Tuesday, 31 May 2016

300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம் உத்தரகோசமங்கை கோயிலில் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு

300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம்

உத்தரகோசமங்கை கோயிலில் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங் கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம், சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே. ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சிவலிங்கத்தில் இருந்து தோன்றியவை 64 சிவமூர்த்தங்கள் (வடிவங்கள்). இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என ஆகமங்கள் கூறுகின்றன. இம்மூர்த்தங்களைச் சுருக்கி, சோமாஸ்கந்தர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், உமா மகேஸ்வரர், வீரபத்ரர், பிட்சாடனர் உள்ளிட்ட இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும். சிவபெருமான் பத்மபீடத்தின் மீது ஒரே காலுடன் சமபங்கமாக நின்ற நிலையில் இருக்க, அவரது இடையின் வலப்பக்கம் பிரம்மாவும், இடப்பக்கம் விஷ்ணுவும் இணைந்து தோன்றுவது ஏகபாதமூர்த்தி திருக்கோலம். ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது, உலகமே நீரில் மூழ்கி அழியும். அக்காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையம்மையாகிய சக்தியும் இந்த ஏகபாதமூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கி விடுவர். ஊழிக்காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும், வேதங்களும் கூறுகின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாகவும், தஞ்சமடையும் இடமாகவும் ஏகபாதமூர்த்தி இருக்கிறார். ஏகபாதமூர்த்தி சிலைகள் தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப் படுகின்றன. பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கால் வளைந்த நிலையிலும், முன்னிருகைகள் வணங்கி ய நிலையிலும் காணப்படுவதாக ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைக்கப்படுவது மரபு. இத்தகைய ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் கோயில் மண்டபத் தூண்களில் அமைக்கப்பட்டி ருக்கும். திருக்கோகர்ணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், புதுமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மண்டபத் தூண்களில் ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
உத்தரகோசமங்கை
உத்தரகோசமங்கையில் மரகத நடரா ஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவகோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் உள்ளது. இங்குள்ள ஏகபாதமூர்த்தி சிற்பத்தில் நின்ற நிலையில் இருக்கும் சிவன், முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரைகளுடனும், பின்னிரு கைகளில் மான், மழுவை ஏந்தியும் காட்சி தருகிறார். பிரம்மா மூன்று தலைகளுடன் காணப் படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர். விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய முத்திரையுடன் உள்ளன. மற்றொரு கையில் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர். மரகத நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710 வரை சேது நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம். உத்தரகோசமங்கையில் உள்ளதை போலவே, சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலிலும், நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்கு தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டுங்கள்....

குழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டுங்கள்
child1_2285546f.jpg
 
புத்திசாலித்தனமும் கல்வித் திறனும் குழந்தைகளுக்குக் கிடைப்பதற்கு எது காரணம்?
 
“அப்பா, நான் முதல் ரேங்க் வாங்கிவிட்டேன்!” என்று ஒரு பிள்ளை பெருமையுடன் தன் மதிப்பெண் சான்றிதழைத் தந்தையிடம் காட்டுகிறான். “அதிலென்ன ஆச்சரியம், நீ என் பிள்ளை ஆச்சே!” என்று தகப்பனார் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார்.
 
அடுத்து அம்மா, தான் தினமும் பிள்ளைக்குக் கரைத்துக் கொடுக்கும் ஓர் ஆரோக்கிய பானத்தின் ஜாடியை விஷமச் சிரிப்புடன் உயர்த்திக் காட்டுகிறார். இந்த விளம்பரத்தை அடிக்கடி எல்லாத் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருக்கிறோம்.
 
தனது பரம்பரையின் புத்திசாலித்தனமும் கல்வித் திறமையும் தனது பிள்ளைக்கும் வந்திருக்கிறது என்கிறார் அப்பா. தான் அவனுக்கு ஊட்டச்சத்துகளை ஊட்டி வளர்த்ததால்தான் அவன் படிப்பில் சிறந்து விளங்குகிறான் என்று அறிவிக்கிறார் அம்மா. யார் சொல்வது சரி?
 
சில நூறு மாணவர்களின் ‘ஐ.க்யூ’ எனப்படும் புத்திக் கூர்மையை அளவிட்டதுடன், அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை மற்றும் முன்னோர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களையும் திரட்டி ஆராய்ந்து, ஒரு மாணவரின் கல்வித் திறன் எந்த விதமான காரணிகளைப் பொறுத்திருக்கிறது என ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வர்கள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அண்மையில் ஒரு முதல்கட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
 
ஐ.க்யூ வளர்ச்சியின் காரணங்கள்
 
மரபியல் காரணிகளுடன் சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியத் தரம், போஷாக்கு, வளர்ப்பு ஆகியவையும் பிள்ளையின் ஐ.க்யூவை வளர்ப்பதில் பங்குவகிக்கின்றன. மரபியல் கூறுகளுடன் பெற்றோரின் நடவடிக்கைகளும் ஐ.க்யூ அபிவிருத்தியில் பங்களிக்கின்றன. குறிப்பாக, சிசுக்களின் மூளை உருவாகும் காலகட்டத்தில் அவை ஐ.க்யூவை வளர்க்கும் மூளையின் சுற்றுகள் உருவாக உதவுகின்றன. அதன் நற்பயன்களைச் சிசுப் பிராயத்திலேயே காண முடியும்.
 
ஆய்வுக்குட்பட்ட சிறார்களில் வறிய குடும்பத்தினரும் இருந்தனர். அவ்வாறான சில குடும்பங்களில் மூத்தவர்கள் அன்புடன் பழகிக் கதை சொல்லவும் அரட்டையடிக்கவும் செய்தனர். விடுகதைகளும் விளையாட்டுகளும் என்று பொழுது கழிந்தது. வேறு சில வறிய குடும்பங்களில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாதிருந்தபோதிலும் பெரியவர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லை.
 
இவர்களில் முதல் வகையினரின் ஐ.க்யூ. கூடுதலாக இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்தபோது மொழிப் பயன்பாட்டிலும் கணிதத்திலும் அவர்கள் மேம்பட்டிருந்தனர். சிசுப் பருவத்தின் ஆரம்பகால அனுபவங்கள் ஐ.க்யூவை மேம்படுத்துவது மெய்ப்பட்டது.
 
பிறந்த சிசுவின் மூளையில் பல நூறு கோடி செல்களும் நியூரான் இணைப்புகளும் உள்ளன. கருப்பை வாசத்தின்போதே சுவாசம், இதயத் துடிப்பு போன்ற ஜீவாதாரச் செயல்களுக்கான நியூரான் இணைப்புகள் தோன்றிவிடும். பிரசவிக்கப்பட்ட பின், அது அனுபவிக்கும் ஒலி, ஒளி, தொடுதல்கள் போன்ற புலனுணர்வுகள் கூடுதலான நியூரான் இணைப்புகளை உண்டாக்கும்.
 
சிசு வளர வளர மூளை செல்கள் உடலின் பிற செல்களுடன் இணைப்புகளை வளர்த்துக்கொள்கின்றன. அவையே அதன் நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, கண்ணின் பார்வை நரம்பு மூலம் வரும் மின் சமிக்ஞைகளைப் பார்வைப் புறணி புரிந்துகொண்டு மற்ற இணைப்புகள் மூலம் பிற உறுப்புகளுக்குத் தேவைக்கேற்றபடி இயங்க ஆணை அனுப்புகிறது. ஒரு குறிப்பிட்ட அனுபவம் திரும்பத் திரும்ப ஏற்படும்போது அத்தகைய இணைப்புப் பாலங்கள் வலுப்பெறு கின்றன.
 
இரண்டு வயது முடிவதற்குள் மூளையில் மூன்று லட்சம் கோடி நியூரான் இணைப்புகள் உருவாகிவிடுகின்றன. இணைப்பு ஏற்படாத அல்லது பயன்படாத செல்களும் நரம்பு இணைப்புகளும் அழிந்துபோகும்.
 
வாய்ப்பு வாசல்
 
வாழ்க்கை அனுபவங்களுக்கு மூளை பழகுவது ஒரு கால அட்டவணையின் பிரகாரம் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இணைப்பு ஒரு காலகட்டத்தில்தான் ஏற்படும். அதை வாய்ப்பு வாசல் என்பார்கள். பார்வைக்குப் பழகும் செல்கள் முதல் ஆறு மாதங்களில் வேகமாகப் பெருகி, எட்டு மாதத்தில் பிற செல்களுடன் 15,000 கோடி இணைப்புகளைப் பெற்றுவிடும். அது முடிந்ததும் வாசல் மூடிக்கொள்கிறது.
 
ஒரு வாய்ப்பு வாசல் காலகட்டத்தைத் தவறவிட்டு விட்டால்கூடக் கவலையில்லை. குழந்தைப் பருவம் முழுவதுமே ஏராளமான வாய்ப்புகள் கிட்டும். மூன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளின் மூளை பெரியவர்களுடையதைப் போல இரு மடங்கு ஆற்றலைச் செலவழிக்கிறது. அதில் பெரியவர்களுக்கு இருப்பதைவிடப் பன்மடங்கு அதிக இணைப்புகள் இருப்பதே அதற்குக் காரணம். இதன் காரணமாகச் சிறுவர்கள் புதிய திறமைகளை எளிதாகக் கையகப்படுத்துவார்கள். புதிய மொழிகளைக் கற்பதிலும் சிறுவர்கள் பெரியவர்களைவிட மேம்படுகிறார்கள்.
 
ஐந்து வயதுக்கு மேல்தான் குழந்தைகளின் விரல்களுக்குப் பென்சில் அல்லது பேனா இயக்கும் லாவகம் வரும். அதுவரை வீட்டிலோ, மழலையர் பள்ளியிலோ விளையாட்டு மற்றும் கதை, பாட்டு போன்றவற்றின் மூலம் ஐ.க்யூவை வளர்க்க முயல வேண்டுமே தவிர, கணக்குப் போடவும், பாடம் எழுதவும் பலவந்தப்படுத்தக் கூடாது. படங்களைக் காட்டி விவரிப்பது நல்லது.
 
குழந்தை முதன்முதலாகத் தலையைத் தூக்குவது, தவழ்வது, நடப்பது போன்றவையெல்லாம் வாய்ப்பு வாசல்கள் ஆகும். ஒன்றரை மாதக் குழந்தையால் 20 சென்டிமீ்ட்டர் தொலைவில் உள்ள பொருட்களைத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். பெற்றோர் அந்தத் தொலைவில் தமது முகங்களை வைத்துக் கொஞ்சினால், அவை மூளை இணைப்புகளில் ஒரு பழகிப்போகும் பதிவை உண்டாக்கும். பரிச்சயமானது, புதியது, ஒரே மாதிரியானது, வேறுபட்டது எனப் பிம்பங்களை வகைப்படுத்தும் திறன் பெருகும். வடிவங்களையும் நிறங்களையும் பிரித்தறியும் திறன் வரும். பிறந்த நாளில் இருந்தே சிசுவுடன் ஏதாவது பேசிக்கொண்டேயிருந்தால், அதன் மொழித்திறன் வளரும். அவ்வாறான வீடுகளில் மூன்று வயதுக்குள்ளாகவே குழந்தைகள் தொடர் வாக்கியங்களாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். மனக்கணக்குகளில் அதிகத் திறமை ஏற்படும்.
 
தாலாட்டுகள் அவசியம்
 
மூளை வளர்ச்சியில் தாலாட்டுகள் பெரிதும் உதவும். இடம் மற்றும் தர்க்க அறிவை இசை வளர்க்கிறது. சிறு வயதிலிருந்து முறையாக இசை பயில்பவர்கள் புதிர்களை விடுவிப்பதிலும் ஜிக்சா படங்களை இணைப்பதிலும் பிறரை விட அதிக வேகமும் திறமையும் பெற்றிருக்கின்றனர். கணிதம் பயிலும்போதும் இசை பயிலும்போதும் மூளை செல்கள் ஒரே மாதிரியாக இயங்குகின்றன. எனவே, இசை பயிலும் குழந்தைகள் கணிதத்திலும் மேம்பட்டிருப்பார்கள்.
 
பாராட்டு, குழந்தையின் மனதுக்கு உரம். பாராட்டினால் அது மகிழும்போது அறிவு மையமான மூளைப் புறணிக்கும் உணர்வு மையமான நடு மூளைக்கும் இடையிலான இணைப்புகள் வலுப்பெறுகின்றன. இவை எட்டாவது முதல் பதினெட்டாவது மாதம் வரையிலான காலகட்ட வாசலில் உருவாகும். பாராட்டுகளால் குழந்தை குதூகலிக்கிறபோது, மூளையில் வேதிகள் பெருகி அவ்விணைப்புகளை வலுப்படுத்தும். குழந்தைகளைப் பாராட்டாமல் போனால், அந்த இணைப்புகள் வலுக்குன்றிப் புதிய சாதனைகளைப் படைக்கும் ஆர்வம் மங்கிவிடும். குழந்தை முதன்முதலாக எழுந்து நிற்கும்போது ‘பலே பலே’ என்று கைதட்டிச் சிரிப்பதும், கொஞ்சுவதும் கூடப் பாராட்டுதான்.
 
பதின்வயதுகளில் உணர்ச்சி தொடர்பான நரம்பிணைப்புகள் அதிகரிக்கும். அப்போது பெற்றோர் கூடுதலான கவனத்துடன் இருக்க வேண்டும். பாலுணர்வுகள் தலைதூக்கும் அந்த காலகட்டங்களில் கண்காணிப்பும் கலந்துரையாடலும் வழிகாட்டலும் விபத்துகளைத் தவிர்க்கும்.
 
பள்ளிப் பாடத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவது வேறு. ஐ.க்யூ. எனப்படும் கூர் அறிவு வேறு. பள்ளிப் படிப்பு ஏறாத பலர், கூர் அறிவினால் சாதனை படைத்திருக்கின்றனர். சம வயதினரின் சகவாசம், குடும்பச் சூழல், மூத்தோர் ஆதரவு போன்றவை கூர் அறிவையும் மனப் போக்குகளையும் பண்படுத்த உதவும்.
 
பெற்றோரால் குழந்தையை மாமேதையாக்க முடியாமல் போகலாம். ஆனால், அந்த இலக்கை நோக்கிக் குழந்தையைச் செலுத்துவதில் அவர்களுடைய பங்கு முதன்மையானது.
 
கே.என். ராமசந்திரன்,
 
அறிவியல் கட்டுரையாளர்.

Monday, 30 May 2016

ஒரு சிலர் திறமைகளை பார்க்கும் போது பாராட்டினால் ஏதோ பல கோடி ரூபாய் நஷ்டம் ஆகிவிடுவது போல் பாராட்ட மிகவும் தயங்குவார்கள். நீங்கள் பிறரை தயக்கம் இல்லாமல் தாராளமாக பாராட்டுங்கள்.

ஒரு சிலர் 
திறமைகளை பார்க்கும் போது  பாராட்டினால் ஏதோ பல கோடி ரூபாய் நஷ்டம் ஆகிவிடுவது போல் பாராட்ட மிகவும் தயங்குவார்கள். நீங்கள் பிறரை தயக்கம் இல்லாமல்  தாராளமாக பாராட்டுங்கள்.


இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஒருவர் ஒரு விஷயத்தை திறமையாக பண்ணும் போது நாம் மனம் திறந்து அவர்களைப் பாராட்ட வேண்டும். ஒரு சிலர் நல்ல காரியங்களை பண்ணுவார்கள். அல்லது அவர்கள் உங்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கலாம். நீங்கள் அவர்களின் நல்ல குணத்தை மனமார பாராட்டலாம். பாராட்டுவதால் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை. மாறாக, ஒருவரை பாராட்டும் போது அவர்களின் அன்பை நாம் எளிதில் பெற முடியும். மேலும் பாராட்டுபவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். 

ஆனால் அதே சமயம், போலியான பாராட்டு தவறான ஒன்றாகும். அதை முகஸ்துதி என்றே சொல்ல வேண்டும். பாராட்டும் போது அது உண்மையாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் ஆகும். 

பாராட்டுவதால் நமக்கு எந்த இழப்போ அல்லது ஏற்படுவது இல்லை. மாறாக, அதனால் நமக்கு பல நன்மைகள் விளையக்கூடும். இருந்தும் ஏனோ பலர் பிறரை எளிதில் பாராட்டுவதே இல்லை. தயங்காமல், தாராளமாக உண்மையாக பாராட்டுபவர்கள் உண்மையில் மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்களும், மன முதிர்ச்சி இல்லாதவர்களும் தான் பாராட்ட யோசிப்பார்கள்.

திறமைகளை பார்க்கும் போது தயங்காமல் தாராளமாக பாராட்டுங்கள். அதனால் உங்களுக்கு பல நன்மைகளும், நட்புகளும் கிடைக்கும். அனாவசியமான செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை பாராட்டும் போது சிக்கனத்தை தவிர்த்து மிகவும் தாராளமாக பாராட்ட வேண்டும்.

Monday, 23 May 2016

ஒன் இந்தியாவில் திருமணம் சம்பவம் என்று ஒரு சிறுவனுடன் வயதில் மூத்த பெண்ணும் இருவரும் மாலையுடன் வருவது போல படத்துடன் செய்தி

ஒன் இந்தியாவில் திருமணம் சம்பவம் என்று ஒரு சிறுவனுடன் வயதில் மூத்த பெண்ணும் இருவரும் மாலையுடன் வருவது போல படத்துடன் செய்தி , அதைத் தொடர்ந்து இணையத்திலும் அதை பகிர்ந்து நக்கலும் நையாண்டியும் என்று செய்துள்ளனர் ,உண்மையில் அது திருமணம் கிடையாது சகோதர சகோதரி மற்றும் அவர்கள் வழக்கப் படியான சடங்கு ... இப்பொழுது ஒன் இந்தியாவில் அந்தச் செய்தியையும் நீக்கியுள்ளார்கள் அயோக்கியர்கள் ... அது திருமணமாக இருந்தாலும் அதை நக்கல் செய்ய படத்தை பகிர என்ன உரிமை என்பது வேறு விஷயம் ... இது போன்ற தவறான செய்திகளை பரப்புவது ஆரோக்கியமான விஷயமில்லை ...
மொதல்ல டீச்சர் மாணவனை கூட்டிட்டு ஓடினார் என்று ஒரு தகவல் , அதிலும் உண்மைக்கு புறம்பான புகைப் படம் , அப்பறம் அவங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டாங்கன்னு ஒரு தவறான செய்தி , அதற்கும் தவறான புகைப் படம் , இப்ப அவங்க ரெண்டு
பேரும் திரும்பி வந்துட்டாங்க தம்பதியாக என்று மீண்டும் பொய்யான செய்தி அதற்கு தவறான புகைப் படம்... நாம வளரவே வாய்ப்பில்லை போலும்

நண்பனுடன் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.. வாசலில் அவனது பாட்டி கயிற்றுக் கட்டிலில் கிடந்தார்..

நண்பனுடன்
அவனது வீட்டிற்குச்
சென்றிருந்தேன்..
வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக் கட்டிலில்
கிடந்தார்..
நண்பன் உள்ளே
போய்விட்டான்..
நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?
பாட்டி : நல்லாருக்கேன்
ராசா.. நீ ராசா..?
நான் : நல்லாருக்கேன்
பாட்டி..
இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..
பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?
நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்க
ஃபோனு..
சட்டென்று ஞாபகம்
வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக் காட்டினேன்..
பாட்டி: இதுகிட்ட
பேசினா
அத அப்புடியே திரும்ப
பேசும்..
பாட்டி : என்ன
ராசா சொல்றே..?
Talking Tom :என்ன
ராசா சொல்றே..?
நானும், பாட்டியும், Talking
Tomமும் சிரித்தோம்..
பிறகு வீட்டினுள்
சென்றேன்..
எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில்
வந்தேன்...
வாசலில் பாட்டி..
நான் : போயிட்டு வாரேன்
பாட்டி..
பாட்டி : ராசா...
நான் : என்னா பாட்டி..?
பாட்டி : ஏய்யா..
அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..
நான் : என்ன
பாட்டி சொல்றிங்க..?
பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல
இங்க
எங்கிட்ட யாருமே பேச
மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..
நண்பனைப் பார்த்தேன்..
யாருடனோ (!)
ரகசியமாய்ப்
பேசிக்கொண்டு
இருந்தான்..
நா சாப்ட்டேன் செல்லம்..
நீ செல்லம்..?
Ok செல்லம்....
நா வீட்ல இருக்கேன்
செல்லம்....
அப்புறமா பேசுறேன்
செல்லம்..

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார்.

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக்
கண்டு உள்ளே சென்றார்.
எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார்.
அதை எடுத்துப் பார்த்தார்.
அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.
பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.
அதில் இவ்வாறு எழுதியிருந்தது:
அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
என்னை மன்னித்து விடுங்கள்.
என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.
உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை.
அதனால் சொல்லாமல்
போகிறேன்.
டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது.
நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன்.
அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.
அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.
டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான்.
என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.
டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது.
அங்கு நாங்கள் தங்கியிருப்போம்.
அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான்.
அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம்.
கஞ்சாவை நானும் புகைத்தேன்.
ரொம்ப சுகமாயிருக்கிறது.
மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான்.
அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும்.
எனக்கு பதினைந்து வயதாகிறது.
என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.
உங்கள் அன்பு மகள்,
லிண்டா..!


அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..
கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது..
துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு;
அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.
நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது.
எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது.
எடுத்து கையெழுத்து போடுங்கள்.
நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன்.
உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.
-Funny girl

* இப்போது செய்ய வேண்டியதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது. -பாரதியார்

நடந்ததை மறந்து விட்டு, இனி நடக்க வேண்டியதை சிந்திப்பவனே அறிவாளி.
* கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.
* அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய். அச்சமில்லாமையே அறிவு.
*தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்காதீர்கள். தியானம் மூலம் விரும்பியதைப் பெற்று மகிழலாம்.
* மனிதன் மற்றவர்களுக்கு அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.
* இப்போது செய்ய வேண்டியதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.
-பாரதியார்

கருக்கல் வேளை வந்திருச்சு! இப்போது சாப்பிடாதே, வாசல்படியில் உட்காராதே என்று அக்கால பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் தெரியுமா?

கருக்கல் வேளை வந்திருச்சு! இப்போது சாப்பிடாதே, வாசல்படியில் உட்காராதே என்று அக்கால பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் தெரியுமா? மாலை 6 மணிக்கு தான், நரசிம்மரால் வதம் செய்யப்பட்டான் இரணியன். அவனை மேலே எங்கேயும் வைத்துக் கொல்ல முடியாது, கீழே நல்ல இடங்களில் வைத்தும் கொல்ல முடியாது. எனவே இரண்டும் கெட்டானாக வாசல்படிக்கு தூக்கி வந்து அமர்ந்த நரசிம்மர், வயிற்றைக் கிழித்து குடலை சாப்பிட ஆரம்பித்து விட்டார். சர்வ சாதுவான ஸ்ரீமன் நாராயணனே, இப்படி செய்கிறார் என்றால், அவருக்கு எவ்வளவு கோபம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இந்த காரணத்தால், மாலையில் சாப்பிடும் உணவு நரமாமிசத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது. வாசல்படியில் உட்கார்ந்தால் ஆயுள் குறையும் என்பதும் ஒரு கருத்து. மேலும்.. இரவு உணவை, 9 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது மிகவும் நல்லது. இரவு உணவை பாலில்தான் முடிக்க வேண்டும். பாலுக்குப் பிறகு எதையும் சாப்பிடக்கூடாது. பகல் உணவில் திடம் அதிகமாகவும் திரவம் குறைவாகவும் இருக்க வேண்டும். இரவு உணவில் திடம் குறைந்தும் திரவம் அதிகமாகவும் இருக்க வேண்டும். கிழங்கு போன்ற கனமான பொருட்களை இரவில் தனித்துப் பயன்படுத்தக் கூடாது. அதை சீக்கிரமே ஜீரணிக்க உதவும் பொருட்களோடு சேர்த்து சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே உணவு உண்பது கொள்வது நல்லது.

Monday, 16 May 2016

" இந்தா அம்மா...இது தான் மிகவும் சுவையா இருக்கு" heart emoticon


ஒரு அழகிய குட்டிகுழந்தை தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள் .
வளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்னை கேட்டார்: 
"என் செல்லம் , நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா ?"
சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும் ,அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள் 
அம்மாவுக்கு சற்றே ஏமாற்றம். 
அப்பொழுது, குழந்தை தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள்
" இந்தா அம்மா...இது தான் மிகவும் சுவையா இருக்கு" heart emoticon

இறைவன் காரணமில்லாமல் எதையும் தருவதில்லை....


பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,""அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.
""மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ''
அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ""தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்.
வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
அப்போது அவர்,"" தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!
அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.
வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.
""பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.
"தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.
""அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.
தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்துஅனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.
வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.
இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

# உண்மையான_அன்பு_ புனிதமானது....

மனைவியின் பிறந்தநாள் அன்று.
கணவன் குடித்து விட்டு வருகிறான்
வீட்டிற்கு வந்தவன் தன்னிலை
அறியாமல் பொருட்களை எல்லாம் கீழே
தள்ளிவிட்டு உடைக்கிறான்.
நடுவீட்டில் வாந்தியும் எடுக்கிறான்.
மனைவிக்கு கோவம்
பொறுக்கவில்லை.
மறுநாள் காலை கணவன்
எழுந்தபோது மனைவி வீட்டில்
இல்லை, ஒரு துண்டு காகிதம்
தலையணை பக்கத்தில் இருந்தது.
அதில் மனைவி எழுதி இருந்தால்...
ஏங்க உங்களுக்கு பிடிச்ச டிப்பன்
செஞ்சி வச்சி இருக்கேன்.. மறக்காமே
சாப்டுங்க.. நா கொஞ்சம் அவசரமா
வெளிய போகணும்.. நேத்து உடைஞ்ச
பொருள் எல்லாம் வாங்கணும்...
சீக்கிரமா வந்துடுவேன்... லவ் யூ "
இதை படித்த கணவனுக்கு அதிர்ச்சி.
கோபாமாக சண்டை போடுவாள்
என்று எதிர் பார்த்த மனைவி இவ்வளவு
அன்பாக கடிதம் எழுதி வைத்து
இருக்கிறாளே...
மகனை அழைத்து கேட்டான் நேத்து
என்ன நடந்தது என்று...
மகன் : "அம்மா உன்ன பெட்ல படுக்கவச்சி..
உன் பேன்ட் பெல்ட் கலட்டுனாங்க...
அப்போ நீ... ஏய் கையை எடு எனக்கு
ஏற்க்கனவே கல்யாணம் ஆகிடுச்சி
போதைலயே சொன்ன பா...


# உண்மையான_அன்பு_ புனிதமானது

உடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும்?

உடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும்? 
மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப்படுத்தும் தூங்கக் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே, சுவாசம் வெளியே செல்வதால் ஆயுள் வளரும். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து, பித்தநீரை அதிகரிக்கச்செய்து, உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால், இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால், பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்வதால், உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும் என்றெல்லாம், சித்தர் பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் எப்படி படுத்து தூங்குகிறீர்கள்...?

பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?



ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களின்  சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே

வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்விஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்விடை சொல்கிறேன்.  அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”

 அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”

அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.

கிழவியிடம் வந்தான்  வேண்டியதைக்கேள் என்றான்.

அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்

அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”

அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”

ஆம்!


பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

Saturday, 14 May 2016

எல்லோரும் ஆடு மாடு மேச்சவன் வாரிசுதான்.

வாயை மூடிக்கிட்டு ஒரு மொபைல் போன் குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு பசு மாட்டுக்கு 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்க வலிக்குது. 5 ஆயிரம் கொடுத்து ஒரு ஆட்டுக் குட்டிய வாங்க வலிக்குது.

தினமும் 20, 50, 100, 200 ரூபாய் ரீச்சார்ச் , இன்டர்நெட்டுன்னு செலவு செய்யும் சாமானியன் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கொடுங்கன்னு சொல்றான்.

நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம் பற்றி வாய் கிழிய பேசுவிங்க… உங்களுக்காக உங்க ஊருக்காரன் வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பெண்ட்ரைவ் கூட வாங்க மாட்டிங்க…

உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அமேசான், பிளிப்கார்ட்… அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிற…

அரிசி போட்டவுடன் வேகனும்! சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் ! பொடிசா இருக்கணும் ! ஆனா நோய் வரக்கூடாது.

பழுப்பு நிறத்துல இருக்ற அரிசிய வெள்ளையா கேட்டா அவன் எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்? தப்பு யார் மேல?

கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு நீ கடைகாரண்ட கேட்ப… 
அவன் விளைவிக்கிறவண்ட சொல்றான்… 
விளைய வைக்றவன் பூச்சி மருந்த அடிக்றான்… 
நீயும் வாங்கி சாப்டுற…

அப்றோம் அது வலிக்குது இது வலிக்குதுன்னு டாக்டர்ட்ட போற… அங்கே என்ன நடக்குது?

இதுக்கு ஒழுங்கா நாலு கீரை பூச்சி கடிசிருந்தாலும் ஒழுங்கா கழுவி தின்னுருக்கலாம்ல?

எல்லோரும் ஆடு மாடு மேச்சவன் வாரிசுதான். என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும். இப்போ பேன்ட் சட்ட பேமிலி டாக்டர்னு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?

நல்லது எது கேட்டது எதுன்னு புரியாம வாழ்ற உன்னவிட இன்னும் ஆடு மாட வச்சு சானிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு மூலை’ல உனக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை உணர்துக்கோ…

நல்லதை சாப்பிட நினை. சாப்பிட கொடுத்தவனை நினை...

புத்திசாலித்தனம்...! Fun



ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்.......
 
புத்திசாலி : என்ன சார்?
 
போலிஸ் : ஓவர் ஸ்பீட்?
 
புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.

போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.


புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.


போலிஸ் : லைசென்ஸ் இல்லையா?


புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.


புத்திசாலி : அதுவும் இல்ல.


போலிஸ் : என்ன?


புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.


போலிஸ் : இது திருட்டு வண்டியா?


புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.


போலிஸ் : கொன்னுட்டயா? அவர் பாடிய என்ன பண்ணுன?


புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....


பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.


உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.


புத்திசாலி : பிரச்சனையா சார்?


உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே?


புத்திசாலி : கொலையா?


உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.


புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.


உயர் அதிகாரி : இது யார் கார்?


புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.


உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.


புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.


உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல் சொல்லிட்டார்.நீங்க போகலாம்.


புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா?