Friday, 8 July 2016

பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்..


சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர்.
சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து
“இது என்ன பழம்” என்றார்.
“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு
“இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார்.
“இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது.
பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்”

No comments:

Post a Comment