திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!
குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்
இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக்கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக்கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு

திட்டம் போட்டார். கிருஷ்ண
ர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக திரௌபதியிடம் விளக்கினார். நீ எப்படியா வது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நம ஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றா ல் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார். என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி, திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.
இவ்வாறு, தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல்ஸ்ரீகிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌ பதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார். அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு பகவானே! இவ்வுலகமே தங்
கள் திருவடிகளை வணங்கு ம்போது தாங்கள் திரௌபதி யின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ பீஷ்ம ரே! திரௌபதியும் அர்ச்சுன னும் என் பக்தர்கள். என் பக் தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித் தார். ஆம்! அது உண்மை தான் ! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யா ராயிருந்தாலும் கைவிடாமல் தக்க சமயத்தில் துணையிரு ந்து காப் பாற்றுவார்.
No comments:
Post a Comment