Thursday, 28 July 2016

உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்....


ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..
”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.

Thursday, 21 July 2016

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.



பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.. இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ...
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல். மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது. நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது. உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

Wednesday, 20 July 2016

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...!!


தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;
மதுரையைக் கடக்கிறது வைகை;
நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;
தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;
திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;
என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.
வற்றாத ஒரு நதியுமில்லை;
வானளாவிய ஒரு கோவிலுமில்லை;
இதிகாசத்திலே இடமுமில்லை;
எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;
இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....
அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.
இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;
ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;
ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.
மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.
கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.
வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.
எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.
உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.
எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை.
அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;
குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி';
மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை';
ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,
அத்துப்படியான ஆங்கிலம்,
இதமான காலநிலை,
சுவையான சிறுவாணி,
அதிரடியில்லாத அரசியல்...
இவற்றையெல்லாம் தாண்டி,
அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது.....
அந்த பெருமையுடன் எல்லோரும் இறுமாப்பாய் சொல்வோம்...
என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

Tuesday, 19 July 2016

உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!


உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக இத கொஞ்சம் படிங்க...!!!!
தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.
அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?
என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.
கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.
நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான்.
அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.
குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர்.
ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.
அதே போல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!
உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே!
யாரும் உங்களுக்கு இணை கிடையாது!

Thursday, 14 July 2016

திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்கா


திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ்
ஒரு ஆடவனின் வாழ்க்கையில் மிக நடக்கும் முக்கியமான தருணம் எது என்று கேட்டால், அது திருமணம்தான். திருமணத்தின்
மூலம்வரும் உன்ன‍த பந்தம் மனைவி. இந்த மனைவி நல்ல‍வளாக இரு ந்துவிட்டால் உங்களைப்போல் ஒரு அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. அவளே கெட்ட‍வளாக இருந்து விட்டால் உங்க ளைப்போல துரதிஷ்டசாலி யாரும் இல்லை.
சரி கதைக்கு வருவோம். ஒரு தத்துவ ஞானியி டம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க் க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும்? என சொல்லித் தாருங்கள் என்றான்
அதற்கு அவர்
அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .
அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .
உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .
குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலைகுனிய வேண்டிவரும்.
பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும்
மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காணமாட்டாய்
வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகு வர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்
கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய்
படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்
படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாத த்துக்கு வருவாள்
பணக்காரியை முடிக்காதே! எடுத்ததற் கெல்லாம் எனது பணம் என்பாள்
ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும்
அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும்

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்
அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள்
ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய்
அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலு ம் அமைதியாகவே இருப்பாள்
ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள்
ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப் போவாள்
தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும்
என்று உபதேசித்தார்
வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்கவேண்டாம் என்று சொல் லியிருக்கலாமேஎன்றான் கோபத்துடன்….

தாத்தா! படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்



ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக்கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , " தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,

" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் ".
"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
" எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".
இளைஞன் கேட்டான்,
" என்ன உதவி தாத்தா? "
பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை
எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில்
கொட்டினார். பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.

பெரியவர் சொன்னார்,
" தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம்
தண்ணி பிடியேன்"
இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.
இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர்
நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும்
தரையில் ஒழுகிப்போனது. பெரியவர் சொன்னார்,

" இன்னும் ஒரு முறை " . இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில்
கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப் போனது. பெரியவர் கேட்டார்,
" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் " . இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்.
"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல்
ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப்படித்தால் எனக்கென்ன வந்தது? "
தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.
" தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க "
என்றான்.

அவர் புன்னகையோடு சொன்னார்,
" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்
போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது? " என்றார்.
இளைஞன் சொன்னான் ,
" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது "
"இப்போ பார் "என்றார்.

தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர்
பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு
முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.

அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு
பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது. ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார். 

உள்ளே பார் உன்னைத் தெரியும்..! காதால் கேட்டதையும் யார்யாரோ சொன்னதையுமே நமக்கான கடைசி வட்டமென்று எண்ணிக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்..!!


ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பிவருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.
பின் வளர்ந்து பெரிதாகிப்போன அந்த யானையை காட்டிற்கு கொண்டுபோய் விட்டால் போதும், வெறி வந்தாற்போல் பெரியப் பெரிய மரங்களையெல்லாம் சர்வசாதரணமாகப் பிடுங்கி தரையில் எறியுமாம். அட்டகாசம் தாங்கமுடியாமல் யானைப்பாகன் அந்த யானையை ஓட்டிவந்து அந்தச் சிறிய கொம்பில் கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குப் போய்விடுவானாம். அந்த யானை மீண்டும் தன்னை பழையப்போலவே கருதிக்கொண்டு மறுநாள் அந்த யானைப்பாகன் வந்து யானையை அவிழ்த்துவிடும்வரை அந்தக் கயிற்றை இழுத்துக்கூட பார்க்காதாம்.
காரணம், அதைப் பொறுத்தவரை, அந்தக் கயிறு ஒரு அறுக்கமுடியாத கயிறு. சிறு வயதிலிருந்து இழுத்து இழுத்துப் பார்த்து அறுக்கமுடியாமல் போகவே ஒரு கட்டத்தில் இனி அதை அறுக்கவே முடியாதென்று எண்ணிக்கொண்டே அந்த யானை வளர்ந்துவந்ததால், அந்த யானைக்கு தான் வளர்ந்து காட்டையழிக்கும் சக்தியை பெற்றபோதுகூட அந்த சிறிய கொம்பை பிடுங்கிக்கொண்டு ஓடமுடியாது என்றே எண்ணம் இருந்துள்ளது.
நாமும் இப்படித்தான், இந்த மரத்தில் கட்டிவைத்த யானையைப் போலவே சிறுவயது எண்ணங்களையே மனதில் சுமந்து வாழ்ந்துகொண்டுள்ளோம். வளர வளர அறுபடவேண்டிய பல நம்பிக்கைக்குரிய கட்டுகளை அறுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பயணிக்காமல்,

காதால் கேட்டதையும் யார்யாரோ சொன்னதையுமே நமக்கான கடைசி வட்டமென்று எண்ணிக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்.

Wednesday, 13 July 2016

கொசுக்கள் ஏன் எல்லோரையும் கடிக்காமல் சிலரை மட்டும் கடிக்கிறது?


சிலருக்கு கொசுக்கள் என்றால் காந்தம் போல. எப்போதும் அவர்களை நாடி வந்து கடிக்கும். ஆனால் சிலருக்கோ அது அப்படியே நேர் எதிர். ஏன் அது சிலரின் மீது மட்டும் இரத்தத்தை உறிஞ்சுகிறது? சிலர் சாயங்காலம் வெளியே வந்தாலும் கூட அவர்களை அவைகள் தொடுவது கூட அல்ல? இந்த அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு சரியான கலவையில் பார்வையையும் வாசனைகளையும் அளிப்பார்கள். ஒரு கூட்டத்தில் தமக்கான இலக்குகள் யார் யார் என்பதை, கொசுக்கள் தன் உணர்வுகளை கொண்டு கண்டுபிடித்து விடும்.

சரி, உத்திரவாதமாக உங்களை கொசு கடிப்பதற்கான 14 காரணங்களைப் பற்றி சற்று பார்க்கலாமா?

01. தொடர்ச்சியாக மூச்சு விடுதல்

காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை கொசுக்கள் சுலபமாக தெரிந்து கொள்ளும். நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக
மூச்சு விடுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களிடம் இருந்து இரத்தம் உறியப்படும். கார்பன் டை ஆக்சைடு இருந்தால் அருகிலேயே உயிருள்ள, சுவாசிக்கின்ற, இரத்தம் நிறைந்த மிருகம் அருகில் உள்ளது என்பதை அது தெரிந்து கொள்ளும். ஒரு முறை அது அதனை உணர்ந்து விட்டால், மூலத்தை அடையும் வரை, கார்பன் டை ஆக்சைடு வாயுவை பின்பற்றி பரந்த வண்ணம் இருக்கும்.

02. குளிப்பதை தவிர்ப்பது

எந்தளவுக்கு உங்களிடம் இருந்து நாற்றம் வருகிறதோ, கொசுக்களுக்கு உங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம். டியோடரண்ட்டை கை விடுங்கள், சோப்பு போடுவதை நிறுத்துங்கள், பிறகு என்ன கொசுக்களை அடிக்க துவங்குங்கள்.

03. நடப்பது அல்லது ஓடுவது

கொசுக்கள் தங்களின் பலி யார் என்பதை முதலில் தங்களின் பார்வையை வைத்து தீர்மானிக்கும், இரண்டாவதாக மனிதர்களின் அசைவை வைத்து தங்களின் குறியை தீர்மானிக்கும். வெளியே செல்லுங்கள், நடை கொடுங்கள், பூங்காக்களில் ஓடுங்கள், ஜாகிங் செல்லுங்கள், மேலேயும் கீழையும் குதித்து உடற்பயிற்சி செய்யுங்கள்! எப்படி தானாக கொசுக்கள் வந்து உங்களை கவ்வுகிறது என்பதை மட்டும் பாருங்கள்.

04. அதிகமாக வியர்த்தல்

வியர்ப்பது என்பது கொசுக்களை ஈர்க்கும் சிறப்பான கலவை ஆகும் – ஈரப்பதமும் வாசனையும். கொளுத்தும் கோடைக்காலத்தில், பகல் அல்லது சாயங்கால நேரம் வெளியே சென்று வியர்வை சிந்த வேலைப்பாருங்கள். கொசுக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றிகளை கூறும்.

05. வெதுவெதுப்புடன் இருப்பது

வெப்பத்தை தேடி அலையும் ஏவுகணைகளாக கொசுக்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவுக்கு வெப்பத்துடன் இருக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் உங்களை கண்டு கொள்ளும். தொலைவில் இருந்து அவைகளால் உங்கள் உடல் சூட்டை உணர முடியாமல் போனாலும் கூட, சில அடி தொலைவில் இருக்கும் போது உங்களின் வெப்பத்தை அவை எளிதாக உணரும்.



06. இருண்ட நிறத்தில் ஆடையணிவது

இருண்ட நிறங்களுக்கு, குறிப்பாக நீல நிறம் என்றால் கொசுக்கள் வேகமாக செயலாற்றும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளது. வேண்டுமெனில் பழுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை தூக்கி எறியுங்கள். மாறாக ஜீன்ஸ் மற்றும் கருப்பு டீ-ஷர்ட் அணியுங்கள். இப்போது கொசுக்களுக்கு நீங்கள் தான் சுலபமான இலக்காக மாறி விடுவீர்கள். நேராக உங்கள் மீது தான் தரையிறங்கும்.

07. பெர்ஃப்யூம் அல்லது வாசனை திரவியங்கள்

உங்கள் உடல் நாற்றத்தை உங்களால் பொறுக்க முடிவில்லை என்றால் கொசுக்களை ஈர்க்க எதிர்மறையான மற்றொரு விஷயத்தை செய்யலாம். அளவுக்கு அதிகமான பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள். குறிப்பாக மலர் வாசனைகள் என்றால் கொசுக்களை வேகமாக ஈர்க்கும்.

08. உங்கள் சருமத்தின் மீது ஆல்ஃபா ஹைட்ராக்ஸி பொருட்களை பயன்படுத்துதல்

நம் உடல் இயற்கையாக உற்பத்தி செய்யும் லாக்டிக் அமிலம் கொசுக்களை வேகமாக ஈர்க்கும். பல சரும பராமரிப்பு பொருட்களில் லாக்டிக் அமிலமும் கலந்துள்ளது. இதனால் அவைகளை பயன்படுத்தும் போது உங்களுக்கும், இரத்தத்தை உரியும் கொசுக்களுக்குமான கெமிஸ்ரி சூப்பராக ஒத்துப்போகும். “ஆல்ஃபா ஹைட்ராக்ஸி” என பொருட்களின் லேபில் மீது இருந்தால், அது அதிகமான அளவு லாக்டிக் அமிலத்தை அளிக்கும்.

09. உங்கள் சாக்ஸை மாற்றாதீர்கள்

ஆம், அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையிலான விஷயம் இது. பொதுவாக பாதங்களின் வாசனை என்றால் கொசுக்களுக்கு பிடிக்கும். பூச்சியியல் வல்லுநர் டேனியல் எல்.க்ளைன், கொசுக்களை கவர்வதற்காக ஒரு அழுக்கு சாக்ஸ் ஒன்றை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தார். 3 நாட்கள் பழமையான அந்த சாக்ஸை கொசுக்களால் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, மனித பாதங்களில் உருவாகும் பாக்டீரியாக்களினால் பெருமளவு கொசுக்கள் மொய்க்கக்கூடும்.

10. பீர் குடித்து சீஸ் உண்ணுங்கள்

ஒரு ஹோட்டலில் பீர் குடிப்பவர்களை தான் கொசுக்கள் அதிகமாக குறி வைக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீஸ் கலந்து செய்யப்பட நொறுக்குத் தீனிகளுடன் பீர் குடித்து மகிழும் போது, தாக்குதலுக்கு நீங்களே தயாராகி கொண்டிருக்கிறீர்கள். லிம்பர்கர் சீஸ் என்பது உங்கள் மீது நாற்றத்தை உண்டாக்கும் அதே பாக்டீரியாவை கொண்டு செய்வதாகும்

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்!


குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்.

ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.
ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது. அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது. மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும்.
வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது!
பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.
பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும். சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.
ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.
மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும். அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.
சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும். ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும். அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.
குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும். இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்

தொழில் மரியாதையும் சுய மரியாதையும்..!


செருப்புக் கடைக்கு ஒரு கஸ்டமர் சென்றார். கடையில் உள்ள பணியாளர் அவரை வரவேற்று அழைத்து, அவருக்கு செருப்பை எடுத்துக்காட்டினார்.. கஸ்டமரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.
இது செருப்பு வாங்க வந்த கஸ்டமருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார் கஸ்டமர்..... ஆனாலும், பணியாளர் விடவில்லை...
பணியாளர் தொடர்ந்து அவருக்கு உதவினார். கஸ்டமர் பெருந்தன்மையாக சொன்னார் "அய்யா! நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது"
பணியாளர் சிரித்தபடி சொன்னார்.
"இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், நீங்கள் நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது என்னுடைய சுய மரியாதை!
கடைக்குள் நீங்கள் நூறு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நான் நிறுத்த மாட்டேன். இது என்னுடைய தொழில் மரியாதை.

Friday, 8 July 2016

பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்..


சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர்.
சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து
“இது என்ன பழம்” என்றார்.
“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு
“இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார்.
“இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது.
பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்”

கணவன் மனைவி.... ஒவ்வொரு ஆணுக்கும் அவன் வாழ்கையில் கிடைக்கிற மிகப்பெரிய பரிசே அவன் மனைவி மட்டுமே.



ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. 

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கி்ன்றனர். 

அவளுக்காக தன் உடை. நடை. பேச்சு... இப்படி எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான் கணவன்.


தினமும் காலையில் எழுந்தவுடன் அவள் முகத்தில் தான் முழிப்பான். இரவு 7Pm... வீடு வந்துவிடுவான். 

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவாளி தான். அப்படிதான் கொஞ்சிக்கொண்டு விளையாடுவார்கள்.

.
அவளுடன் சேர்ந்து Cupl. Dacs... ஆடுவது வீட்டில் இருவரும் ரோமியோ ஜீலியட் நாடகம் நடிப்பது... இப்படி ஒரு குழந்தை பிறக்கும் வரை அன்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தனர்.


ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு கனவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. அன்று முதல் அவர்களுக்குள் இடைவெளி வந்தது. 

,

அடிக்கடி சண்டையிட்டு கொண்டனர். அவன் மனைவியுடன் சரியாக பேசியே 2 மாதங்கள் ஆயிற்று.

ஒருநாள் இரவு அவன் மனைவி "இப்போது என் மேல் உனக்கு காதல் இல்லைடா!. உனக்கு பணம் தான் பெரிது! நான் வீட்டை விட்டு போறேன்! என்னை தேடாதே!" என்று ஒரு கடிதம் எழுதி கட்டிலில் போட்டுவிட்டு இவள் கட்டிலுக்கு அடியில் ஒழிந்துக்கொண்டாள்...

வீட்டிற்கு வந்த கணவன் "கதவு ஏன் திறந்திருக்கிறது!" என்று சத்தமிட்டுக்கொண்டே மனைவியை தேடுகிறான். 



அப்போது கட்டிலில் இருந்த கடிததை எடுத்து படித்து அதில் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு Call செய்கிறான். "மச்சீ பிசாசு" போய்டாடா!" இனிமே எனக்கு"... என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்.


இதை கேட்டவள் வாயை பொத்திக்கொண்டு குழுங்கி குழுங்கி அழுகிறாள். "

அய்யோ எவளையோ வச்சிருக்கான் போல" நான் நினைத்தது சரியாகிவிட்டதே" என்று புளம்பிக்கொண்டே கட்டிலில் கனவன் எழுதியதை எடுத்து படிக்கிறாள்.

"அடி லூசு பொண்டாட்டி! கட்டிலுக்கு கீழே உன் காலு தெறிகிறதடி!" என் உயிர் நீதான் என்றேன்! நீ சென்றுவிட்டால் நான் செத்துப்பொய்ருவேன்டி!" 


இதை படித்தவள்
"ஹான்" டேய் பொறுக்கி நா எங்கும் போகலடா" எங்கடா இருக்க புருசா"! என்று அலறிக்கொண்டே கனவனை தேட தன் மனைவியை பார்த்து கை நீட்டி சட்டையை விலக்கி தனது மார்பை காட்டி ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறான் கனவன். 

"ஹான்" என்று வேகமாக ஓடிவந்தவள் அவன் மார்பில் முகம் பதித்து கட்டியனைத்து அழுகிறாள்.
(
, (காதலில் சிறந்த காதலே கனவனும் மனைவியும் காதலிப்பதுதான்.

பெண் என்பவள் வலைந்த எலும்பினால் படைக்கப்பட்டவள் அதை வலைக்க நினைத்தால் வலையமாட்டாள் இரண்டாக உடைந்துவிடுவாள். 

ஒவ்வொரு ஆணுக்கும் அவன் வாழ்கையில் கிடைக்கிற மிகப்பெரிய பரிசே அவன் மனைவி மட்டுமே.
அதனால்தான் ஆண்கள் கடன் வாங்கினால் தன்னுடைய பெயரிலும். 
சொத்து வாங்கினாள் தன் மனைவியின் பெயரில்தான் வாங்குகின்றனர். அதற்கு காரணம் கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் சொத்து என்றால் அது என் மனைவி மட்டுமே என்று அர்த்தம்.

Tuesday, 5 July 2016

கோபம்... ஒரு... சாபம்... "நமது பலமும், பலவீனமும்..."


ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், மற்றும் அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்...
இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்...
வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.
அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.
அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது.
அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.
மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.
அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.
அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.
அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்ட அர்ஜுனன், அவ்வுருவத்தைத் தாக்கினான்.
அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.
அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது.
அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.
பலராமர் காவல் இருந்தார்.
அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது.
அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.
பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.
பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார்.
அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.
அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறாய்?" என்றது அவ்வுருவம்.
"உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான்..." என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்.
அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.
கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. 
கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.
ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது.
பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.
இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.
அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, "நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்..." என்று கூற, இருவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்...
தொடர்ந்து, ஸ்ரீகிருஷ்ணர், 
"நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்...
உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது...
ஆனால், நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது...
வம்பு சண்டைக்கு வருபனிடம் கோபத்தை விட்டு, விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்...
கோபத்தைக் குறைப்பவனே சிறப்புடன் வாழ்வான்...
கோபத்தை விட்டவனே ஞானியாவான்..." என்றார்.
-------------------
நம்மை பலவீனமாக்கும்
கோபத்தை குறைக்க சில பயிற்சி முறைகளை பின்பற்றலாம்...
1. கிடைக்கும் நேரத்தில்... 
சரியான முறையில் மூச்சு பயிற்சியினை, சரியான குருவிடம் கற்று தெளிந்து செய்யலாம்...
3. சில முக்கியமான யோகாசனங்களை பழகி கொண்டு வழக்கமாக செய்மாக செய்யலாம்...
2. அவ்வப்போது சவாசனம் (சாந்தியாசனம்) செய்யலாம்...
3. சரியான உணவுகளையும், பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளுதல் மிகஅவசியம்...
4. மனதையும், உடலையும் இலகுவாக்கும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்...
5 . உற்சாகமான விளையாட்டு பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாம்...
கோபத்தை குறைப்போம்...
குணத்தை வளர்ப்போம்...

வெந்நீரின் பயன்கள் !


1. ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
2.வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
3. காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும்
4.உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
5.எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
6.மூக்கு அடைப்பா? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!
7.வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
8.வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.
9.அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
10.வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
Must Visit & Like our page : fb.com/OurErode
11.வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.
12.நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
13.மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.
14.கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
15.ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.
16.இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
17. அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!