Thursday, 24 March 2022

படித்ததில் பிடத்தது

படித்ததில் பிடித்தது - OUR JUDICIAL SYSTEM...

நம் நாட்டில் நீதி துறையின் நிலை.

ஒரு காட்டிலிருந்து பசு ஒன்று வேகமாக ஓடி கொண்டிருந்தது. வழியில் பார்த்த ஒரு யானை "ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்" என்று கேட்டது. 
அதற்கு அந்த பசு "அரசாங்கம் இந்த காட்டிலுள்ள எருமைகளை பிடிக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது" என்று சொன்னது. 
அதற்கு அந்த யானை,"எருமைகளை தானே பிடிக்க சொல்லியிருக்கிறது? நீ ஏன் ஓடுகிறாய்" என்று கேட்டது. 
அதற்கு பசு," நீ சொல்வது சரி தான். ஆனால் என்னை பிடித்து எருமை என்று சொல்லிவிட்டால், இல்லை, நான் பசு தான் என்று நிரூபிப்பதற்கு 20 வருடங்கள் ஆகுமே. அதனால் தான் ஓடுகிறேன்" என்று சொன்னதை அடுத்து, அந்த யானையும் ஓடத்துவங்கியது.

No comments:

Post a Comment