்டினானாம். மாதப்பூர் , பொங்கலூர் , பொன்னபுரம் இவர்களின் காணியூர்கள்தாம்.
48 . பொடியன் குலம் :
பொள்ளாச்சி , கொடுமுடி, சாலைப்புதூர் , மாயனூர், மதுக்கரை ஆகியன பொடியன் குலத்தாரின் காணி. பொடி நடை என்பதை அறிக . வெள்ளாளர் கூட்டத்தில் மிகக் குறைந்த அளவே உள்ள பொடியன் குலத்தினர் காரணப் பெயரையே பெற்றனர். பொடி மன்னர் பொடியர் சொற்களை அறியவும் .
49 . பொருள்தந்த குலம் :
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது . செத்தும் கெடுத்தான் சீதக்காதி . இவனும் பொருள் தந்தவன்தான் . கடையேழு வள்ளல்கள் பொருள் தந்தவர்களே . ஆய், நள்ளி, பேகன் , ஆகியோர் மாரியன்ன கொடை கொடுத்தவர்கள் . பசித்து வந்தவர்களுக்கும் , யாசித்து வந்தவர்களுக்கும் வரையாது கொடுத்த வள்ளல்கள் பொருள் தந்த குலத்தினர் . ஆந்தை குலம் பிறழந்து பிரிந்து வந்ததென்பதெல்லாம் கற்பனைக்கதை .பொருள்தந்த குலத்தினர் பலபிரிவாகப் பிரிந்து போயினர் . பிறழந்தை, பொருளந்தை, புறளந்தை என்பதெல்லாம் திரிந்தசொல் மரபுகள் . கரூர் அமராவதிக்கரையில் வாழ்ந்த பொருள்தந்த குலத்தினர் தோட்டக்குறிச்சி மலையம்மனை வழிபட்டனர் . ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர் . கட்டி, நல்லகட்டி, கட்டியண்ணன் ஆகிய பெயர்களைப் பெற்றவர்கள் பொருள்தந்த குலத்தினரே, கட்டிபாளையம் உள்ளதை அறிக. கருமாபுரம் , பிடாரியூர், காடையூர், முத்தூர், தோட்டக்குறிச்சி , கீரைமடை, விசயமங்களம், கள்ளிப்பட்டி , ஆறுதொழு, ஆலம்பட்டி , பரமத்தி, புன்னம் , பவுத்திரம் , தென்பள்ளி , ஆகியன பொருள் தந்த கூட்டத்தாரின் காணி ஊர்களாம்.
50 . மணியன்கோலம் :
கரூரைக் காணியாகக் கொண்ட மணியங்குலத்தார் கொங்கெங்கும் பரவினர். மணியன் குறிச்சியில் காணி பெற்றவர்கள். மணிமாலை ,மணிமந்திரம், மணியாச்சி , மணியம் என்ற சொற்களை அறியவும் .துணிமணி , அணிமணி, சொல்லாட்சி அறிக . ஊரை ஆள்வோர் மணியக்காரர்கள். நாட்டை ஆள்வோர் நாட்டார் . ஊர் மணியக்காரர் மரபுவழியாக ஊரை ஆழ்பவர்கள் . மணியம் ஆளுமை செய்வோர் மணியம் குலத்தினர் ஆயினர். மோகூர் பழையன் கொங்கு வேளாளன். இவனையும் பிற ஏழு வேளாளர்களையும் செங்குட்டுவன் வென்று களவேள்வி செய்தான் என்று பதிற்றுப்பத்து கூறும். நாமக்கல் வட்டத்தில் மணியன் குலத்தினர் . மிகுதியும் உள்ளனர். மோகூர்தான் இன்றைய மோகனூர் . மோகனூர் மணியன், முத்தூர் மணியன் என்று பிரிவு படுத்தினர். காங்கேயம் காணிப்பாடல், அரசர் புகழ் தென் காணியூர் அதில் வரும் மணியனை என்று புகழ்கிறது. கரூர் , மோகனூர், முத்தூர், கோடத்தூர் , இடையாறு , துக்காச்சி , மணியனூர், நல்லிபாளையம் , முத்துக்காபட்டி, நாமக்கலில் மணியன் குலத்தினர் உள்ளனர்.
51 . மயிலர் குலம்:
கொங்கு கவுண்டர்களில் குயில், காடை, செம்பூத்து , ஆந்தை ஆகிய பறவைகளைக் கொண்டது போலவே மயிலையும் குலப்பெயராகக் கொண்டனர் . பூத்தவேங்கை வியன் ஏறி மயிலினம், அகவும் நாடர்கள் வேளாளர்கள் குறிஞ்சி வளமுடையது கொங்கு . கொங்கில் குயில் கூவி துயில் எழுப்பும் , மயில் ஆடி மகிழ்வூட்டும் . கொங்கு வேளாளப் பெண்கள் தாம் மயிலின் சாயலில் இருப்பர். நடப்பர் மயிலுக்குப் போர்வை கொடுத்தானே கொங்கு வேளாளன் பேகன் . கொங்கு நாடு பாடிய கபிலர் மயிலாட்டத்தை வியந்து பாடாத இடமில்லை . கரூர், தாராபுரம், மூலனூர் , நடையூர், மணியனூர், தருமாபுரம் , இவர்களின் காணியூர்களாம் .
52 . மாடைக்குலம் :
மாடு செல்வம், மாடல்ல மற்றைய உழவர்களின் செல்வமாடு . மாடு + ஐ - மாடை . அழகிய மாடு வளர்த்தவர்கள் . அதனைச் செல்வமாகக் கொண்டவர்கள் . வெள்ளாளர்கள் மாட்டை உயிராக மதித்துப் போற்றும் உழவர் திருநாள் . பொங்கல் மாட்டுப் பொங்கல் வேளாளர்களின் முதன்மையான நாள். மாட்டைச் செல்வமாகப் போற்றியே காங்கேய மக்கள் மாடைக் குலத்தினர் ஆயினர் . காங்கேய நாட்டு வைத்திய நாதசாமி ஆலயக் கல்வெட்டு வெள்ளாளமாடை என்கிறது . வெள்ளக்கோயில் காணிப்பாடல் பிரபு மாடை என்கிறது. குறவஞ்சி பதிமாடை என்கிறது . சிவன்மலை குறவஞ்சியும் மாடைக் குலத்தை அறிவிக்கிறது . காங்கேயம் , வெள்ளக்கோயில், தளிகை , பிள்ளைப்பதி,முத்தாண்டி பாளையம் , பள்ளப்பாளையம் , ஆகியன மாடைக் குலத்தாரின் காணியூர்களாம் .
53 . முத்தன்குலம் :
வெள்ளாளர்களில் முத்தாக முதன்மையாக வாழ்ந்தவர்கள் முத்தன் குலத்தினர் ஆயினர் . முத்தனூர் , முத்தூர், முத்துக்காப்பட்டி , முத்துக்காளிப்பட்டி , முத்தாலம்மா , முத்துசாமி , முத்தம்மாள் , முத்தண்ணன் , முத்து என்ற பெயர்களை அறிதல் வேண்டும். முத்தூர்க்காணிப் பாடல் முத்தன் , மணியன் என்று கூறுகிறது . முத்தூர் செல்லாண்டியம்மனும் , முத்தூர் நாச்சியம்மனும் இவர்களின் குலதெய்வங்களாகும். முத்தூர் முத்தன் குலத்தினர் பல்லடம் ,அன்னூர் , கோபி , பொள்ளாச்சி மோகூர், கண்ணபுரம் , உப்பிலியாபுரம் , சோமனூர் , ஆகிய ஊர்களை இவர்கள் காணியூர்களாகப் பெற்றனர் .
54 . மூலன்குலம் :
மூலம் - வேர் பஞ்சமும் , ஐந்து மருந்தாகும் மூலிகைகளைக் குறிக்கும் . திருமூலர் கொங்கு வேளாளக் கவுண்டர்தான் .அந்த மரபிலே வந்தவர்கள் மூலம் குலத்தினர் என்பர். மூலவர் சன்னதி என்பர். முதற்கடவுளை மூலவர் என்போம் . மூலநூல் முதல் நூல். ஆகவே வெளிரில் மூலவர்கள் மூலன் குலத்தினர். தென்கரை நாட்டு மூலனூர் ,மூலக் குலத்தாரின் முதற்காணியாகும். பழையக் கோட்டை பட்டக்காரர்கள் மூலனூரைக் கவர்ந்தனர் . அதனால் தான் மூலன் குலத்தார் பெருமாநல்லூர் , பெரும்பழனம் , அவிநாசி , புகல்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் சென்று குடியேறினர் .
55 . மேதிக்குலம் :
வெள்ளாளர்களின் துணைத் தொழில் ஆநிரை மேய்த்தல் பான்மடை பெருக்கல் என்றது இலக்கியம் . பான்மடை பெருக்கல் என்றது இலக்கியம் . பான்மடை பெருக்குவோர் மேதி - எருமை மாடுகளையே மிகையாக வளர்த்து பெரும் பண்ணையர்கள் ஆயினர். எருமை நாட்டை ஆண்டவன் எருமையூரன் . பிற்காலத்தவர் மேதி என்றனர். தலையாலங் கானப்போரில் போரிட்ட ஐந்து வேளிருள் எருமையூரன் ஒருவன் . மேதிக் குலத்தார் நாமக்கல் , திருச்செங்கோடு , பெருந்துறை , வெள்ளக்கோயில் , படைவீடு இவர்களின் காணியூர்களாம் எருமப்பட்டி , நாமக்கல் அருகில் ஊராகும் . மைசூர் - எருமையூர் தான் .
56 . வெளியன் குலம் :
புல்வெளி , மந்தைவெளி , வீட்டிற்கு வெளியே ,வெளியேபோ ஆகிய சொற்களை அறியவும் , வெளி என்பதற்கு பரந்த இடம் , புறத்திடம் என்று பொருள் . பரந்த உள்ளங்கொண்ட வெள்ளாளர்கள் வெளியன் குலத்தினர் . பரந்து கிடக்கும் வெளியை வெட்டி வெள்ளத்தை விட்டு வெண்மணி விளையும் இடமாக ஆக்குவோர் வெளியர்கள். வெள்ளாளர் வெளரிய உள்ளங் கொண்டதால் வெளியன் என்றனர் . இவர்களது காணியிடம் காங்கேயந்தான் . பெரும்பகுதி குலத்தார்க்கு இந்தக் காங்கேயம் காணி ஆகிறது . கரிய காளியம்மன் இவர்களின் குலதெய்வமாகிறது. சங்க காலத்தில் வெளியன் வேண்மான் சேரனுக்குப் பெண் கொடுத்ததைப் பற்றி பதிற்றுப் பத்து கூறும் . ராசிபுரத்தில் வெளியன் குலத்தார் நிறைந்துள்ளனர் .வெளியன் வேண்மான் ஆய் எயினன் ( அகம் 208 ) வேண்மான் வெளியன் தித்தன் (நற் - 58 ) வெளியன் தித்தன் ( அக - 168 ) எனவே வெளியர்களும் சங்க காலத்து வெள்ளாளர்கள் தாம் என அறிகிறோம் .தித்தனது மரபினன் கரிய பெருமாள் ( 1443 ) வீரப்பிரதாப தேவராயர் ஆண்ட போது இராசிபுரம் கைலாச நாதர் கோவிலுக்கு அத்தனூரை வேதமானியமாக அளித்தானாம் . 18 இல் ராசிபுரம் துளுக்கண்ண கவுண்டர் நீரியினள் இறந்த வணிகன் இறந்தான் . அதற்கு 70 வேளாளர் தீயில் மூழ்கினர். பாவம் கழிய கங்கையில் குளித்தானாம் . இதனை வால சுந்தரக் கவி கூறுகிறார் . வெளிய குலத்தினரை ராசிபுர நாட்டுக் கவுண்டர்கள் ஆயினர் . சாசனங்களும் , பருத்திப்பள்ளியும் இந்த நாட்டார்கள் காணி கொண்டனர் . அத்தனூர் பத்திர காளியம்மனும் ,கைலாச நாதரும் வெளியகுலத்தாரின் தெய்வங்களாம் . வெளிய குலத்தார் பாச்சலூரன் , செண்பகராயன், துளுக்கண்ணர், ஆலத்தூரன் என்று பிரிந்தனராம். தொண்டைமான் கவுண்டன் இறந்ததும் மனைவி திருமணி முத்தாறில் தீயில் புகுந்ததிறந்தாளாம். தீப்பாய்ந்தம்மன் கோயில் கட்டப்பட்டது . இது நாமக்கல்லில் உள்ளது .செல்லாண்டியம்மன் வெளிய குலத்தாரின் குலதெய்வமாம் . தீண்ட மங்கலத்தாருக்கும் இந்த அம்மன் குலதெய்வமாகிறாள். பரஞ்சேர்வழி , ராசிபுரம் , கீரனூர் , மல்லசமுதித்திரம், காக்காவேரி , ஆகியன இவர்களின் காணியூர்களாம் .
57 . வெண்ணைக்குலம் :
வெள்ளாளன் ஆ, எருமை பால் , வெண்ணெய் , நெய்களுக்கு மேலாண்மை உடையவன் . வெண்மைக்கு எடுத்துக் காட்டு வெண்ணைதான் . வெண்ணை போல் வெள்ளை உள்ளமும், பதமான குணமும் கொண்டதால் இவர்கள் வெண்ணை குலமாயினர். வெண்ணை நல்லூர் , வெண்ணெய் மலை , ஊர்ப் பெயர்களை அறிக . ` பண்ணை நிறைந்தால் வெண்ணை பெருகும் ` பழமொழி இது. காங்கேயம் , கரூர், புதுப்பாளையம் , பொள்ளாச்சி , கோபி , இவர்களின் காணியூர்களாம் .
58 . வேந்தன் குலம் :
காங்கேய நாட்டுக் காணிப்பாடல் பெருங்குடி , வேந்தன் , செங்கண்ணன் என்று பட்டியலிடும் . காங்கேயம் இவர்களின் தலைமையிடம் பொள்ளாச்சி காணியிடமாகும். "வேந்தன் மேயத்தீம்புனல் உலகம் " என்கிறது தொல்காப்பியம் . தீம்புனல் உலகம் மருதநிலம் .மருதநிலத்தின் வேந்தர்கள் . அரசர்கள் வெள்ளாளர்கள் தாம். வெள்ளத்தை அடக்கிப் பயிர்த் தொழில் புரிந்தவன் கவுண்டன் தான் மக்களை ஆள்பவன் வேந்தன் ஆனது போல் வெள்ளத்தை ஆள்பவன் வேந்தன் ஆகியுள்ளான் . மூவேந்தர் , பாவேந்தர், நாவேந்தர் போல ஆவேந்தர் இந்த வேந்தன் குலத்தினரே .
59 . வெளையன் குலம் :
இது விளையன் குலம் ஆகும். விலையன் குலம் ஆகாது . வெள்ளாளன் தன் உழைப்பால் நவ தானியங்களையும் விளையவைக்கின்றானே . அதனால் தான் விளையன் குலம் என்றனர் . பிற விளக்கம் தேவையில்லை . விலைபோகாத வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை. அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை . அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர் விலை போக மாட்டார்கள் . மானத்தைக் காக்க உயிரை விலையாகக் கொடுப்பர். தலைய நல்லூரை முதற்காணியாகக் கொண்ட விளையன் குலத்தார் கொங்கு எங்கும் பரவினாலும் நாமக்கல் , திருச்செங்கோடு , பகுதியில் நிறைந்துள்ளார் . முத்துகாபட்டியில் அனைவரும் விளையங் குலத்தார்கள் .சிலர் மட்டும் செம்பூத்து மணியன் குலத்தார் . செல்லாண்டியம்மனை வணங்கினாலும் குல தெய்வமாக அண்ணன்மார் சாமிகளையே வைத்துள்ளனர் . மின்னாம்பள்ளி ஆத்தூர் , மன்மங்கை , ஆரியர், குமாரமங்கலம் , பஞ்சமாதேவி , சென்னிமலை , சேலம், இடைப்பாடி ,கொன்றையாறு , சாத்தனூர் , துத்திக் குளம், பொங்கலூர் , ஆகிய ஊர்கள் இவர்களின் காணியூர்களாம் .
60 . வில்லிக்குலம்:
வில்லாற்றல் மிக்கவர்கள் வில்லிக் குலத்தார் . பொன்னர் , சங்கர், தீரன் ஆகியோரும் வில்லாற்றல் மிக்கவர்கள்தாம். வில்லி பாரதம் ,பாடியவர் வில்லிக்குலத்து வெள்ளாளரே . வெள்ளக்கோயில் காணிப்பாடல், வரிசை திகழ் வில்லியை என்கிறது . வள்ளி நகர் வில்லியை என்ற தொடரும் சான்றாகும் . நாமக்கல் வட்டத்தில் வில்லிபுரம் என்ற ஊர் உள்ளது . வில்லிக் குலத்து வேலக்கவுண்டர் பற்றி குமாரமங்கல ஆவணம் கூறும் . கொங்குகெங்கும் பரவியுள்ளனர் .
தொன்மையான குடிப் பெயர் 60 தான் . 13 ஆம் நூற்றாண்டில் சதக நூல்கள் படி 96 குடிகள் . இன்றைய கணக்கில் 142 குடிப் பெயர்கள் வருகின்றன . 60 குலப்பெயர்கள் பெருகிய மக்கள் தொகையால் 142 ஆக உருவாயின . அதன் அடிப்படையிலேயே மாறியும் , சிதைந்தும் , விரிந்தும் அமைந்துள்ளன . புதியன புகுதலை ஏற்பது நல்லது .
கொங்கு வேளாளர் கொங்கு மண்ணின் மைந்தர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர்கள் தங்களது குலப்பெயர்களை இயற்கையாக அமைத்துக் கொண்டனர் . கூட்டமாக வாழத்தலைப்பட்டவர்கள் குலக்காணியாளர்களாக பெயர் சூட்டிக்கொண்டனர் . விலங்கு, பறவை, பூப்பெயர்களோடு செயல்பாடுகளையும் சேர்த்தனர் . சிறப்புப்பெயர் பூண்டனர் . ஆதிக்குடிகள் அறுபது என்றனர். அறுபது தொண்ணூறு ஆகி நூற்றுநாற்பத்திரண்டாக வளர்ந்தன 18 நூற்றாண்டுக்குப்பின் தோன்றிய அழகுமலைக் குறவஞ்சி 142 குலக்காணியாளர் பெயர்களைப் பட்டியில் இட்டுக்கூறுகின்றது. ஓதாலர் இதனைப்பாடினார்
குலந்தழைக்க , குடிவளர குலக்காணிகளும் பெருகி வருதல் இயல்பு , புதியன புகுதலை ஏற்பது அற்புடைமை 60 குலக்காணியாளர் பற்றி முன்னரே எழுதப்பட்டதால் மீதியை இப்பகுதியில் எழுதுவேன் இதற்கு மேலும் குலப்பிரிவுகள் இன்று பல்கி இருப்பதையும் ஏற்கவேண்டும் . ஒரு மரத்தின் கிளைகளை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும் .
நன்றி.... http://dharuyanand.blogspot.in/