ஒரு கல்லூரி மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரை
நாளொன்றிற்கு 500 பக்கங்களை படிக்க தொடங்குங்கள். அறிவு என்பது கூட்டு வட்டி போல மெதுவாக தான் வேலை செய்யும். இதை தினமும் பின்பற்றினால் நீங்கள் அனைவரும் பெரிய இடத்தை அடைய முடியும், (2/2)
ஆனால் உங்களில் பலர் இதை செய்ய மாட்டிர்கள் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். வாரன் ஒரு நாளில் 80 சதவீத நேரத்தை வாசிப்பதில் செலவிடுகிறார்.
இவர் தான் பில் கேட்ஸ். தற்போது உலகில் இரண்டாவது மிக பெரிய பணக்காரர். இவர் புத்தக வாசிப்பை பற்றி என்ன சொல்கிறார் என பார்ப்போம்..
நாளொன்றிற்கு ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பில் செலவிட்டது தான் என் வெற்றிக்கு முக்கிய மூலப்பொருள் என்று நான் நம்புகிறேன்.
புது விடயங்களை கற்றுக்கொள்ளவும் அதை பற்றி ஆராயவும் புத்தங்களை தவிர ஒரு சிறந்த கருவி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. (4/4)
ஒவ்வொரு புத்தகமும் ஒரு புது விடயத்தை எனக்கு கற்றுக்கொடுக்கிறது. மேலும் ஒரு விடயத்தை எப்படி வேறு கோணத்தில் நோக்கலாம் என்பதையும் காண்பிக்கிறது.
வருடம் 50 புத்தங்களை படித்து விடுவார் பில். படிப்பதற்கென வருடம் ஒரு முறை ஒரு முழு வார விடுமுறை எடுத்துக் கொள்வார் கேட்ஸ். (5/5)
தான் மார்க் கியூபன். இவர் அமெரிக்க பில்லியன் டாலர் தொழிலதிபர். இவர் வாசித்தலை பற்றி கூறும் கருத்து என்ன?
நாளுக்கு மூன்று மணி நேரம் வாசிக்கும் பழக்கம் உடையவர். தன் தொழிலை பற்றி எது கிடைத்தாலும் அதை படித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார். (6/6)
அவரை பொறுத்த வரை அவர் தொழிலில் அவர் தான் ராஜாவாக இருக்க வேண்டும்.
ஒரு முறை அவர் எழுதுகிறார்
நான் வாசிக்கும் அனைத்தும் பொதுவானவை. யார் வேண்டுமானாலும் நான் படிக்கும் புத்தகங்களை படிக்க முடியும். எனக்கு கிடைத்த அனைத்து தகவல்களும் அனைவருக்கும் கிடைக்கும். (7/7)
ஆனால் பெரும்பாலான மக்கள் அதை பொருட்படுத்தவில்லை.
இவர் தான் எலோன் மஸ்க். உலகளவில் முதல் 50 பணக்காரர்களில் ஒருவர். பல வெற்றிகரமான மக்களுக்கு பயன்படும் நிறுவனங்களை நிறுவியவர். இவரிடமிருந்து வாசித்தலைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (8/8)
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வாசிப்பவர். நூலகத்தில் உள்ள அனைத்து புத்தங்களையும் வாசித்து முடித்தவர்.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், நீங்கள் எப்படி ராக்கெட் தயாரிப்பதை பற்றிக் கற்றுக்கொண்டீர்கள் என கேட்ட பொழுது எலோன் கூறுகிறார் (9/9)
நான் புத்தகங்களை படித்தேன் என மிகவும் எளிமையாக கூறிவிட்டார். இவர் பல துறைகளில் பல நிறுவனங்களை நிறுவியுள்ளார். அவை அனைத்தையும் தொடங்குவதற்கு முன்னர் அந்த துறையில் இருக்கும் அனைத்து புத்தங்களையும் வாசித்து விடுவாராம். (10/10)
இவர்கள் போல இன்னும் பல வெற்றிகரமான நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இங்கே குறிப்பிட்டால் எழுதுவதற்கு ஒரு நாள் போதாது.
இவை அனைத்தும் தெரிந்த போதிலும் சிலர் வாசிக்கும் பழக்கத்தை தொடங்காததற்கு கூறும் சாக்கு நேரமில்லை என்பதாகும். (11/11)