பாளையப் பட்டுக்களின் வரலாறு
தமிழ்நாடு அரசு, கீழ்த்திசைச் சுவடி நூல்கள்
தாறாபுரம் துக்குடி கசுபா தாறாபுறத்துக்ருச் சேர்ந்த தெங்கரை நாட்டு பட்டக்காறன் யிறுவத்தினாலு நாட்டுக்கும் பெறிவீட்டுக்காரனான பட்டக்கார குமார ரற்றின வேணுஒடயாக் கவுண்டன் வம்சாவளி கைபீது புக்கு. தாறாபுரம் துக்குடி கசுபா தாறாபுறம் தாலுகாவுக்கு சேர்ந்த தெங்கரை நாடு வேணஒடயாக் கவுண்டன் யெண்ணப்பட்ட பட்டக்காறுடைய வம்சாவனி முதலான கைபீது யென்ன வென்றால்:
பூற்வத்தில் குலோதுங்க சோளறாசா றாச்சிய பிரபுத்துவம் பண்ணிக்கொண்டு வறும் நாளையிலே, அக்காலத்தில் சோள றாசியத்திற் சேந்த
காவேறிபூம்பட்டணம் வணிகேசற் பிறபலமாஇ சோளறாசவுக்கு அடங்காதே நடந்து கொண்டு பட்டம் வயிறமுடிப்பட்டம், சேனாதிப் பட்டம் யிவற்கள் பிறபல மாயிறுக்கும் நாளில், சங்குனாறாயண செட்டிமகன் சாதினிலைகுலைந்தான் யென்று அவனை குலை செயித படியனாலே, சங்குனாறாயண செட்டி குளோத்துங்க சோள றாசாயிடத்தில் வந்து பிள்ளை பளி தீத்து குடுக்கச் சொல்லி முறை செயிதபடியனாலே அப்போது சலியுக சகாபுதம் வருஷம் 800-க்கு மேல்.
அப்போ மந்திறி தலைமையாகிய அர்த்தனாறி வேணுஒடயானுக்கு அறமனை பசுவும் குடுத்துக் காவேறிப் பூம்பட்டணம் திறை கொண்டு வறசொல்லி வுத்திரவு கொடுத்தபடியனாலே, அற்தனாறி வேணுஒடயாக் கவுண்டன் தளமும் கூட்டிக்கொண்டு போஇ காவேறிப்பூப்பட்டணமும் வெட்டி திரை சொண்டு அயினூறு குலவணிகரையும் கைவசம் பண்ணிக் கொண்டு வந்து குலோத்துங்க சோளறாசா வேணுஒடையார் கவுண்டன்.
யிடத்தில் வந்து அறிக்கை செய்யும்போது சோளராசாவும் மிகுதியும் சந்சோ ஷப்பட்டு காவேறி பூம்பட்டணத்துக்கு செட்டி வேணுஒடையான்யென்று பட்டாபிசேகமும் செயிது முடிசூட்டி, நாற்பத்தி யெண்ணாயிரம் கோத்திரத்துக்கு பெறிய கோத்திரம் தொண்டமண்டலம் யெளுவத்தி ஒன்பது வளநாடு, யிறுவத்தினாலு கோட்டத்துக்கும் பெறிய வீடு ரற்றிணகிரி, சிவாயம் யிந்த ரெண்டு காணி னிலைமையாக தந்து புஷ்ப்பக விமானத்தின் பேறில் பட்டண பிறவேசம் செயிது விறுது சிங்ககொடி, யன்னக்கொடி, நிசபக்கொடி, குயிலுக்கொடி, பஞ்சவற்ன்னடால், வெள்ளைக் கொடை, வுபய விண்சாமரம், வெட்டுப்பாவாடை, திமுறுதப்பு, வீரகண்டாமணி, வீர வெண்டயம் இது முதலான விறுதுகளும் குடுத்து, னாற்பத்தி யெண்ணாயிரம் குடியும் வறவளைத்து கட்டின யேறுக்கு ஒரு பணம் வறி குடுக்கும்படி வுத்திரவு செயிது அயினூறு குலவணிகறும் தலைக்கட்டு வறி சூரியகுல பணம் வீடு 1-க்கு ஆறு பணம் மேரைக்கு குடுத்து வறச்சொல்லி வுத்திரவு செயிதாற்கள்.
அதே மேரைக்கு பட்டம்கட்டி கொண்டு செட்டிவேணு ஓடையான்யென்று பேற்பிறசுத்திப்பட்டவறாயி காணியும் அனுபவிச்சு கொண்டு பட்டமும் அனுபவிச்சு கொண்டு வந்தார்கள்.
அதின் பிற்காலம், கலியுக சகாதம் 1100-க்கு மேல் றிஷபகிறி சோளன் மகளை சேறுமான் பெறுமாள் பாணிகிறஹணம் பண்ணிக் கொண்டபடியனாலே: சோளறாசவின் மகள் தனக்கு சீதனம் தன் தோப்பனாரை கேட்டது யென்னவென்றால், யெனக்கு சிறுது வேளாளற்குடி வேணுமென்று கேள்க்க னாற்பத்தியெண்ணாயிரம் குடி சீதனம் குடுத்தபடியனாலே சேறுமான் பெறுமாள் கொங்கு மண்டலத்துக்கு கொங்குவேளாளரென்று பேறும் குடுத்து, பிடாரன் வேணஒடையானுக்கு பட்டாபிஷேகமும் சூட்டி, யெண்ணாயிரம் கோத்திரத்துக்கு பெரிய கோத்திரம், யெண்ணாயிரம் வீட்டுக்கும் பெறிய வீடுயென்று கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வந்ததின் பேரில் இந்த யெண்ணயிரம் குடியும் கொங்கு மண்டலம் இறுளுரைந்த காண்டாவனமெல்லாம் வெட்டி இறுவத்தினாலு கோட்டத்துக்கு யிருவத்திநாலு நாடு இதுக்கு வுப கிறாமமும் வுண்டுபண்ணி யெண்ணாயிரம் குலம் வேளாளருக்கும் அயினூறு குல வணிகறுக்கும் காணினிலைமை உண்டுபண்ணி குடுத்துயிருக்கும் நாளில் இந்த கொங்கு மண்டலம் பாற்க்கவெண்டிய னிமித்தியம் சேறன், சோளன், பாண்டியன் மூன்று றாசாக்களும் தென்கரை நாட்டில் நாடு காண் மேடைக்கு வறுகும்போது யிந்த யிருவத்தினாலு னாட்டுக்குள்வுள்ள யெண்ணாயிரம் குல வேளாளறும் ஆயினூறு குல வணிகறும் சந்திப்பு செயும் வேளையில் திட்டிக்கிடாயி நேற்படாதபடியனாலே,
பூந்துரையில் பட்டம் ஆண்ட புடாரன் வேணு ஒடயான் பேறன் வேணு ஒடயான் தன் புள்ளையை வெட்டி கிடாயும் வெட்டி திட்டி கத்தினபடியனாலே, மூன்று றாசாக்களும் பிள்ளையை வெட்டினான்யென்று மிகவும் சந்தோஷப்பட்டு, ஆருகால் பீடத்தில் வைத்து பட்டாபிஷேகமும் செயிது இறுவத்தினாலு நாட்டுக்கும் பெறிய னாடு யெண்ணாயிறம் குலவேளாளறுக்கும் பெறிய குலம் புள்ளை வேணு ஒடயான்யென்று பெறும் குடுத்து, பட்டாபிஷேகமும் பண்ணி புஷ்பக விமானமும் மேல் பட்டண பிறவேசம் பண்ணி பொன்வூஞ்சலும் தந்து தென்ங்கரை நாடு யெல்லை, தலையனாட்டுக்கு மேற்க்கு, நறயனூற் நாட்டுக்கு வடக்கு, புங்கலூற் நாட்டுக்கு கிளக்கு, காங்கய நாட்டுக்கு தெற்கு, இந்த நால் சதிறத்தில் கிளமேல் முக்காதம் தென்வடல் இறுகாதம், யிதுக்குள்ப்பட்ட கிராமமும், 12ல் கொற்றைனூறுக்கு சேந்த சங்கரண்டான் பாளையம் கிறாம அஞ்சா நல்லுற் கிராமமும் இந்த ரெண்டு கிராமமும், கிளமேல் ஆறுனாளிகை வளி தென்வடல் னாலு நாளிகை வளிக்குள்ப்பட்ட ரெண்டு கிராமமும், நறயனூற் நாட்டுக்கு சேந்த சோளமாதேவி கிராமமும் இந்த மூணு கிராமமும்-உம்பிளிகையாக் குடுத்து தென்ங்கரை நாட்டு மகமையும் தயவு செயிது, தென்ங்கரை நாட்டுக்கு சேர்ந்த மத்த கிராமமும் அறமனைக்கு னிகுதிக்கு வுண்டான பகுதியும் குடுத்துக் கொண்டு தெங்கரை நாட்டு பட்டக் காறரெண்டு பேறும் குடுத்தாற்கள்.
அந்த நாள் முத தென்கரைநாடு பட்டக்காற்ரெண்டு பேற்பிறசுத்திப்பட்டவர்களாஇ
அதின் பிற்க்காலம், அதுக்கு மயிசூறு சமுஸ்தானத்துக்கு கற்த்தறாகிய கற்த்தாக்கள் நாளையில் வும்பள கிராம்மும், மூணும் சபுத்தி பண்ணியெங்களுக்கு குத்தகை நிகுதி செயிவிச்சு குடுத்து, யெங்கள் பெறியோற்களுக்கு மானியம் தெங்கரை நாடு சங்கரண்டான் பாளையத்தில் புஞ்சைவம் 50-குறுச்சி கிராமத்தில் வம் 50 ஆக யிந்தரெண்டு கிராமத்திலும் னூறு வள்ளக்காடும் நாட்டு மகமையும் வும்பிளிக்கையாக தயவு செயிது மத்த கிராமத்தில் னிகுதி செய்விக்சு குடுத்தாற்கள் அந்தநாள் முதல் யெங்கள் வம்ச பறம்பரையாஇ மானியம் னூறு வள்ளக்காடும் மானியமாஇ அனுபவிவிச்சு கொண்டு மகமையம் அனுபவிச்சுக் கொண்டு கிராமங்களுக்கு அந்தந்த காரியத்துக்கு அந்தந்த்துரைகள் கட்டு பண்ணின மேரைக்கு நிகிதியும் செலுத்தி விச்சு, தென்ங்கரை நாட்டுப் பட்டக்காரர் வேணு ஒடயாக் கவுண்டன் யென்று பேற் பிறசுத்திப் பட்டவற்களாஇ சகல பிறுதுகளுடனேயும் துரைகள் வுத்திரவுபடிக்கும் நடந்து கொண்டு மானியமும் அனுபவிட்ச்சுக் கொண்டுமஹாராசஸ்ரீ கும்பிணியாறுக்கு சீற்மை சேந்ததின் பிறகும் ஹாறச றாச ஆறடீசு சாயபு அவற்கள் துறத்தனத்து வரைக்கும் மானியமும் மகமையும் அனுபவிச்சு கொண்டு வந்தார்கள்.
கொங்கு தேசத்தில் இறுவத்தினாலு நாட்டுக்கு பேற்களாண்ட விபரம்:
தென்ங்கரை நாடு
பூந்துரை நாடு
ஆர நாடு
தலைய நாடு
காங்கய நாடு
வெங்கல நாடு
தட்டய நாடு
அண்டனாடு
வய்யாபுறி நாடு
வாரக்க நாடு
ஆனைமலை நாடு
சோறக்கா வடிக்க நாடு
நல்லுறுக்க நாடு
பொங்கலூற் நாடு
நறயனூற் நாடு
வடகரை நாடு
உடுவங்க நாடு
காஞ்சி கோவில் நாடு
குறுப்ப நாடு
பூவாணி நாடு
றாசிபுற நாடு
அரைய நாடு
மண நாடு
வாளவந்தி நாடு
யிந்த யிறுவத்தி னாலு நாட்டிலேயும் முன்னூத்தி யெண்பது சிவாலாயமும் கொங்கேளு தேவற் சபைக்கு விபரமும்.....
கரூறு—பருபதீஸ்வற சுவாமி
வெஞ்சமா கூடல் – விகுறுதீஸ்வர சுவாமி
கொடுமுடி – மகுடீஸ்வற சுவாமி
அவனாசி – அவனாசி லிங்கற்
பாவனீகூடல் – னன்னா ஒடயாற் சுவாமி
பேறுரு – பட்டீஸ்வற சுவாமி
திறுமுறுகன்—ண்டி – முறுகனாத சுவாமி
கொங்கு தேசத்துக்கு யெல்லை விபரம்.
மறம் கௌக்கைலை-மதுக்கரைக்கு மேற்கு, வராஹகிறிக்கு வடக்கு வெள்ளி மலைக்கு கிளக்கு, பால மலைக்கு தெறுக்கு இந்த சதிறத்தில் கொங்குனாடு 24.
கொங்கு யிறுவத்தி நாலு நாட்டுக்கும் பெறிய வீட்டுக்காரனான தெங்கறனாட்டு பட்டக்காரனான வமிசாவளிப் பட்டங்களுடைய விபரமும் யிதின் கீள்யெளுதி வறுகுரது.
வேணுடர் காணி நிலங்கள்
சிவாயம், இருங்கழார், முருங்கைத்தொழு, காகம், விளக்கேத்தி, (விளங்கில்) பாலதொழு, கொற்றையூர், வீர்ராஜமங்கை குகைமண் குழி பொன்னூதி என்னும் ஊதியூர், சோழமாதேவி, குறிச்சிப்பதி, பொம்மநல்லூர் என்பன ஆகும். இப்பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்த வேணுடர் தமது பிரதிநிதியாகத் தங்கள் மரபில் தோன்றிய பெரிய குலத் தோன்றல்களை அங்குக் கெடி மன்னர்களாக ஆக்கித் தமது காணிகளைப் போற்றி வந்தனர். இவ்வாறு அவர்கள் ஆண்ட நிலைகளை இரத்தினமூர்த்தி விறலி விடு தூது என்ற நூல் நன்கு செப்புகின்றது. அப்பாடலடிகள் கீழ் வருகின்றன.
போற்று சிவாயம் புகல்இரும் கழார்உடனே
சாற்றறிய நன்முருங்கைத் தன்பதியும் – மாற்றமுயர்
காகம் விளக்கேற்றி கற்புசிதப் பாலதொழு
யோகமிகும் கொற்றை யூருடனே – பாகமுள
நங்கை குகைமண் குழியும் நல்வளஞ்சேர் பொன்னூதித்
தங்கமிகும் ஊதியூர் தன்பதியும் இங்கிதஞ்சேர்
சோழமா தேவியுடன் சொற்குறிச்சி என்னுளும்
வாழு பொம்மநல்லூர் வளநகரை – ஆளவே
காணியென வந்துதித்த காண்டீப ராசதுரை
என அத்தூது பேசுகின்றது. இப்படியாக எங்கள் வேணுடர் குடும்பத்தார் பல தலைமுறைகள் (சுமார் ஐம்பது தலைமுறைகள்) இந்நாட்டை ஆண்டு வருகின்றனர். இவ்வழியில் வந்த மன்னர்களில் ஒரு சிலரது வரலாற்றை இங்கு எடுத்தியம்புவது மிகையாகாது என சிலரது வரலாற்றை இங்கு யான் தருகிறேன்.
பிடாரன் பெரியண்ண வேணுடுடையான்
வேணுட சந்ததியில் வந்தவர்களில் பலர் தமது ஊர்ப் பெயரைத் தமது குடிமுதல்வன் நினைவைக் காட்டும் வகையில் வைத்துக் கொள்ளுதலை உடையவர்களாக வாழ்ந்தார்கள். எங்கள் குடி முதல்வன் வாழ்ந்த ஊர் பிடர் என்பது அதனைப் பிடவூர் என்றும் பிடாரம் என்றும் பிடர்த்தலை என்றும் வழங்குவார்கள். அவ்வரிசையில் வந்த ஒரு மன்னன் தனது பெயரை பிடாரன் பெரியண்ண வேணுடுடையான் என்று வைத்துக் கொண்டான். இவன் தென்னவன் பகுதியில் அரசு புரிந்த பூதப் பாண்டியன் என்றமன்ன்னை வென்று கருவூர்ப் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் தனது வெற்றி விழாவைக் கொண்டாடினான் என்று அந்த வேணுடன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. இப்பிடாரப் பெரியண்ண வேணுடுடையன் பரம்பரையார் கம்பர் காலம் வரையில் வாழ்ந்தனர் இப்பரம்பரையில் இப்பெயர் கொண்ட வேணுடர் ஒருவரைக் கம்பர் புகழ்ந்து பாடியுள்ளார் எனவும் தெரியவருகின்றது. இதனைக் கம்பர் புகழ் பிடாரனைப் பெரியண்ண வேணுடனை என்ற வேணுடன் மெய்க் கீர்த்தி மேலும் உறுதிப்படுகிறது.
செட்டி வேணாடன்
இவ் வேணாடர்களில் ஒருவர் குலோத்துங்கச் சோழமன்னனிடம் மந்திரிக் தலைமை பெற்று வாழ்ந்தார். அக்காலத்தில் நன்னன் என்ற மன்னன் அரசு புரிந்து வந்தான் அவன் நீராடுந் துறையில் அவ்வூரில் வாழ்ந்த வணிகன் ஒருவனின் புதல்வி சென்று நீராடினாள். அக்குற்றந்திற்காக அவ்வணிகச் சிறுமியை அவ்வரசன் கொலை செய்யத் துணிந்தான் அச்சிறுமியின் தந்தை பல சொல்லி வேண்டியும் அரசன் அதனை ஏற்காமல் அந்தச் சிறுமியைக் கொன்று தீர்த்தான். அவ் அநீதியைச் சகியாத வணிகருள் சிலர் அக்காலத்தில் உறையூரில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழ மன்னனிடம் சென்று முறையிட்டனர். அம்மன்னன் தம் மந்திரியாகிய வேணாடனை அனுப்பி நன்னனது கற்கோட்டையைத் தூள்படுத்தி வருக என கட்டளையிட்டான். அக்கட்டளையை ஏற்று வேணாடன் அங்கு சென்று நன்னனது கற்கோட்டையைத் தூள்படுத்தி வாகை சூடி வந்தான். வரும் போது தன்னை அடைக்கலமாக வந்த வணிகர்களையும் உடன் அழைத்து வந்து தான் வாழ்ந்து வரும் பகுதியில் குடியேற்றி வாழவைத்தான். இங்ஙனம் செட்டியரைக் காத்ததால், அவ் வேணாடன் செட்டி வேணாடன் என்று அழைக்கப்பட்டான். தன் ஆதரவைப் பெற்ற வணிகர்களுக்கு இவ்வேணாடன் தனது ஊர்களில் உள்ள ஆலயங்களில் அவர்களுக்கு ஒரு முதன்மை தந்து ஆதரித்தார்கள். அவர்களும் கொங்குச் செட்டியார் என்ற பெயரால் இன்றும் அழைக்கப்படுகின்றனர்.
இரத்தின மூர்த்தி வேணாடன்
செட்டி வேணாடன் குமாரன் இரத்னமூர்த்தி வேணாடன் என்று பேசப்படுகின்றான். இம்மன்னன் சிறந்த போர் வீரன. மிகுந்த வள்ளல் தன்மை உடையவன். இவனது குமாரன் குமார ரத்தின வேணாடன் என்று பேசப்படுகின்றான். இம்மன்னனுக்குச் சிறந்த வல்லமை படைத்த கருப்பராயன் என்ற சேனாதிபதி துணையாக இருந்தான். அவனதும் தமது குமாரன் குமாரரத்தின வேணாடனது துணையும் கொண்டு பகைவரை வென்று நாட்டைச் சிறப்பாக ஆண்டு வந்தான் இரத்தினமூர்த்தி வேணாடன் இம்மன்னது சிறப்பு, கொங்கு நாடெங்கும் பரவி இருந்தது. இவனது சிறப்பைப் புகழ்ந்து இரத்தினமூர்த்தி விறலி விடு தூது என்ற ஒரு சிறந்த நூலை அக்காலத்தில் இவனது ஆதீனத்தில் புலவராக இருந்த செல்லக் குமாரு என்ற புலவர் பாடி இருக்கிறார். இந்நூலுக்கு உரிய பரிசாகப் பல்லக்குடன் சில விருதுகளையும் செல்வங்களையும் இம்மன்னனிடம் பரிசு பெற்ற அந்தப் புலவர் “பல்லக்குப் பிரபுவான செல்லக் குமாருப் புலவர்” என்று மக்களால் புகழப் பெற்றார்.
கொற்றை வேணாடன்
கொற்றை வேணுடன் என்ற கொற்றவன் தென்னவன் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்குள்ள பாண்டியன் சந்ததியில் வந்த காவலன் ஒருவனை வென்று அவனுக்குச் சொந்தமான கோட்டையும் தனதாக ஆக்கிக் தன்னுடைய பெயரால் ஒரு நகரம் அமைத்து அதற்குக் கொற்றை நகர் என்று பெயரிட்டன. அதுமுதல் அப்பகுதியை ஆண்ட வேணுடர்களுக்குக் கொற்றை நகர் தலைநகராயிற்று இவன் வெற்றி விழாக் கொண்டாடிக் கொலுவிருந்த வமயம் அவனது ஆதீனப் புலவராகிய குங்குமப் புலவர் என்பவர் வேணுவுடையான் கொலு விலாசம் என்ற ஒரு நூலைப் பாடி அரங்கேற்றினார்.
மும்முடிப்பட்டம் பெற்ற முத்துரத்தின வேணாடன்
கொற்றையில் வாழ்ந்த வேணாடர்களில் கொற்றை வேணாடனுக்குப் பின் பல தலைமுறையோர் அரசெய்தி வாழ்ந்தனர். அவர்களில் ஒருவர் மும்முடிப் பட்டம் பெற்ற முத்துரத்தின வேணுடன், இவன் வரலாறு பின் வருகிறது முத்துரத்தின வேணாடன் என்ற குறுநில மன்னன் கொற்றை நகரில் வாழ்ந்த வமயம் சேர, சோழ, பாண்டியராகிய மூன்று அரசர்களின் பிற்காலச் சந்ததியார் தமது நாடுகளைச் சுற்றிப் பார்த்துத் தமது கெடி மன்னர்களை நல்வழியில் அமைத்துத் தமது காணிகளை ஒழுங்குபடுத்த விரும்பி வந்தனர். அக்காலத்தில் கொங்கு புரந்த காவிதியர்கள் யாவரும் அவ்வரசர்களை எதிர் கொண்டழைத்து மரியாதை செய்தனர் அவர்கள் அம்முறையில் எங்கள் தேன்கரை நாட்டிற்கும் வந்தனர். வந்த அரசர்கள் அங்குள்ள நாடுகூடு மேட்டில் அமர்ந்து தேன்கரை நாட்டுக் காவிதிக்குத் தங்கள் வருகையைச் சொல்லி விடுத்தனர்.
அப்பொழுது முத்துரத்தின வேணாடன் மூன்று பேரரசர்கள் தமது நாடு நோக்கி வருவதறிந்து தனது பரிவாரங்கள் சூழ அவர்களைச் சகல மரியாதைகளோடும் எதிர் கொண்டான் அவ்வரசர்கள் வரும்பொழுது அவர்களுக்காகத் திருஷ்டி தோஷம் படாத முறையில் திட்டிக் கிடாய் வெட்டுதல் மரபு. அம்மரபு ஒரு பெரிய மரியாதையாகக் கொள்ளப்படும் திருஷ்டிக் கடாய் உரிய காலத்தில் வரவில்லை அது கண்டு சோழ மன்னன் கோபிக்க தேன்கரை நாட்டு மன்னனாகிய இம்மன்னன் திட்டிக் கிடாய் வராத குறையை நிவர்த்திக்க அருகில் நின்ற தமது குமாரர்களில் ஒரு வரை வெட்டி அம்மன்னர்களுக்கு திருஷ்டி தோஷம் போக்கினான். பின்னர் கிடாயும் வந்தது அதையும் வெட்டி திட்டி தோஷம் போக்கினான். இவ்வரிய செயலை மதித்து அந்த மூன்று அரசர்களும் வேணுடனைப் பார்த்து “வேணுடமன்னா! இப்பிரதேசத்தை எங்கள் மூன்று அரசர்களின் சார்பாக இன்று முதல் என்றும் நீயே ஆள்வாயாக! இன்று முதல் உனக்கு மும்முடிப் பட்டம் பெற்ற முத்துரத்தின வேணுடன் என்ற பெயர் வழங்குவதாக!’ ’என்று கூறி மூன்று அரசர்களும் தமது முடியை அவன் முடியின் மீது வைத்து மும்முடிப் பட்டம் சூட்டினார்கள். அன்றுமுதல் மும்முடிப் பட்டம் பெற்ற வேணுடர்களாக எங்கள் மரபினர் பெருஞ் சிறப்பெய்தினர்.
எழுத்து பிழை நிறைய உள்ளது
ReplyDelete