Monday, 9 November 2015

தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள்.
அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான். அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.
எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.
தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்….உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். மகா லக்ஷ்மியும் பாற்கடலில் தானே அவதரித்தாள் !
கங்கா ஸ்நானம் செய்தபின் மகாலக்ஷ்மி பூஜையில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்க வீட்டில் செல்வம் பெருகும்;

No comments:

Post a Comment