Wednesday, 28 September 2016

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

காலதேவி அம்மன் ஆலயம்

காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது என்றெல்லாம் நேரத்தின் மதிப்பையும்,
பெருமையையையும், வாழ்வியல் நெறிமுறைகளோ டு பின்பற்றி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இருபத்தி 4 மணி நேரத்தையும், கூட்டி கழித்து நல்லது, கெட்டது எது என காலக் கணக்கையும் படைத்து, விஞ் ஞானம் தலைதூக்காத காலத்திலேயே வழி காட்டினர்.
விஞ்ஞானம் ஆயிரம் வடிவங்களில் உயர்ந்து சென் றாலும், ஒருவனின் நேரத்தை இந்த விஞ்ஞானத்தா ல் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்!
அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.
கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ” நேரமே உலகம்’.
புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்த ல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்குபிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிற து. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திரு க்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகி லேயே இது ஒன்று தானோ?
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படு கிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந் து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின்முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும். கெட்டநேர ம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை .
இந்த காலதேவி. கோயில் பலவடிவங் களில் உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இப்போது இது இறுதிவடிமாக 2006 ம் ஆண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கஷ்டங்களால் அவதிப் படுவோர்தான் இக்கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களின் மன ங்களில் நம்பிக்கையையை விதைக்கிறோம். அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என் கிறார் குருஜியான சுவாமி தாசன்.
செல்லும் வழி:
சென்னையில் இருந்து மதுரை செல்லவேண்டு ம். பின்னர் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயி ன்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும். தெரியாதவ ர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில்செல்வதே சிறப்பு.
இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
நேரக்கோயில் தகவல்களுக்கு 94421 73049 அழுத்தலம்.

No comments:

Post a Comment