திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ்
ஒரு ஆடவனின் வாழ்க்கையில் மிக நடக்கும் முக்கியமான தருணம் எது என்று கேட்டால், அது திருமணம்தான். திருமணத்தின்
மூலம்வரும் உன்னத பந்தம் மனைவி. இந்த மனைவி நல்லவளாக இரு ந்துவிட்டால் உங்களைப்போல் ஒரு அதிர்ஷ்டசாலி யாரும் இல்
லை. அவளே கெட்டவளாக இருந்து விட்டால் உங்க ளைப்போல துரதிஷ்டசாலி யாரும் இல்லை.
சரி கதைக்கு வருவோம். ஒரு தத்துவ ஞானியி டம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க் க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும்? என சொல்லித் தாருங்கள் என்றான்
அதற்கு அவர்

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .
உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .
குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலைகுனிய வேண்டிவரும்.
பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும்
மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண
மாட்டாய்
வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகு வர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்
கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய்
படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்

பணக்காரியை முடிக்காதே! எடுத்ததற் கெல்லாம் எனது பணம் என்பாள்
ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும்
அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும்

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்
கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்
அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள்
ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய்
ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள்
ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப் போவாள்

என்று உபதேசித்தார்
வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்கவேண்டாம் என்று சொல் லியிருக்கலாமேஎன்றான் கோபத்துடன்….
No comments:
Post a Comment