Wednesday, 28 September 2016

புத்திசாலி குடியானவர்கள்....!


ஓர் இரவு, இரு குடியானவர்கள் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க,
ஓர் இரவு, இரு குடியானவர்கள் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்தனர். அதனால் அவர்களை ஜங்ஷனில் உள்ள "லாக் அப்' அறையில் தங்க வைத்தார் பரிசோதகர்.
மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்த குடியானவர்கள், டிக்கெட் பரிசோதகரையும் எழுப்பினார்கள். திடுக்கிட்டு எழுந்த பரிசோதகரிடம், இரண்டு டிக்கெட்டுகளையும் காட்டித் தங்களை உடனே விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
""நேற்றே ஏன் காட்டவில்லை?'' என்று அவர் கோபமாகக் கேட்டார்.
""டிராக்டர் வாங்க சென்னைக்கு வந்தோம். எங்களிடம் நிறையப் பணம் இருந்ததால் ஏதாவது லாட்ஜில் தங்கப் பயமாக இருந்தது! நீங்கள் எப்படியும் பாதுகாப்பான இடத்தில் படுக்க வைப்பீர்கள் என்று தெரியும். அதனால்தான் டிக்கெட்டைக் காட்டவில்லை'' என்றார்கள் அந்தப் புத்திசாலிக் குடியானவர்கள்.

ஒரு இளம் தம்பதி...நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். . ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்

ஒரு இளம் தம்பதி...

மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"
ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் தப்பி இருப்பார்கள்.
.
.
.
.
.
.
.
எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...
நீங்கள்
நேர்மறையாக
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
.
ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

காலதேவி அம்மன் ஆலயம்

காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது என்றெல்லாம் நேரத்தின் மதிப்பையும்,
பெருமையையையும், வாழ்வியல் நெறிமுறைகளோ டு பின்பற்றி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இருபத்தி 4 மணி நேரத்தையும், கூட்டி கழித்து நல்லது, கெட்டது எது என காலக் கணக்கையும் படைத்து, விஞ் ஞானம் தலைதூக்காத காலத்திலேயே வழி காட்டினர்.
விஞ்ஞானம் ஆயிரம் வடிவங்களில் உயர்ந்து சென் றாலும், ஒருவனின் நேரத்தை இந்த விஞ்ஞானத்தா ல் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்!
அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.
கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ” நேரமே உலகம்’.
புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்த ல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்குபிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிற து. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திரு க்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகி லேயே இது ஒன்று தானோ?
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படு கிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந் து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின்முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும். கெட்டநேர ம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை .
இந்த காலதேவி. கோயில் பலவடிவங் களில் உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இப்போது இது இறுதிவடிமாக 2006 ம் ஆண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கஷ்டங்களால் அவதிப் படுவோர்தான் இக்கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களின் மன ங்களில் நம்பிக்கையையை விதைக்கிறோம். அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என் கிறார் குருஜியான சுவாமி தாசன்.
செல்லும் வழி:
சென்னையில் இருந்து மதுரை செல்லவேண்டு ம். பின்னர் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயி ன்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும். தெரியாதவ ர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில்செல்வதே சிறப்பு.
இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
நேரக்கோயில் தகவல்களுக்கு 94421 73049 அழுத்தலம்.

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! – வியத்தகு ஆன்மீக தகவல்கள்!


‘ஏழைகளின் ஊட்டி’ என்று பிரபலமாக அழைக்கப்படும் நகரம்தான் ஹாசன் நகரம் இந்நகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
அங்கே
அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் வருடத்திற்கு 10நாட்கள் மட்டு மே திறக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் சிறப்புகளையும் தகவல்க ளையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஆம் ஹாசனாம்பா கோயில் இருப்ப‍தால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என் றே பெயர் பெற்றிருக்கிறது.
இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அக்டோபர் 25-ஆம் தேதியி லிருந்து, ந‌வம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும்கோயில் 24ஆம்தேதியே திறக்கப்பட்டா லும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடை பெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.
வினோத நம்பிக்கைகள்!
மாமியார்-மருமகள் கல்! :
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாம ல்வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒருபெண். ஒருநாள்அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள்முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்ல ப்படுகிறது.
அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயி லில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர் ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகி றது. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கு ம் அதிசய கோயில்!
திருடர்கள் கோயில் :
ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச் செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகபோகுமாறு சபித்ததாக சொல்லப்படு கிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘ திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கிறது.
அணையா தீபம் :
ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண் டிருக்குமாம்.
கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…:
கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும்உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப் படுகிறது.
வாடா மலர்கள் :
ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கு மென்றும் பக்தர்கள் நம்புகி றார்கள். அதுமட்டு மல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப் பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறா ர்கள்.
வரலாறும், புராணமும்!
ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்ட ப்பட்டது. இக்கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதோடு, கர்நாடககட்டிடக் கலை யின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிற து. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப் பெயரை பெற்றதாக சொல்ல ப்படுகிறது.
அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டுவந்த ஹாசன்நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர் கள்) வருகைக்குபிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின்படி சப்த(ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரா ணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலி ருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் 3கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் 3 கிணறுகளாக 3 கன்னியர்க ளும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.
ஹாசனாம்பா கோயில் திறப்பு!
ஹாசனாம்பாகோயில் ஒவ்வொருஆண்டும் தளவார் குடும்பத்தினர்கோயில் நுழைவாயி லில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்து விடப்படுகிறது.
ஆண் டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசயகோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்து வரப்படும் ஆபர ணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத் துக்கே எடுத்துச் செல்ல ப்படுகின்றன.

எந்த தெய்வத்தை எத்த‍னைமுறை வலம் வரவேண்டும்! – ஆன்மீக தகவல்


நீங்கள் கோவிலுக்குள் சென்றால், எந்த தெய்வத்தை எத்த‍னை முறை வலம் வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ள‍னர்.
ஆனால், இன்றோ பெயரளவில் ஓரிரு முறை வலம் வருதல் அல்ல‍து பொதுவாக
எல்லா தெய்வங்களையும் மூன்று முறை வலம் வருதல் என்று வழக்க‍ மாகிவிட்டது.
ஆனால், இது தவறு. கீழே பாருங்கள் ஒவ் வொரு தெய்வத் தையும் நாம் எத்தனை வலம் வர வேண்டும் என்று பட்டியலிடப் பட்டுள்ள‍து.
விநாயகரை நீங்கள் வணங்கி அவரை ஒருமுறை தான் வலம் வர வேண்டும்.
ஈஸ்வரனையும், அம்மனையும் வணங்கி 3 முறை வலம் வர வேண்டும்,
அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,
நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,
சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!-எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது.


இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

‘‘எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்’’

‘‘நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம். பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணை குளியலை சனியன்று செய்வது நல்லது.

பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணை குளியல் சர்ம பாதுகாப்பில் சிறந்த சிகிச்சை – தோலுக்கு எண்ணை பதமிடுவது. குளிப்பதாலும், எண்ணை குளியலாலும் ஏற்படும் நன்மைகள் உடல் சூடு, காங்கை குறைகிறது.

எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும் ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்..

சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.

இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.

இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

விளக்கேற்ற‍ உதவும் திரிகளும், அவற்றின் அரிய பயன்களும்! -அரியதோர் ஆன்மீக தகவல்


குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல,
திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன் களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கே ற்றுவது மிகவும் நல்லது.

உங்களது கையெழுத்து, உங்களது குணாதிசயத்தைக் காட்டும் கண்ணாடி – ஊரறியா ஓரரிய தகவல்


உங்களது கையெழுத்து, உங்களது குணாதிசயத்தைக் காட்டும் கண்ணாடி – ஊரறியா ஓரரிய தகவல்
கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக் கொள்ளும் அடையாளம். இக்கையெழுத்தை
நாம் எவ்வாறு, வடிவமைக்கின்றோமோ, அதை பொறுத்து நம் குணாதி சயங்கள் முடிவு செய்யப்படுகின்றதாக கூறுகின்றனர். உங்கள் கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பாருங்களேன்.
பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாக பேரார் வமிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதி காரப் பிரியர்கள்.
சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காக செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.
எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள், எதிர்காலத் தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள், பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்க ளைப் பற்றி நினைத்து அங்கலாய்ப் பவர்கள்.
எழுத்துக்களைநேராக எழுதுபவர்கள், எந்தப்பிரச்சனை க்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல் களை எதிர்த்து நிற்கும், மனஉறுதி படைத்தவர்கள்.
வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித் தனியே பிரித்து எழுதுகிறவர்கள், சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித் திருப்பார்கள்.
சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
எழுத்துக்களை நீட்டி, நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள், எந்தக் காரியத்தி லும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையு ம் கொண்டவர்கள்.
பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகி ற வர்கள், வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.
எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வுமனப்பான் மை உடையவர்கள்.
எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமா கச் சுழிப்பவர்கள், விடா முயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக் கி எழுதுகிறவர்கள், குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.
எழுதும்போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடை யவர்கள்.
உங்கள் கையெழுத்து எப்படி இருக்கிறது என்ப தை வைத்து உங்கள் குணம் தீர்மானிக்கப்படுவது, எந்த அளவுக்கு உண் மை என்று தெரியவில்லை. மிகமோசமான கையெழுத்தைக் கொண்டி ருந்தாலும், அவர்கள் எழுத்தில் உள்ள நல்ல கருத்துக்களால் புகழ்பெற்ற வர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார் கள்.
அழகான கையெழுத்தை உடையவர்கள் பலர், இன்று மாதக்கடைசியானால் பிறரிடம் கடன் வாங் குபவர்களாக உள்ளனர். ஆகவே, அவ ரவர் களின்திறமை, பேச்சு சாதுர்யம், படிப்பு, அனுபவம், புத்திசாலித்தனம் ஆகியவைதான், அவர து ஆளுமை, வாழ்வில் சிறந்தமனிதராக மாறுவது ஆகிய வற்றை தீர்மானிக்கிறது. ஆனாலும் கிராபாலஜி எனும் இந்த கையெழுத்து கலையை அலட்சியம் செய்துவிடமுடியாது. ஓரளவுக்கு நிபுணர்கள் கணிப்பது சரியாகவே இருந்து வரு கிறது.

யார் இந்த குபேரன்..!-குபேரன் கோயில் எங்கே இருக்கு..?


குபேரன் என்பவர் செல்வத்திற்கே அதிபதி ஆவார். அதுசரி, அவனுடைய கதை என்ன? என்பது பலருக்குத் தெரியாது.
குஜராத் மாநிலத்தில் கர்நாளி என்ற கிராமத்தில் இருக்கிறது புராண காலத்துக் குபேரன் கோயில். இதை திரேதாயுகத்துக் கோயிலென்றும், பாரதநாட்டின் பழமையான ஒரே குபேரன் கோயில் என்றும் கூறுகிறார் கள்.
இந்த குபேரன், யக்ஷர்களின் அரசன். இவனை “குபேர பண்டாரி’ (பொக்கி ஷக்காரன்), சிவமித்திரன் மற்றும் வடதிசை ரட்ச கன் என்றும் அழைப்பதுண்டு. இவன் இலங்கே ஸ்வரனான ராவணனின் மாற்றாந்தாய் மகன். அதாவது அண்ணன் முறை ஆக வேண்டும்!
புராணக்கதையின்படி, பிரஜாபிதா பிரம்மாவின் பேரனான விஸ்வரா என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இத்விதா என்பவள் பரத்வாஜ முனிவரின் புதல்வி. இவள் வயிற்றில் பிறந்தவன்தான் குபேரன். ஒரே பிள்ளை. இரண்டாவது மனைவி கைகசி. இவளுக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் பிறந்தார்கள். புதல்வர்களின் பெயர் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி. கும்பாஷினி லட்சும ணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை.
பௌலஸ்யர், தன் பேரன் குபேரனுக்கு இலங்காதிபதி யாக மகுடம் சூட்டி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது, ராவணனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு அநீதி இழைக் கப்பட்டதாகக்கருதி, அவன் தவம்செய்யலானான். பரமசிவனை மகிழ்வித்து, அவர் கொடுத்த வரத்தின் சக்தியால், குபேரனைத்தோற்கடித்து, பொன்நகரமான இலங்கையையும், குபேரனுக்கு இந்திரன் கொடுத்திரு ந்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றி னான்.
மறுபுறம் நாரதரின் ஆலோசனைப்படி குபேரனும் காட்டுக்குச் சென்று, கடுந்தவம் செய்து, கங்காதரனை மகிழ்வித்து, பல வரங்கள் பெற்றான். சிவபெருமான், அவனை தேவர்களின் செல்வத்தை பொறுப்புடன் கவனிக்கும் பொக்கிஷ தாரனாக்கினார். மீண்டும் தவம் செய்து, சிவபெருமான் பிரசன்னமாகும்போது, அவரை தன்னுடனேயே வந்து இருக்கும்படி வரம் கேட்டான்.
சிவனும் அவன்வேண்டுகோளுக்கு இணங்கி, அவனை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமு ம் கொடுக்கும் சக்தியுள்ள விசேஷ வரத்தை அளித்தார். அதற்குப்பிறகான காலகட்டத்தில், குபேரன் மறுபடியும் அம்பாளை நோக்கித் தவம் செய்து, ராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். அந்த இடம்தான் கர்நாளி என்ற குபேரன் கோயிலிரு க்கும் தலம்.
இந்தக் கோயிலின் விசேஷம், இங்கு குபேரனுடைய விக்ரகமோ, படமோ கிடையாது. வெறும் சிவலிங்கம் மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கிரகத்தின் சுவரில் பார்வதியின் விக்ரகம் இருக்கிறது. பிராகாரத்தில் ஆஞ்சநேயர்,
பஹுச்சார் அம்மன் மற்றும் விநாயகர் சன்னதிகளும் உள்ளன.
குஜராத் செழிப்பாக இருப்பதற்கு இந்த குபேரன் கோயிலும் காரணம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அவரை வழிபடுவதற்கு அமாவாசை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடுகிறார்களாம்.
சுமார் மூவாயிரம் மக்களே வசிக்கும் இந்தக் கிராமத் தில் காயத்ரி, கீதா, சோமநாதர் தெய்வங்களின் கோ யில்களும் இருக்கின்றன். எனினும் குபேரன் கோயி ல் மகிமையே தனி!
அந்த குபேரன் கோயில் எங்கே இருக்கு:
குஜராத் மாநிலத்தில், வடோதராவிலிருந்து (பரோடா) சுமார் 60கி.மீ. தொலைவில் கர்நாளி கிராமத்தில் குபேரன் கோயில் உள்ளது.

நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா - நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம்-குறவர்களின் உலகம்!


குறவர்களின் உலகம்!
நரிக்குறவர்கள் பேசும் பாஷையின் பெயர் என்ன? அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவம் உண்டா ? நரிக்குறவர்களைப் பற்றி ஏதாவது புத்தகம் வெளியாகி உள்ளதா எனக் கேட்டு, ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
வீதியில் நரிக் கொம்பு விற்றுக்கொண் டும், பாசி மணி ஊசி மணி மாலைகள் விற்றுக்கொண்டும் அலையும் குறவர் களை சிறுவயது முதலே பார்த்திருக் கிறேன். ஆனால், அவர்கள் பேசும் பாஷையின் பெயர் என்னவென்று தெரியவில்லை.
குறவர்கள் பேசும் மொழியான ‘வாக்ரி போலி’ மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. அது ஹிந்தி, உருது, குஜராத்தி மொழிகளின் கலப்பு எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறவர்கள் தங்கள் இனத்துக்குள்ளா கவே திருமணம் செய்துகொள்வார்கள். வெளியாட்கள் குறப் பெண்ணை திருமணம் செய்துகொண்டால், அவளை தங்கள் இனத்துக்குள் சேர்க்க மாட்டார் கள். இனத் தூய்மை பேணுவது அவர்களின் இயல்பு.
குறவர் இனப் பெண்கள் மணவிலக் குப் பெற இயலும். பஞ்சாயத்துக் கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, ஒன்றுசேர்க்க முயற்சிப்பார்கள். அது சாத்தியமாகாத நிலையில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக் கோலை எடுத்து, மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடச் செய்வார்கள். அவ்வளவுதான், அவர்களுக்குள்ளான மணஉறவு முறிந்துவிட்டதாக அர்த்தம்!
திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தனியே வாழலாம். நரிக்குறவ மக்கள் பெண் குழந்தை பிறந்தால் கொண் டாடுவார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, மாப்பிள்ளைதான் பெண் ணுக்கு வரதட்சணைத் தர வேண்டும். கல்யாணச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளைக்கு சாமிச் சொத்து இருக்க வேண்டும்.. சாமிச் சொத்து என்பது மூதாதையர்கள் கொடுத்துப் போன சாமிப் பொருட்களாகும். அதா வது, வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள். இதை புனிதமாக வைத்து பாதுகாத்து வருவார்கள்.
குடிப்பதும், சினிமா பார்ப்பதும் அவர் களின் விருப்பமான பொழுதுபோக்கு கள். தங்களுக்கு என நிறைய கட்டுப்பாடுகள், ஒழுக்கவிதிகளைக் கொண்டவர்கள் அவர்கள். வயதான குறவர்களைப் பராமரிக்க வேண்டியது மகனின் கடமை. இறந்தவர்களை ரகசிய மாக புதைத்துவிட்டு போய்விடுவார்கள் என பிலோ இருதயநாத் குறிப்பிடுகிறார்
நரிக்குறவர்கள் சிவனை முதற்கடவு ளாகக் கொண்டாலும் காளியம்மன், மாரியம்மன், துர்க்கை போன்ற பெண் கடவுளர்களையும் வணங்குகிறார்கள். எருமையைப் பலியிடுவது அவர்களின் வழக்கம்.
குறவர் சமூகத்தினுள் எருமை பலியிடுவோர், ஆடு பலியிடுவோர் என்று இரண்டு பெரும்பிரிவுகள் இருப்பினும் அதிலும் உட்பிரிவுகள் உண்டு. குறவர்களின் சமையல் தனி ருசி கொண்டது. கறியை வேகவைத்து அதை சோற்றுடன் பிசைந்து சாப்பிடுவார்கள். அவர்களில் யாராவது இறந்துபோனால் அதே இடத்தில் ரகசியமாக புதைத்து விட்டு போய்விடுவது போன்ற நரிக் குறவர்களின் பண்பாட்டுக்கூறுகளை சுவாரஸ்யமாக, துல்லியமாக விளக்கு கிறார் பத்மபாரதி.
நரிக்குறவர்கள் தற்போது மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் பட்டியலில் உள்ளார்கள். அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
‘நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா - நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம்
பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா - காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்’
- என சினிமா பாடல் ஒன்றில் குற வனும் குறத்தியும் ஆடிப் பாடுவார்கள். அது வெறும் பாடல் மட்டுமில்லை; அவர்களின் வாழ்க்கை நெறி!

பழைய புத்தகக் கடை என்பது ஒரு புதையல் சுரங்கம். எப்போது என்ன கிடைக்கும் எனச் சொல்லவே முடியாது.


சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார்
புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல்.
எத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்.
பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்துவிடும். ‘‘ரொம்ப ரேர் புக் சார். 500 ரூபா குடுங்க’’ என்று ஆரம்பிப்பார்.
‘‘சும்மா படிக்கலாம் என நினைத்து எடுத்தேன். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’’ எனத் தவிர்த்துவிட்டு நடந்தால், சற்று பேரம் இறங்கிவரும். பழைய புத்தக வியாபாரிகள் தனி ரகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் பேரம் பேசுவதை விரும்பவே மாட்டார்கள். அவர்கள் சொல்கிற விலைதான். அதேநேரம் நாம் தொடர்ந்து அவரிடம் புத்தகம் வாங்கினால் அரிய புத்தகங்களைக் கூட இலவசமாகத் தந்துவிடுவார்கள்.
சென்னை மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடைகளின் சங்கமம். எரிந்து போவதற்கு முந்தைய மூர் மார்க்கெட்டில் நிறையப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அது போலவே ஓல்டு டெல்லியில் தரியாகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் கிதாப் பஜாரை முழுமையாகப் பார்வையிட ஒருநாள் போதாது. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும்.
புதுவையில் ஞாயிறு மாலை நடைபாதை புத்தகக் கடைகள் அதிகம் உண்டு. சென்னையில் திருவல்லிக்கேணி, மாம்பலம், அசோக்பில்லர், அண்ணா சாலை, சென்ட்ரல், அடையாறு, எக்மோர், மயிலாப்பூர் எனப் பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. திருச்சியில் மலைக்கோட்டை அருகில், மதுரையில் ரீகல் தியேட்டர் முன்பு, நேதாஜி சாலையில் நியூ சினிமா தியேட்டர் பக்கம் உள்ள சந்தில் பழைய புத்தகக் கடைகள் உண்டு.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில், பழநி பேருந்து நிலைய வாசலில், கோவை ராஜவீதியில், சேலம் ரயில் நிலையம் எதிரில், பெங்களுர் எம்ஜி ரோடு பிரிகேட் ரோடு, மற்றும் மைசூர் பேங்க் சர்க்கிள், காரைக்குடி மலர் லாட்ஜ் எதிரில் என ஒவ்வோர் ஊரிலும் சிறந்த நடைபாதை புத்தகக் கடைகள் இருக்கவே செய்கின்றன. .
ஒருமுறை அண்ணா சாலையில் உள்ள பழைய புத்தகக் கடையில் பிரெஞ்சு எழுத்தாளரான ழான் ஜெனேயின் தீப்ஸ் ஜெர்னல் என்ற அரிய புத்தகம் தற்செயலாகக் கிடைத்தது. கடைக்காரர் அதற்கு 400 ரூபாய் கேட்டார். அது சந்தையில் விற்பனையில் இல்லாத புத்தகம். பேரம் பேசி படியவில்லை. பரவாயில்லை விட்டுவிடு வோம் என மனமில்லாமல் அதை புத்தகக் குவியலிலேயே போட்டுவிட்டுத் திரும்பினேன்
நல்ல புத்தகத்தைப் பாக்கெட்டில் பணம் இல்லாத காரணத்தால் இழந்துவிட்டேனே என மனம் அடித்துக்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே புத்தகக் கடைக்குப் போனபோது அதே புத்தகம் கிடந்தது. கடையில் இப்போது புத்தகக் கடைக்காரரின் மகன் இருந்தார். அவரிடம் ஜெனேயை கையில் எடுத்து எவ்வளவு என்று கேட்டேன். ‘‘20 ரூபாய் கொடுங்கள்’’ என்று சொன்னார். ஆஹா அதிர்ஷ்டம் என உடனே பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். அறைக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தபோது புத்தகத்தின் முதல் பக்கத்தில் பிரபல நடிகர் ஒருவரின் பெயர் கையெழுத்து இடப்பட்டிருந்தது. அவர் ஜெனே எல்லாம் படிப்பவர் என்பது ஆச்சர்யமாக இருந்தது. அதை லண்டனில் வாங்கியிருக்கிறார் என்ற குறிப்பும் இருந்தது
பழைய புத்தகக் கடை என்பது ஒரு புதையல் சுரங்கம். எப்போது என்ன கிடைக்கும் எனச் சொல்லவே முடியாது. புத்தகம் தரும் மகிழ்ச்சிக்கு இணையாக எனக்கு வேறு எதுவுமில்லை. ராமபாணம் என்றொரு பூச்சி புத்தகத்துக்குள் உயிர் வாழும் என்பார்கள், ஒருவேளை நானும் ஒரு ராமபாணம்தானோ என்னவோ!

வீடில்லா புத்தகங்கள் --சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை.....


சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார்
சென்னை, அண்ணா நகரில் உள்ள சாலையோர புத்தகக் கடையில் ஒரு வயதானவரைச் சந்தித்தேன். குழந்தைகள் புத்தகமாகத் தேடி வாங்கிக் கொண்டிருந்தார். யாருக்காக அவற்றை வாங்குகிறார் என அறிந்துகொள்ள அவருடன் உரையாடத் தொடங்கினேன்.
''என்னுடைய பேரனுக்குத் தினமும் புத்தகம் படித்துக் காட்டுகிறேன். அதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள்'' என்றார். ''பேரனுக்கு எத்தனை வயது?'' ''எட்டு வயது நடந்து கொண்டிருக்கிறது. அவனுக்குத் தமிழில் வாசிக்க வரவில்லை. நான்தான் படித்துக் காட்டுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் படித்துக் கதைகள் சொல்கிறேன். இந்தக் கதைகளைப் படிக்கப் படிக்க நானே குழந்தையாகிப் போனது போல சந்தோஷமாக இருக்கிறது.''
''உங்கள் மகன் என்ன செய்கிறார்'' என்று கேட்டேன். ''அமெரிக்காவில் கணிப்பொறித் துறையில் வேலை செய்கிறான். பேரனும் அங்கேதான் இருக்கிறான்'' என்றார்.
''அமெரிக்காவில் உள்ள பேரனுக்காகச் சென்னையில் இருந்து கதைகளைப் படித்துக் காட்டுகிறீர்களா…'' என வியப்போடு கேட்டபோது அவர் சொன்னார்:
''அதுதான் டெக்னாலஜி வளர்ந்துவிட்டதே, இதில் என்ன சிரமம்? என்னுடைய லேப்டாப்பில் ஸ்கைப் இருக்கிறது. கேமரா முன் அமர்ந்து கதை சொல்கிறேன், பேரன் அமெரிக்காவில் இருந்து தினமும் இரவு 8 மணிக்கு அழைப்பான். நமக்கு அது காலை நேரம். இருவரும் கதைகள் பேசுவோம், இதனால் அவன் நன்றாகத் தமிழ் பேசுகிறான், ஒய்வு பெற்ற எனக்கும் மனது சந்தோஷமாக உள்ளது.
சில நாள் கதை படிக்க வேண்டாம் என்று சொல்வான், அன்றைக்குப் பாடல்கள் படித்துக் காட்டுவேன், சில சமயம் விடுகதை, பழமொழிகள் கூடச் சொல்வதுண்டு. எந்தக் காரணம் கொண்டும் வீட்டில் தமிழ் பேசுவது நின்று போகக்கூடாது. அதை ஒவ்வொருவரும் கடமையாகச் செய்ய வேண்டும். என்னாலான சிறிய முயற்சி இது. விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார்.
எத்தனையோ பேரின் பிள்ளைகள், பேரன்கள் அயல்நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேருக்கு இப்படிக் கதை படிக்கும் தாத்தா கிடைத்திருக்கிறார்? எத்தனை பேரன், பேத்திகள் தமிழில் கதை கேட்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தமிழை வளர்ப்பதற்கு எவ்வளவு எளிய, அருமையான முயற்சி இது. அவரைப் பார்க்கும்போது பெருமிதமாக இருந்தது!
நேரம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான கதைகளைப் படித்தோ, தெரிந்த கதைகளைச் சொல்லியோ யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யலாம். 10 பேர் தினமும் ஒரு கதை வீதம் பதிவேற்றம் செய்தால்போதும். ஒரு வருஷத்துக்குள் 3,650 கதைகள் இணையத்தில் பதிவேற்றமாகிவிடும்.
அதன் பிறகு உலகின் எந்த மூலையில் தமிழில் கதைகள் கேட்க விரும்புகிற குழந்தை இருந்தாலும் யூ டியூப் வழியாக இந்தக் கதைகளைக் கேட்கலாம்தானே?!

பின்விளைவு தெரியாமல், அம்மாக்கள் தூண்டி விடுவதால் வீடுகளில் பிரச்னை


சமீபத்தில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தோம்... திருமாங்கல்ய தாரணம் முடிந்த பின், நலங்கு ஆரம்பித்தது. அதில் ஒரு நிகழ்வு. மோதிரத்தை தண்ணீர் குடத்துக்குள் போட்டு, மணமக்களை எடுக்கச் சொல்வது. புரோகிதர் குடத்திற்குள் மோதிரத்தை போட்டார். மணமக்கள் வேகவேகமா கையால் துழாவி, மோதிரத்தை தேட ஆரம்பித்தனர். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த பெரியவர்களும், இள வயதினரும் மற்றும் குழந்தைகளும் உற்சாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகளின் தாயார் சத்தமாக, 'அம்மாடி... விடாதே... விட்டுடாதே... மோதிரத்தை எடு எடு...' என்று, கத்திக் கொண்டே இருந்தார். மணப்பெண்ணும் போட்டி போட்டு மூன்று முறையும் மோதிரத்தை எடுத்த வெற்றிக் களிப்பில், கைகளை உயர்த்தினார். அவள் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.
அப்போது புரோகிதர், 'கல்யாண பொண்ணெ... நீ ஜெயிச்சுட்டே... சந்தோஷம்...' என்று சொல்லி, மணமகனைப் பார்த்து, 'ஏம்பா மாப்பிள்ளை... நீ விட்டுக் கொடுத்தாயா...' என்றார். 'இல்லை...' என்றான் மணமகன். பின்னர், புரோகிதர் மணமகளின் அம்மாவைப் பார்த்து, 'ஏம்மா... உங்க பெண்ணுக்கிட்டே, வீட்டுக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அனுசரணையா வாழணும்ன்னு சொல்லித் தர வேண்டிய நீங்களே, 'விட்டுடாதே... பிடி... விடாதே... பிடி...' என சொல்லிக் கொடுப்பதா... பின்விளைவு தெரியாமல், இந்த அம்மாக்கள் இப்படி தூண்டி விடுவதால் தான், பல வீடுகளில் பிரச்னை உண்டாகிறது...' என்றார்.
பின் மணமக்களைப் பார்த்து, 'திருமண சமயத்தில் நடக்கும் நலங்கு, ஊஞ்சல் போன்ற அனைத்தும், உங்கள் இருவருக்கிடையே சங்கோஜத்தை போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதில், வெற்றி - தோல்வி கிடையாது. இன்று உங்களைச் சுற்றி இருக்கும் கூட்டம் அனைத்தும், சில மணி நேரத்தில் கலைந்து விடும்; வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப் போவது நீங்கள் தான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சந்தோஷ வாழ்வு வாழ வேண்டும். இருவரும் கை குலுக்கி, விட்டுக் கொடுத்து வாழ்வோம் என சொல்லுங்கள்...' என்றார்.
மணமக்களும் அவ்வாறே செய்ய, மங்கள அட்சதை தூவி, மனம் நிறைய வாழ்த்தினார் புரோகிதர். நல்லதோர் அறிவுரையை அம்மாக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் எடுத்துச் சொன்ன புரோகிதரை அனைவரும் பாராட்டினர்.

நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முள்ளே அடங்கியிருக்கும் சக்தி வெளிப்படும்போது, வெற்றி கிட்டுகிறது!


நம்முள்ளே அடங்கிய சக்தி வெளிப்படும்போது வெற்றி கிட்டுகிறது!
பால் குவளைகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் பால் பண்ணை ஆட்கள். அப்போது, அருகில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தாவிக் குதித்துக்கொண் டிருந்த இரண்டு தவளைகள், உற்சாக மிகுதியில் கொஞ்சம் அதிகமாகவே எகிறியதில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பால் குவளையில் விழுந்துவிட்டன.
பால் பண்ணை ஆள் இதைக் கவனிக்காமல் குவளைகளை மூடி சீல் வைத்து வண்டியில் ஏற்றிவிட்டான். தவளைகளின் பயணம் தொடங்கியது.
முதல் குவளையிலிருந்த தவளை, தான் ஒரு குவளையில் அடைக்கப் பட்டுள்ளதை உணர்ந்தது. தப்பிக்கத் துடித்தது. வேகமாக மேல் நோக்கிப் பலமுறை தாவியதில், மூடியில் அதன் தலை பலமாக அடிபட்டு, பாலிலேயே அது தன் உயிரைத் துறந்தது.
இரண்டாவது குவளையில் உள்ள தவளையும் தப்பிப்பதற்காக முதலில் மேலே தாவிக் குதித்தது. அதன் தலை மூடியில் இடித்தபோது அதற்கு வலித்தது. அது வெளியேறும் வழியல்ல என்று சுதாரித்து, வேறு வழியைப் பற்றிச் சிந்தித்தது.
தன் பலம் என்ன என்பதை ஆராய்ந்தது. தனக்கு நீந்தும் சக்தி உண்டு என்பதை நினைவுகூர்ந்து, பாலில் நீந்தத் தொடங்கியது.
அதன் வேகமான கால் அசைவினால் பால் கடையப்பட்டு, வெண்ணெய் திரண்டு பாலில் மிதக்கத் தொடங்க, தவளை அந்த வெண்ணெய் உருண்டையின் மேல் அமர்ந்து களைப்பாறியது.
குவளைகள் கீழே இறக்கப்பட்டு, பண்ணை ஆட்கள் மூடியைத் திறந்ததுமே அந்தத் தவளை தாவி, வெளியே குதித்தது.
ஆக... தவளையும் பிழைத்தது. .
நம்முள்ளே அடங்கிய சக்தி வெளிப்படும்போது வெற்றி கிட்டுகிறது!
பால் குவளைகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் பால் பண்ணை ஆட்கள். அப்போது, அருகில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தாவிக் குதித்துக்கொண் டிருந்த இரண்டு தவளைகள், உற்சாக மிகுதியில் கொஞ்சம் அதிகமாகவே எகிறியதில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பால் குவளையில் விழுந்துவிட்டன.
பால் பண்ணை ஆள் இதைக் கவனிக்காமல் குவளைகளை மூடி சீல் வைத்து வண்டியில் ஏற்றிவிட்டான். தவளைகளின் பயணம் தொடங்கியது.
முதல் குவளையிலிருந்த தவளை, தான் ஒரு குவளையில் அடைக்கப் பட்டுள்ளதை உணர்ந்தது. தப்பிக்கத் துடித்தது. வேகமாக மேல் நோக்கிப் பலமுறை தாவியதில், மூடியில் அதன் தலை பலமாக அடிபட்டு, பாலிலேயே அது தன் உயிரைத் துறந்தது.
இரண்டாவது குவளையில் உள்ள தவளையும் தப்பிப்பதற்காக முதலில் மேலே தாவிக் குதித்தது. அதன் தலை மூடியில் இடித்தபோது அதற்கு வலித்தது. அது வெளியேறும் வழியல்ல என்று சுதாரித்து, வேறு வழியைப் பற்றிச் சிந்தித்தது.
தன் பலம் என்ன என்பதை ஆராய்ந்தது. தனக்கு நீந்தும் சக்தி உண்டு என்பதை நினைவுகூர்ந்து, பாலில் நீந்தத் தொடங்கியது.
அதன் வேகமான கால் அசைவினால் பால் கடையப்பட்டு, வெண்ணெய் திரண்டு பாலில் மிதக்கத் தொடங்க, தவளை அந்த வெண்ணெய் உருண்டையின் மேல் அமர்ந்து களைப்பாறியது.
குவளைகள் கீழே இறக்கப்பட்டு, பண்ணை ஆட்கள் மூடியைத் திறந்ததுமே அந்தத் தவளை தாவி, வெளியே குதித்தது.
ஆக... தவளையும் பிழைத்தது. .
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முள்ளே அடங்கியிருக்கும் சக்தி வெளிப்படும்போது, வெற்றி கிட்டுகிறது!

தீபாவளி திருக்கதை - குபேர யோகம்!


குபேர யோகம்!
விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர். அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்.
தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர்.
வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.
அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார். ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.
''தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'' என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன். இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.
இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.

தீபாவளி திருக்கதை - திருவிளக்கை ஏற்றி வைத்தோம்.

.
.
திருவிளக்கை ஏற்றி வைத்தோம்...
தீபாவளி தினத்தில் தீபச்சுடரின் வெளிச்சம் படும் இடங்களில் எல்லாம் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும் எனச் சொல்லும் ஞானநூல்கள், இதற்குக் காரணமான ஒரு கதையையும் விவரிக்கின்றன.
அரிய வரங்கள் பல பெற்றிருந்த நரகாசுரன் தேவர்களை
யும் ரிஷிகளையும் பெரிதும் கொடுமைப்படுத்தினான். அவனால் பெரும் துன்பத்துக்கு ஆளான அனைவரும், துவாரகாபதியாம் ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்து சரண் புகுந்தனர். நரகனை அழித்து தர்மத்தை நிலைநாட்டும்படி வேண்டிக்கொண்டனர்.
பகவானும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து, ஆறுதல் கூறியதுடன், சத்யபாமாவின் துணையோடு அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டார். இதுதான் தக்க தருணம் என்று காத்திருந்த பாணாசுரன் முதலான வேறு பல அசுரர்கள், பாற்கடலில் இருக்கும் திருமகளை எப்படியாவது கவர்ந்து செல்ல திட்டமிட்டார்கள்.
இதை அறிந்த திருமகள் என்ன செய்தாள் தெரியுமா? அருகிலிருக்கும் தீபச்சுடரில் ஐக்கியமாகிவிட்டாளாம்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் தீபாவளித் திருநாளில்தான்.
ஆகவே, அன்று திருவிளக்கு முதலாக வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்து, லட்சுமிதேவியை தீபலட்சுமியாக வழிபடுவார்கள்.
அப்போது, ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின்
கீழ்க்காணும் பாடலைப் பாடி அலைமகளை வழிபட, நமது வறுமைகள் யாவும் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.
நமோ (அ)ஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோ (அ)ஸ்து பூமண்டல நாயிகாயை
நமோ (அ)ஸ்து தேவாதிதயாபராயை
நமோ (அ)ஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை.

திருஷ்டி என்பது என்ன‍? வயதுக்கேற்ற‍படி திருஷ்டி கழிப்ப‍து எப்ப‍டி? – ஒரு பார்வை


திருஷ்டி என்பது என்ன?
ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்து வதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.
கண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனி ன் மனநிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும்.
சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட் பார்வை பெற்ற ஒருவா் மேன்மையடையலாம். பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப்பாதிப்பு ஏற்படுவதைக்கண்திருஷ்டி என்று கூறுவா்.
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும்,ஆசைகளும் உண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும் பொழுது, சிலரு க்கு உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.
ஒரு மனிதன் வாழ்வில் எந்த நிலையில் எப்படி வரவேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகும்.இதை விதி என்றும் சொல்லலாம். நல்ல எண்ணம்,அடுத்தவர் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவது.நல்ல பண்பு , தர்ம குணம்,தன்னை போல பிறரை எண்ணுவது இந்த குணநலன்கள் உள்ள நபரை திருஷ்டி ஒன்றும் செய்யாது.
மற்றவர்வகள் நம்மை நல்ல விதமாக வோ, தீய விதமாகவோ நினைக்க வேண் டும் என்பதை,நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் நாம் மற்றவர்களை எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல், பொ றாமை கொள்ளாமல் நினைத்து, நம் முடைய செயலையும், கடமையையும் செய்தாலே போதும், நம்முடைய வளர்ச்சியை,எந்த கண் திருஷ்டியாலும் தடுக்க முடியாது.
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.
வயதுக்கேற்ற‍படி திருஷ்டி கழிப்ப‍து எப்ப‍டி?
குழந்தை திருஷ்டி;
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று. நெற்றியி லும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந் தையின் திருஷ்டி யை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.
வாலிப திருஷ்டி;
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி கிட்டு இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.
பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டி யை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிரு ந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங் கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள் ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும். பிள்ளையையும் அவ்வா றே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.
இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத் துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமி ருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.

Friday, 9 September 2016

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!!

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.
இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.
ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.
அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..
காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது.
“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.
ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.
குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.
பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.
இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.
இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.
முடிவாக, அதோ….கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்…..வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், இதென்ன….ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.
குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.
ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.
இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.

ஊஞ்சல் ஆடுவது எதற்காக …? ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.


ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.

வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது….!!!!
* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது….!!!!