Friday, 12 August 2016

தமிழர்களின் தொன்மைக்கு ஒரு சான்று-யாளி சிற்பங்கள்..!

ம் முன்னோர்கள் நடனக்கலை,சிற்பக்கலை,பண்பாடு ,கலாச்சாரம் ,கல்வி ,கலவி,போர்முறை,வீரம் ,மேலும் பல சான்றுகளை வரலாறாக பதிவிட்டு சென்ற இடம் கோவில்கள்.கோவில்களில் ஒரு விசித்திரமான விலங்கின் சிற்பத்தை நீங்கள் கண்டிருக்ககூடும்.
யாளி
அந்த சிற்பம் சிங்க உடலும் விசித்திரமான. தலைகளும் கொண்ட யாளி எனப்படும் மிருகம்.
ஒன்றை நாம் யோசிக்க தவறிவிட்டோம்.நம் முன்னோர்கள் இந்த சிற்பங்களை வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மிருகமும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நம்மை போல நம்முடன் வாழ்ந்திருக்கிறது.

"அது ஏன் ஒரு கற்பனை சிறப்பாக இருக்கக்கூடாது?" என்ற வினா உங்களுக்கு எழக்கூடும்.தென் இந்தியாவில் பல்வேறு கோவில்களிலும் இந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.அது கற்பனை என்றால் ஒரே கற்பனை பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல சிற்பிகளிடம் தோன்றியது என்பது சாத்தியமில்லாத ஒன்று.மேலும் தென்னிந்தியவை பிரித்து ஆண்டது மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டியர்கள் என்பதால் இவர்கள் சிற்பக்கலைஞர்களும் வேறு வேறாகத்தான் இருந்திருக்கக்கூடும்.


சிங்க யாளி.
யாளியின் வகைகள் :
யாளியின் உடலமைப்பு பெரும்பாலும் நான்கு கால்களை கொண்ட ஒரு ராட்சத சிங்கத்தை போன்றும் அதன் தலை மட்டுமே மாறுபடும்.
1.சிங்க யாளி (சிங்கத்தின் தலை )
2.மகர யாளி (ஆட்டின் தலை)
3.யானை யாளி (யானையின் தலை)
இவை பாலூட்டிகளா முட்டையிடும் வகையை சேர்ந்தவையா என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை.இவை ஊனுண்ணியா?தழையுண்ணியா? என்பதிலும் குழப்பமே.எனினும் இவை ராட்சத உருவமும் யானைகள் ,சிங்கங்களை விட அசுர பலம் வாய்ந்தவைகளாக இருந்திருக்கக்கூடும்.இதற்கு கோவில்களில் யானை மற்றும் யாளி சிற்பங்கள் 1:10 விகிதத்தில் செதுக்கபட்டிருப்பதே சான்றுகள்.
யானையை விட அசுரபலம் கொண்ட யாளி

சரி யாளிக்கும் தமிழர்கள் தொன்மைக்கும் என்ன சம்பந்தம் ?கி.மு 25 000 களில் யாளிகள் நம்முடன் வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நம் சமய கோவிலின் கட்டுமானம் செங்கல்லில் இருந்து கருங்கற்களால் செதுக்கப்பட்டது கி.பி 800 களில் என்றால் இத்தனை காலம் மருவி வந்து கோவில் சிற்பங்களில் ஈட்டி ஏந்திய வீரன்  யாளியின் மேல் போர் புரிவது போன்ற சிற்பங்கள் தமிழர்களின் தொன்மையை விளக்குவதன்றி வேறென்ன ?
இன்றும் ஒரு சில பழமையான கோவில்களில் உற்சவர் சிலைகளை சுமந்து வரும் வாகனங்கள் யாளிகள்தான்.
யாளி மண்டபம்.

டைனோசர்களை பற்றி படம் எடுத்த Steven Spielberg போல யாளி பற்றிய படம் எடுக்க ஒரு இயக்குனர் இல்லாமல் போனது வருத்தத்தக்குரியது தான்.எனினும் மத்திய மாநில அரசுகள் புராதாண சிறப்பு மிகுந்த இந்த மிருகத்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது  தமிழர்களின் பெருமைகளை வைரத்தை பட்டை தீட்டாமல் வைத்திருப்பது போலுள்ளது.

நன்றி 

மா.இரவிச்சந்திரன் .

No comments:

Post a Comment