Wednesday, 4 May 2022

சித்தர் ரகசிய மாந்திரீகம்Sunday, 13 April 2014பித்ரு சாபம் அல்லது ப்த்ரு தோஷம் எப்படி உண்டாகிறது?


Sunday, 13 April 2014

பித்ரு சாபம் அல்லது ப்த்ரு தோஷம் எப்படி உண்டாகிறது

ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலை மற்றும் கொலை நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்;அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை இது பீடிக்கும்.பாட்டன் காலத்து சொத்தை மட்டுமா நாம் அனுபவிக்கிறோம்? இல்லை பாட்டன் காலத்து பாவங்களையும் சேர்த்துத் தான் அனுபவிக்கிறோம்.சுலபமாக விளக்கம் இதோ:
 
எனது அப்பாவின் தாத்தாவின் சகோதரி அவரதுபிறந்த ஜாதகப்படி 71 வயது வரை வாழ வேண்டியவர் என்று வைத்துக்கொள்வோம்;அவர் 17 ஆம் வயதில் குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்யப்பட்டாலோ/ குடும்ப விரோதத்தினால் வேற்று குடும்பத்தாரால் கொல்லப்பட்டாலோ,இறந்த அந்த தாத்தாவின் சகோதரி எங்கு கொல்லப்பட்டாரோ,அந்த இடத்தில் 71 ஆம் வயது வரை ஆவியாக இருப்பார்;முறைப்படி அவரது ஆயுள் முடிந்ததும்,எம லோகத்திற்கு ஓராண்டு வரை பயணிப்பார்;அங்கு அவர் 17 வயது முதல் 71 வயது வரையிலும் எந்த ஒரு நன்மை தீமைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்தது கண்டு,அவர் விசாரணைக்கைதியாக ஒதுக்கி வைக்கப்படுவார்;இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு பரம்பரையில் ஐந்துபேர்களைத் தாண்டினால்,நான்காம்/ஐந்தாம் தலைமுறையில் இருந்து பித்ருதோஷம் வேலை செய்யும்.

 
ஒருவரின் ஜாதகத்தில் ராகு ,லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ஒன்றில் இருந்தால் அப்பாவழி பித்ரு தோஷம் என்றும்,கேது இந்த இடங்களில் இருந்தால் அம்மாவழி பித்ரு தோஷம் என்றும் அறியலாம்.இந்த ஜாதகருக்கு அப்பா வழி பித்ரு தோஷம் இருக்கிறது எனில்,இவரது அப்பாவின் உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதே பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது
 

Sunday, 10 April 2022

எந்த தெய்வத்தை எத்த‍னைமுறை வலம் வரவேண்டும்! – ஆன்மீக தகவல்


நீங்கள் கோவிலுக்குள் சென்றால், எந்த தெய்வத்தை எத்த‍னை முறை வலம் வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ள‍னர்.
ஆனால், இன்றோ பெயரளவில் ஓரிரு முறை வலம் வருதல் அல்ல‍து பொதுவாக
எல்லா தெய்வங்களையும் மூன்று முறை வலம் வருதல் என்று வழக்க‍ மாகிவிட்டது.
ஆனால், இது தவறு. கீழே பாருங்கள் ஒவ் வொரு தெய்வத் தையும் நாம் எத்தனை வலம் வர வேண்டும் என்று பட்டியலிடப் பட்டுள்ள‍து.
விநாயகரை நீங்கள் வணங்கி அவரை ஒருமுறை தான் வலம் வர வேண்டும்.
ஈஸ்வரனையும், அம்மனையும் வணங்கி 3 முறை வலம் வர வேண்டும்,
அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,
நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,
சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்

Sunday, 27 March 2022

இவர் தான் வாரன் பபேட் உலகிலேயே மூன்றாவது பெரிய பணக்காரர். பணக்கடவுள் என்றே சொல்லலாம். பில் கேட்ஸ் முதல் டிம் குக் வரை அனைவருக்கும் அறிவுரை வழங்கும் வல்லமை படைத்தவர். அவர் வாசிக்கும் பழக்கத்தை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இவர் தான் வாரன் பபேட் உலகிலேயே மூன்றாவது பெரிய பணக்காரர். பணக்கடவுள் என்றே சொல்லலாம். பில் கேட்ஸ் முதல் டிம் குக் வரை அனைவருக்கும் அறிவுரை வழங்கும் வல்லமை படைத்தவர். அவர் வாசிக்கும் பழக்கத்தை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..
ஒரு கல்லூரி மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரை

நாளொன்றிற்கு 500 பக்கங்களை படிக்க தொடங்குங்கள். அறிவு என்பது கூட்டு வட்டி போல மெதுவாக தான் வேலை செய்யும். இதை தினமும் பின்பற்றினால் நீங்கள் அனைவரும் பெரிய இடத்தை அடைய முடியும், (2/2)
ஆனால் உங்களில் பலர் இதை செய்ய மாட்டிர்கள் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். வாரன் ஒரு நாளில் 80 சதவீத நேரத்தை வாசிப்பதில் செலவிடுகிறார்.

இவர் தான் பில் கேட்ஸ். தற்போது உலகில் இரண்டாவது மிக பெரிய பணக்காரர். இவர் புத்தக வாசிப்பை பற்றி என்ன சொல்கிறார் என பார்ப்போம்..
நாளொன்றிற்கு ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பில் செலவிட்டது தான் என் வெற்றிக்கு முக்கிய மூலப்பொருள் என்று நான் நம்புகிறேன்.

புது விடயங்களை கற்றுக்கொள்ளவும் அதை பற்றி ஆராயவும் புத்தங்களை தவிர ஒரு சிறந்த கருவி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. (4/4)
ஒவ்வொரு புத்தகமும் ஒரு புது விடயத்தை எனக்கு கற்றுக்கொடுக்கிறது. மேலும் ஒரு விடயத்தை எப்படி வேறு கோணத்தில் நோக்கலாம் என்பதையும் காண்பிக்கிறது.

வருடம் 50 புத்தங்களை படித்து விடுவார் பில். படிப்பதற்கென வருடம் ஒரு முறை ஒரு முழு வார விடுமுறை எடுத்துக் கொள்வார் கேட்ஸ். (5/5)

 தான் மார்க் கியூபன். இவர் அமெரிக்க பில்லியன் டாலர் தொழிலதிபர். இவர் வாசித்தலை பற்றி கூறும் கருத்து என்ன?

நாளுக்கு மூன்று மணி நேரம் வாசிக்கும் பழக்கம் உடையவர். தன் தொழிலை பற்றி எது கிடைத்தாலும் அதை படித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார். (6/6)
அவரை பொறுத்த வரை அவர் தொழிலில் அவர் தான் ராஜாவாக இருக்க வேண்டும்.

ஒரு முறை அவர் எழுதுகிறார்

நான் வாசிக்கும் அனைத்தும் பொதுவானவை. யார் வேண்டுமானாலும் நான் படிக்கும் புத்தகங்களை படிக்க முடியும். எனக்கு கிடைத்த அனைத்து தகவல்களும் அனைவருக்கும் கிடைக்கும். (7/7)

ஆனால் பெரும்பாலான மக்கள் அதை பொருட்படுத்தவில்லை.

இவர் தான் எலோன் மஸ்க். உலகளவில் முதல் 50 பணக்காரர்களில் ஒருவர். பல வெற்றிகரமான மக்களுக்கு பயன்படும் நிறுவனங்களை நிறுவியவர். இவரிடமிருந்து வாசித்தலைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (8/8)
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வாசிப்பவர். நூலகத்தில் உள்ள அனைத்து புத்தங்களையும் வாசித்து முடித்தவர்.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், நீங்கள் எப்படி ராக்கெட் தயாரிப்பதை பற்றிக் கற்றுக்கொண்டீர்கள் என கேட்ட பொழுது எலோன் கூறுகிறார் (9/9)
நான் புத்தகங்களை படித்தேன் என மிகவும் எளிமையாக கூறிவிட்டார். இவர் பல துறைகளில் பல நிறுவனங்களை நிறுவியுள்ளார். அவை அனைத்தையும் தொடங்குவதற்கு முன்னர் அந்த துறையில் இருக்கும் அனைத்து புத்தங்களையும் வாசித்து விடுவாராம். (10/10)
இவர்கள் போல இன்னும் பல வெற்றிகரமான நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இங்கே குறிப்பிட்டால் எழுதுவதற்கு ஒரு நாள் போதாது.

இவை அனைத்தும் தெரிந்த போதிலும் சிலர் வாசிக்கும் பழக்கத்தை தொடங்காததற்கு கூறும் சாக்கு நேரமில்லை என்பதாகும். (11/11)

Friday, 25 March 2022

தந்தையின் அன்பு..

என் அம்மா எப்போதும் எங்களிடம் கூறுவார்:

 தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள், ஏனெனில் வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி  அலைகழிக்கச் செய்கிறது.

 தாய் தந்தை  வித்தியாசம்???

தாய் 10 மாதங்கள் 
தன் வயிற்றில் சுமக்கிறாள்...
தந்தை வாழ்நாள் முழுவதும் தன் தோளிலும் நெஞ்சிலும் உங்களை சுமக்கிறார்.. (நீங்கள் உணரமாட்டீர்கள்)

அம்மா உங்கள் பசிக்கு உணவளிப்பாள்...

தந்தை உங்களுக்கு பசிக்கும் முன்னே செலவழிபார்,

அம்மா உங்களை மார்பில் சுமக்கிறாள். அவரை நீங்கள் பார்க்க முடியும்... தந்தை உங்களை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.. (அவரை நீங்கள் பார்க்க முடியாது)

 தாயின் அன்பு, அது நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்களுக்குத் தெரியும்...

தந்தையின் அன்பு
அது நீங்கள் பெற்றோர் ஆகும் போது தான் உங்களுக்குத் தெரியும்..(பொறுமையுடன் இருங்கள்)

 ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்
 தந்தை..... காலத்தால்  மீண்டும்  வழங்க இயலாத சொத்து.

!!!தாயை நேசிப்போம்!!! ❤️❤️❤️
!!!தந்தையை சுவாசிப்போம்!!!❤️❤️❤️

Thursday, 24 March 2022

குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடும் ஆண்கள்..!

குடும்பத்தின் சாவியை 
மனைவியிடம் ஒப்படைத்து விடும் ஆண்கள்..! 

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். 
குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

ஒரு சுவாரஸ்யமான‌ கதை.....
ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ?  இந்த மாதிரி ! ”

குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். 

குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

படித்ததில் பிடத்தது

படித்ததில் பிடித்தது - OUR JUDICIAL SYSTEM...

நம் நாட்டில் நீதி துறையின் நிலை.

ஒரு காட்டிலிருந்து பசு ஒன்று வேகமாக ஓடி கொண்டிருந்தது. வழியில் பார்த்த ஒரு யானை "ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்" என்று கேட்டது. 
அதற்கு அந்த பசு "அரசாங்கம் இந்த காட்டிலுள்ள எருமைகளை பிடிக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது" என்று சொன்னது. 
அதற்கு அந்த யானை,"எருமைகளை தானே பிடிக்க சொல்லியிருக்கிறது? நீ ஏன் ஓடுகிறாய்" என்று கேட்டது. 
அதற்கு பசு," நீ சொல்வது சரி தான். ஆனால் என்னை பிடித்து எருமை என்று சொல்லிவிட்டால், இல்லை, நான் பசு தான் என்று நிரூபிப்பதற்கு 20 வருடங்கள் ஆகுமே. அதனால் தான் ஓடுகிறேன்" என்று சொன்னதை அடுத்து, அந்த யானையும் ஓடத்துவங்கியது.

Tuesday, 22 March 2022

பெண்ணின் மதிப்பு..

பெண்!!! பெண்!!! 
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”…

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், 
இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். 
ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். 

இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” 
என்றது. 
அதற்கு கடவுள், 
“இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். 
இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். 
அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். 
சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். 
அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். 
இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார். 
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. 
ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, 
“ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை. 
அதற்கு கடவுள், 
“இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில்
துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள். 
ஆச்சரியமான தேவதை, 
“உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். 
இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” 
என்றது தேவதை. 
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………

Wednesday, 16 March 2022

சாலமன் ரேகை..

என் வலது ரேகை
படம் இது..ரேகை ஜோதிட சாஸ்திரம் :

கைரேகை ஜோதிடத்தில் சாலமன் ரேகையின் சிறப்பு !!

கைரேகை சாஸ்திரத்தில் ஒர் மனிதனின் கைகேகையில் சாலமன் ரேகை என்ற ஒன்று இருந்தால் எதிர்காலத்தை முன் உணரும் சக்தி உடையவராக இருப்பார் என்றும்.26 உயிர்களின் உணர்வுகளை அறிந்தவராக அவர் இருப்பார் என்றும் ,புலனாய்வு துறையிலும் துப்பறியும் துறையிலும் சிறந்து விளங்குவார் என்றும், மனிதர்களை உற்று கவனித்து அவர்களுக்கு சில விஷயங்களை நடப்பதற்கு முன்பே கூறும் சக்தி உடையவராக இருப்பார் என்றும் கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது சரி உங்களுக்கு சாலமன் ரேகை உள்ளதா என அறிய அருகில் உள்ள புகைப்படத்தை பாருங்கள். 

ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் பாருங்கள் .அதில் குருமேடு என்பது பெருவிரல் அருகிலுள்ள ஆள்காட்டி விரலில் கீழ்பகுதியில் உள்ள மேடாகும். (படத்தில் பேனாவில் குறித்துள்ள படி இருப்பது குருமேடு.அதில் கீழ் நோக்கியவாறு கோடுகள் இருப்பதே சாலமன் ரேகையாகும்) சாலமன் எனும் ஓர் அரசருக்கு முன் உணரும் சக்தி இருந்ததாகவும் அவர் பெயராலேயே சாலமன் ரேகை என அழைக்கப்பட்டதாம். சுவாரஷ்யத்திற்காக உங்கள் கையை சோதித்துப்பாருங்கள் , நீங்களும் சாலமனாக இருக்கலாம். சாலமன் ரேகைக்கு "சக்திரேகை" எற்று மற்றொரு பெயரும் உள்ளது.