Thursday, 31 December 2015

‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்....!!!!

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்..!!
‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்,
இனி நடப்பது நல்லதாக அமையட்டும்....!!!!
2016 புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறோம்...
மகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, கோபம், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எண்ணற்றஉணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், நினைத்துப் பார்க்க நிறைய நினைவலைகள்!
பழைய காலண்டரை கழற்றும் போது, ஆண்டு முழுவதும் நம்முடைய இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்வது போன்றதொரு ஏக்கம். புதிய காலண்டரை மாட்டும்போது ‘ஏதோ ஒரு புதிய பலம், நம்பிக்கை நம்மை நாடி வருவது போன்றதொரு உணர்வு.
எந்த ஒரு ஆண்டும் எதிர்பார்ப்பது போலவே அமைந்து விடுவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. என்றாலும் வாழ்க்கை இன்பமானதாகவே அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!

No comments:

Post a Comment