Wednesday, 28 September 2016

புத்திசாலி குடியானவர்கள்....!


ஓர் இரவு, இரு குடியானவர்கள் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க,
ஓர் இரவு, இரு குடியானவர்கள் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்தனர். அதனால் அவர்களை ஜங்ஷனில் உள்ள "லாக் அப்' அறையில் தங்க வைத்தார் பரிசோதகர்.
மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்த குடியானவர்கள், டிக்கெட் பரிசோதகரையும் எழுப்பினார்கள். திடுக்கிட்டு எழுந்த பரிசோதகரிடம், இரண்டு டிக்கெட்டுகளையும் காட்டித் தங்களை உடனே விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
""நேற்றே ஏன் காட்டவில்லை?'' என்று அவர் கோபமாகக் கேட்டார்.
""டிராக்டர் வாங்க சென்னைக்கு வந்தோம். எங்களிடம் நிறையப் பணம் இருந்ததால் ஏதாவது லாட்ஜில் தங்கப் பயமாக இருந்தது! நீங்கள் எப்படியும் பாதுகாப்பான இடத்தில் படுக்க வைப்பீர்கள் என்று தெரியும். அதனால்தான் டிக்கெட்டைக் காட்டவில்லை'' என்றார்கள் அந்தப் புத்திசாலிக் குடியானவர்கள்.

No comments:

Post a Comment