“உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” -
ஒரே வரியில் உயரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன்!
எப்படி நம்மை அறிந்து கொள்வது? ஒரு பிண்டமாகத் தான் பிறக்கிறோம்.
பிறந்த சில மாதங்களுக்கு நமக்கு ஒன்றும் தெரியாது. பிறகு அம்மா, அப்பா, தாத்தா பாட்டி, அத்தை மாமா என்ற உறவுகளை அறிகிறோம்.
அப்பொழுதும் நாம் யார் என்று நமக்குத் தெரியாது.
இன்னும் சிறிது காலம் போனால் நம் பொருள் எது என்று அறிந்து கொள்கிறோம்.
நம் விளையாட்டுப் பொருளை எடுத்தால் அடுத்தக் குழந்தையுடன் சண்டைக்குப் போகவோ அழவோ தெரிகிறது.
பள்ளி செல்லும் பருவத்தில் நம் பெயர், இன்னாரின் பிள்ளை ஆகிய விஷயங்கள் தெரிய வருகிறது.
அதன் பின் மெது மெதுவாக அகந்தை உருவாகிறது. நான் அடுத்தவனை விட வெளுப்பு, அவனை விட உயரம், அவனை விட பணக்காரன், அவனை விட அறிவாளி ஆகியவை நம் மூளையில் பதிகிறது.
இப்படியே வளரும் நாம் பல வருட வாழ்க்கைக்குப் பிறகு
ஆன்மிகத் தேடலின் துவக்கத்தில் நீ யார் சொல், உன்னை நீ முதலில் அறிந்து கொள்
என்று யாரவது சொல்லும் போது திடீரென்று விழித்துக் கொள்கிறோம்.
ஒரே வரியில் உயரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன்!
எப்படி நம்மை அறிந்து கொள்வது? ஒரு பிண்டமாகத் தான் பிறக்கிறோம்.
பிறந்த சில மாதங்களுக்கு நமக்கு ஒன்றும் தெரியாது. பிறகு அம்மா, அப்பா, தாத்தா பாட்டி, அத்தை மாமா என்ற உறவுகளை அறிகிறோம்.
அப்பொழுதும் நாம் யார் என்று நமக்குத் தெரியாது.
இன்னும் சிறிது காலம் போனால் நம் பொருள் எது என்று அறிந்து கொள்கிறோம்.
நம் விளையாட்டுப் பொருளை எடுத்தால் அடுத்தக் குழந்தையுடன் சண்டைக்குப் போகவோ அழவோ தெரிகிறது.
பள்ளி செல்லும் பருவத்தில் நம் பெயர், இன்னாரின் பிள்ளை ஆகிய விஷயங்கள் தெரிய வருகிறது.
அதன் பின் மெது மெதுவாக அகந்தை உருவாகிறது. நான் அடுத்தவனை விட வெளுப்பு, அவனை விட உயரம், அவனை விட பணக்காரன், அவனை விட அறிவாளி ஆகியவை நம் மூளையில் பதிகிறது.
இப்படியே வளரும் நாம் பல வருட வாழ்க்கைக்குப் பிறகு
ஆன்மிகத் தேடலின் துவக்கத்தில் நீ யார் சொல், உன்னை நீ முதலில் அறிந்து கொள்
என்று யாரவது சொல்லும் போது திடீரென்று விழித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment