Monday, 27 June 2016

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!


மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

Tuesday, 14 June 2016

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: வேகமாக உயர்ந்து வரும் அமராவதி அணை..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: வேகமாக உயர்ந்து வரும் அமராவதி அணை

Friday, 10 June 2016

படித்ததில் பிடித்தது.. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ----# ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...


படித்ததில் பிடித்தது ....
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.
ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.
ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.
ஆசிரியர் அனுமதிக்கிறார்.
மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?
ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா?
மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.
இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.
உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல.
அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.
அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
# ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தா ர்.

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தா ர்.


கடவுள்: "வா மகனே.......
.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........
உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.
நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் அதற்க்கான செயல்களை மட்டும் செய்.
எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......
.அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

புத்திசாலிகள் ஆண்களா பெண்களா எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கதை ...

புத்திசாலிகள் ஆண்களா பெண்களா


எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கதை ... 
ஒரு நாள் ஒரு பெண்மணி கோல்ப் விளையாட சென்றாள். அவள் அடித்த பந்து கோல்ப் கிரவுண்டு பொந்துக்குள் விழந்து விட்டது 
⛳ 
.அவள் அந்த பந்தை எடுக்க பொந்துக்குள் குனிந்தாள். அப்போது பந்தோடு ஒரு குட்டி தவளையும் 🐸 அதில் இருந்தது. 
🐸 
அந்த தவளை பெண்ணிடம் சொல்லியது "என்னை இந்த குழியில் இருந்து விடுவித்தால் உனக்கு 3⃣முன்று வரங்கள் தருகிறேன்" என்றது. 

அந்த பெண் தவளைக்கு குழியில் விடுதலை தந்தாள். 
மேலே வந்த அந்த 🐸 தவளை சொன்னது "அந்த வரத்தை தர ஒரு நிபந்தனை அதை சொல்ல மறந்து விட்டேன். உனக்கு நான் கொடுக்கும் வரம் உன் கணவருக்கும் பத்து மடங்கு அதிகமாக கிடைக்கும்" என்றது. அந்த பெண் சொன்னாள் "அது பரவாயில்லை" என்றாள். 
👸 
அந்த பெண் முதல் வரத்தை கொண்டு நான் இவ்வுலகில மிக அழகிய பெண்ணாக வேண்டும் என கேட்டாள். அந்த 
🐸 
தவளை அவளை எச்சரித்தது. 
உன் கணவன் உன்னை விட அழகானவாக மாறி விடுவான் என்றது. 
☝ 
"அது பரவாயில்லை ஏன் எனில் அவருக்கு இணையான அழகு படைத்த என்னை மட்டுமே அவர் பார்ப்பார்" என அந்த பெண் சொன்னாள். 

ஆகவே முதல் வரம் கிடைத்து அந்த பெண் உலகில் அழகிய பெண்ணாணள். அவள் கணவனும் உலகில் அவளை விட ஆணாக மாறினான். 
💰 
அந்த பெண் தனது இரண்டாவது வரமாக "உலகின் முதல் பணக்காரியாக மாற வேண்டும்" என கேட்டாள். 
அந்த தவளை சொன்னது, "உன் கணவனும் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனகிவிடுவான் என்றது". 

அதுவும் பரவாயில்லை அவர் என்னுடையவர் என்னை பற்றி தெரியும்." 

ஆகவே, இரண்டாவது வரத்தின் படி அவள் உலக முதல் பணக்காரியானள்.! 
அவள் கணவன் அவளை விட பத்து மடங்கு பெரிய பணக்காரன் ஆனான். 
அந்த தவளை பெண்ணிடம் முன்றாவது வரத்தை கேள் என்றது. 

அதற்கு அந்த பெண் "எனக்கு மிக மெல்லிய மாரடைப்பு வர வேண்டும் என கேட்டாள்." 
⚡. 
இந்த கதையின் நீதி "பெண்கள் மிக பெரிய புத்திசாலிகள் அவர்களோடு போட்டி போடுவது மடத்தனம்." 

பெண்களுக்கு மட்டும் எச்சரிக்கை:- இது ஒரு நகைச்சுவை உங்களுக்கும் மட்டும். நல்ல எண்ணத்தோடு இந்த பதிவை இதோடு படிப்பதை நிறுத்தி விட்டு வேலையை பாருங்கள். 

அந்த கணவனுக்கு அந்த பெண்ணை விட பத்து மடங்கு மிக குறைந்த மெல்லிய மாரடைப்பு மட்டும் வந்தது. 

இந்த கதையின் இன்னொரு நீதி. 
பெண்ணுக்கு தன் எப்போதும் புத்திசாலி என்று நினைப்பு. அதன்படியே அவர்கள் நடந்து நமக்கு நல்லது செய்கிறார்கள்.🙉

ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனுக்கு மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்கமுடியும்...



ஒரு ஆசிரியர் நினைத்தால் 
ஒரு மாணவனுக்கு
மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்கமுடியும்...

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது 
என் ஆசிரியர் என்னிடம்

'உனக்கு எவரெஸ்ட்
சிகரத்தின் உயரம் தெரியுமா..?'

என கேட்டபோது நான் படித்ததை மறந்து போய் திருதிருவென விழித்தேன்...

அப்போது என் ஆசிரியர் சொன்னது
'எட்டு எட்டா
போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம். 
ஞாபகம் வச்சிக்கோ நம்பி..!

அவர் அப்போது 8848 மீட்டர் 
எவரெஸ்ட்டின் உயரம்
என சாதாரணமாக சொல்லி கொடுத்திருந்தால்
நான் அப்போதே மறந்திருப்பேன்...

ஆனால் 
இப்போதுவரை என் நினைவில்
இருப்பது
'எட்டு எட்டா போனா நாலு எட்டுல
எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம்!' என்பது மட்டுமே...!

100 யூனிட் இலவச மின்சாரம்..! யார்? யாருக்கு எவ்வளவு தள்ளுபடி..?

100 யூனிட் இலவச மின்சாரம்..! யார்? யாருக்கு எவ்வளவு தள்ளுபடி....?

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி யார், யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்ற அன்றே, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது 5ம் மாத மின் கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

எவ்வாறு கணக்கிட்டு கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில்,"100 யூனிட் மின்சாரம் இலவசம் எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 91 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்கள் பயனடைகிறார்கள். ஏற்கனவே குடிசைகள் மற்றும்
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
                                                                   

பொதுவாக மின்கட்டணத்தை பொறுத்தவரையில் முதல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.30–ம், 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.3.50–ம், 201 முதல் 500 யூனிட் வரை ரூ.4.60 கட்டணமும், 501 யூனிட்டுக்கு மேல் ரூ.6.60 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டம் முதல்வர் கையெழுத்து போட்ட மே மாதம் 23ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஜூலை 23ம் தேதிக்கு பிறகு கணக்கெடுக்கப்படுபவர்களுக்கு முழுமையான 100 யூனிட் சலுகை கிடைக்கும். அதற்கு முன்பு பில் தொகை கணக்கெடுக்கப்படுபவர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய மின்சாரம், அரசின் சலுகை அமல்படுத்தப்பட்ட தேதி ஆகியவற்றின் அடிப்படையில் மின் கட்டண சலுகை கிடைக்கும்.

சராசரியாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை 100 யூனிட் மின்சாரத்தின் கட்டணமான ரூ.175 தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் வாரியத்திற்கு மாதம் ரூ.134 கோடி வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.1,608 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. இதனை மாநில அரசு வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதற்கான ஆணை தமிழக அரசிடம் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது" என்று கூறினர்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!

வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!



1. இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, 'பாசிடிவ்'வாக இருக்கும்.
"அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா... ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா... ? உடனே, செய்து விடுவார்கள். அவர்களிடம், 'பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.

2. நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும்போது, உங்கள் அருமை குழந்தை என்ன என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

3. உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவுக் கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங்தான் முக்கியம் என்று செல்வதும்...  பெட்ஷீட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதும்தான் மற்றவற்றை விட முக்கியம் என்பதுபோன்று நீங்கள் நடந்துகொண்டதுதான் அவர்களின் நினைவில் நிற்க வேண்டுமா...?
4. சின்ன, சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள். ஓவர் டேக் செய்ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்? புன்சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்துவிட்டு, அடுத்த ரயிலில் போகலாமே!

5. பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால் ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளிப் போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, 'இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு. எனவே அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

6. புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாகதான் எழ வேண்டுமா? சீக்கிரம் எழுந்து, அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் ஃபாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாக தூங்குங்கள்.

7. அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர் சனி, ஞாயிற்றுக் கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா...? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.
8. அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், பயன்படுத்தாத படுக்கை,  பொம்மைகள், புத்தகங்கள், மரச்சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

9. 'நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், 'பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், 'நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

10. சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத்தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

11. நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தில், கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

12. உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களைப் பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களை  அவர்களும் பாராட்டக் கூடும்.

13. எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

14. நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

15. உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புதுப் பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலையில் எழுந்து மார்கெட்டிற்கு சென்று, குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட, வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

16. நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.
17. ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

18. வீட்டுக்கு வெளியே சென்று, நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

19. வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணருவீர்கள்.

20. நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

21. வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடேதான்!

22. நல்ல மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

23. உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான 'சுமை'. வருபவர்களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

24. சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

25. யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரர் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்.

Wednesday, 8 June 2016

ஒரு வழியாக.. ஒரு வார தாமதத்திற்குப் பின்... தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை! Wednesday, June 8, 2016, 13:02 [IST]

ஒரு வழியாக.. ஒரு வார தாமதத்திற்குப் பின்... தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை! 
Wednesday, June 8, 2016, 13:02 [IST] 

திருவனந்தபுரம்: கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு விஞ்ஞானி பிபி யாதவ் புனேவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது. வியாழக்கிழமை அது தொடங்கியுள்ளது. படிப்படியாக அது தமிழகத்திலும், பரவும் என்றார். அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 7 செமீ அளவிலான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எதிர்பார்க்கிறது. இதற்கிடையே, கேரள கடற்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கன மழை பெய்யும் என்றும் திருவனந்தபுரத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் சந்தோஷ் தெரிவித்தார். தென் மேற்குப் பருவ மழை ஜூன் 1ம் தேதி வழக்கமாக தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வார கால தாமதத்திற்குப் பின்னர் அது வந்து சேர்ந்துள்ளது. தென் மேற்குப் பருவ மழை இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட கடந்த சில நாட்களாகவே கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் பருவ மழைக்கான காரணிகள் உருவாகாத காரணத்தால் அதை முறைப்படி அறிவிக்காமல் இருந்தது வானிலை மையம். தமிழகத்திலும் கேரளாவில் மழை தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குற்றாலத்தில் சாரல் மழை காணப்படுகிறது. அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் லேசான மழைப்பொழிவு காணப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையை எதிர்பார்க்கலாம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 9 செமீ மழையும் குழித்துறையில் 8 செமீ மழையும் பெய்துள்ளது. தாம்பரத்தில் 3 செமீ மழை பெய்துள்ளது. தெற்கு அரபிக் கடலில் மேற்குத் திசை காற்று வலுப்பெற்று நடுப் பகுதி வரை பரவியுள்ளது. இதனால் கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது என்றார் அவர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/south-west-monsoon-arrives-kerala-255510.html

Tuesday, 7 June 2016

மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

மனிதர்களுக்காக மட்டும் இப்புவி இல்லை...!

ழுத்தாளர் நக்கீரன், தன் காடோடிகள் நாவலில் இப்படி எழுதி இருப்பார், “மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது டாலர்,  ,டாலர் , டாலர் மட்டுமே .” எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் இவை.
எப்போதுமே தன்னை மையப்படுத்தியே நினைக்கும் மனித மனம், என்றுமே மரத்தை தன் சக ஜீவராசியாக நினைத்ததில்லை. மரம் என்றால் பணம், மரம் என்றால் கட்டை, மரம் என்றால் கதவுகள்.  எவ்வளவு குரூரமான சிந்தனை இவை. துவக்கத்தில் மரத்தை பணமாக பார்க்க பழகிய மனிதன், கொஞ்சம் கொஞ்சமாக கானுயிர் எல்லாவற்றையுமே பணமாக பார்க்க பழகிவிட்டான்; பணமாக மட்டுமே பார்க்க பழகிவிட்டான். 

யானையா... அதன் தந்தம் பணம். காண்டாமிருகமா... அதன் கொம்பு பணம். எறும்புண்ணியா... அதன் செதில்கள் பணம். எதுவுமே நமக்கு இப்புவியை பங்கிட்டுக்கொள்ளும் சக ஜீவராசிகள் அல்ல. எல்லாம் தம் நலனுக்காகதான் படைக்கப்பட்டது என்று நாம் எண்ணுகிறோம். உணவுச் சங்கிலி கண்ணியில், நாம் மேலே இருக்கிறோம் என்ற மமதையால், நம் நலனுக்காக எந்த எல்லைக்கும் போகிறோம். நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்று ஆடுகிறோம். கானகத்தை வரைமுறையில்லாமல் அழிக்கிறோம். பெருமைக்காக, பணத்திற்காக வேட்டையாடுகிறோம். தானே மேம்பட்டவன்,  தம்மால் எல்லாம் செய்ய முடியும் என்று கர்வம் கொள்கிறோம்.  ஆனால், நிதர்சனம்  அப்படியாக இருக்கவில்லை.  'மனிதன் துச்சமாக நினைக்கும் தேனீக்கள் அழிந்தால், அதன் பிறகு மனிதனுக்கு மிச்சமிருப்பது நான்கு ஆண்டு கால வாழ்க்கைதான்' என்றார் ஐன்ஸ்டீன். இயற்கையில் எதுவுமே வேண்டாதது இல்லை. ஒன்றோடு ஒன்று மிக அழகாக இணைக்கப்பட்டது. மனிதன்  ஒன்றை சிதைக்கிறான் என்றால், தம்மை தாமே சிதைத்துக் கொள்கிறான் என்று தான் பொருள். நாம் இதை உணர மறுக்கிறோம்.  

வளர்ச்சியும், கொசுவும்:
1970 முதல் 2000 வரையிலான காலக்கட்டங்களில் மட்டும், உலகம் முழுவதும் கானுயிர்கள் ஏறத்தாழ 40 சதவீதம் வரை குறைந்துவிட்டன. இதற்கு முக்கிய காரணம், கானுயிர்களின் வசிப்பிடங்களை அழித்து பெரிய பெரிய திட்டங்கள் கொண்டு வருவது, மற்றொன்று சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடி கானுயிர்களை விற்பது. 

உண்மையில் வளர்ச்சி என்று நாம் சொல்லிக் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் செய்த நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். காடுகளை அழித்து நாம் கொண்டுவந்த திட்டங்கள் சிறிது காலத்திற்கு வேண்டுமானால் சில பயன்களை தந்திருக்கலாம். ஆனால், தொலைநோக்காக பார்த்தால் தீமைகளே அதிமாக இருக்கிறது. இதை அறிவியலாளர்களும் இப்போது ஏற்றுக்கொள்கிறார்கள்.  சிறிய திட்டங்கள் மூலம் நீடித்த வளம்குன்றா வளர்ச்சியை முன்னெடுக்க முடியுமென்றாலும், நாம் மீண்டும் மீண்டும் சூழலியல் கேடுகளை தரும் பெரிய திட்டங்கள் மீதே கவனம் செலுத்துகிறோம்.  இதற்காக கானகங்களை, மலைகளை அழிக்கிறோம். வளர்ச்சியும், அழியும் எதிரெதிர் திசையில் இருக்கின்றன. ஆனால் மனித மூளை, அழிவின் மூலமாக வளர்ச்சியைக் கண்டுவிடலாம் என்று துடிக்கிறது. ஒரு பக்கம் நம் அரசுகள் கியோட்டோ அறிக்கை, கோபன்ஹேகன் மாநாடு, கான்குன் மாநாடு, டர்பன் மாநாடு,தோஹா மாநாடு, வார்சா மாநாடு என்று குளிரூப்பட்ட அறையில் அமர்ந்து பருவநிலை மாற்றத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டே,  அழிவின் பாதையில் வெகுவேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

நமது தவறான பொருளாதாரக் கொள்கைகளால், பெரும் திட்டங்களால், கடந்த 50 ஆண்டுகளில் நமது வெப்பநிலை 0.3 லிருந்து 0.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. அடுத்த 200 ஆண்டுகளில் நமது வெப்பநிலை 2லிருந்து 3 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரித்து வருவதால், கொசுக்களின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். நமது வெப்பநிலை அதிகரிப்புக்கு ஏற்ப கொசுக்களும் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும் கொசுக்கள் தாக்குப்பிடிக்க துவங்கிவிட்டன என்கிறது ஓர் ஆய்வு. கொசுக்கள் அதிகரித்தால், மலேரியா பரவும், வேறு தொற்று நோய்களும் வரும். உலகத்தையே வென்றுவிட்டதாக பிதற்றும் மனிதன், இறுதியில் ஒரு கொசுவைக்கூட வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இதை நாம் உணராமல், வளர்ச்சியின்  பெயரால் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறோம். 

வளர்ச்சி வேண்டும்தான். ஆனால், அது இயற்கையை சுரண்டுவதாக இருக்கக் கூடாது. அதனுடன் இயைந்து, அதன் லயத்தில் அதை பயன்படுத்துவதாக இருக்க வேண்டும். தவறுவோமானால் பேரழிவு நமக்குதான் ஏற்படும்.

காண்டாமிருகத்தின் அழிவும், நம் குழந்தைகளும்:

ஒரு பக்கம் வளர்ச்சியின் பெயரால் கானகத்தை சுரண்டி, கானுயிர்களை அழிக்கிறோமென்றால், இன்னொரு பக்கம் அறமற்று கானுயிர்களை அழிக்கிறோம்.  2007 ம் ஆண்டு ஆப்ரிக்காவில் 13 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டன. ஆனால், 2013 ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 1004 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது, ஆறு ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும் 7,700 சதவீதமாக காண்டாமிருக வேட்டை உயர்ந்துள்ளது.  எங்கோ காண்டாமிருகம் அழிந்தால், நமக்கென்ன என்று சாதாரணமாக இருந்துவிட முடியாது. ஆம், காண்டாமிருகத்தின் அழிவும், நம் குழந்தைகளின் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது. காண்டாமிருகம், ‘குடை இனத்தை’ (Umbrella Species) சார்ந்தது. அதாவது,  பரப்பெல்லை மற்றும் வசிப்பிடத் தேவைகள் அதிகமாக இருக்கும் ஒரு இனம் பாதுகாக்கப்பட்டால், சிறிய பரப்பெல்லைகள் கொண்ட பல்வேறு இனங்களும் பாதுகாக்கப்படும் என்பது இதன் பொருளாகும். காண்டாமிருகம் பாதுகாக்கப்படும் போது, அதனுடன் தன்  இடத்தை பகிர்ந்துக் கொள்ளும், மற்ற உயிரினங்களும் பாதுகாக்கப்படும். உயிர் சங்கிலி வலுவானதாக இருக்கும். ஆனால், இது புரியாமல் அல்லது புரிந்துகொண்டே  அதற்கு எதிராக செயல்படும்போது இயற்கை கண்ணி சிதையும். இயற்கை கண்ணியில் பிணைக்கப்பட்டுள்ள மனிதனும் சிதைவான். இன்று நாம் தப்பித்தாலும், நாளை குழந்தைகள் மோசமான விளைவுகளை சந்திக்கும்

கானகத்தை அதன் பூர்வ குடிகளிடம் ஒப்படையுங்கள்:
நாம் காடுகளையும், அதனுள் வாழும் சக உயிர்களையும் காப்பது என்பது ஏதோ இயற்கைக்கு செய்யும் சேவை அல்ல. நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் அது சுயநலமும் கூட. ஆம், தேனீயின் நல்வாழ்வு, நம் எதிர்காலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது எனும் போது, தேனீயை காப்பது எப்படி பொது நலம் ஆகும்...? நாமும், நம் அடுத்த சந்ததியும், இப்புவியில் மகிழ்வாக வாழ வேண்டுமென்று விரும்புவோமாயின், இந்த புவி நமக்கானது மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். சக ஜீவராசிகளுடன் இப்புவியை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் தாண்டி, கானகத்தை அதன் பூர்வ குடிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.  

நமது பாரதி பள்ளி, வரும் கல்வி ஆண்டிலும் சாதனை பல படைத்து அறிவு சார்ந்த மாணவ செல்வங்களை நம் குடும்பத்துக்கும், நாட்டிற்கும் அளித்திட அன்புடன் வாழ்த்துவோம்.

நமது பாரதி பள்ளி,
வரும் கல்வி ஆண்டிலும் சாதனை பல படைத்து அறிவு சார்ந்த மாணவ செல்வங்களை நம் குடும்பத்துக்கும், நாட்டிற்கும் அளித்திட
அன்புடன் வாழ்த்துவோம்.

நாளை 08-06-2016 அன்று முதல்,
30-தாவது ஆண்டில் காலடி பதிக்கும் நமது பாரதி பள்ளி
மேன்மேலும் சாதனை பல படைத்தது.


வரும் கல்வி ஆண்டிலும் சாதனை பல படைத்து அறிவு சார்ந்த மாணவ செல்வங்களை நம் குடும்பத்துக்கும், நாட்டிற்கும் அளித்திட
அன்புடன் வாழ்த்துவோம்.

உங்கள் குழந்தையின் வயதை சொல்லுங்கள்... வளர்ச்சியை சொல்கிறோம்!

உங்கள் குழந்தையின் வயதை சொல்லுங்கள்... வளர்ச்சியை சொல்கிறோம்!

குழந்தை வளர்ச்சியில் ஒன்று முதல் 10 வயது வரைக்கும் உள்ள பருவம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சி படிப்படியாக எப்படி இருக்கும் என்பதை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ரா. ராதிகா.

1 வயது 
ஒரு வயது முடியும் தருவாயில் இருக்கும் குழந்தைகள் அம்மா, அப்பாவை தவிர பிறரை பார்த்தால் தூக்கக் குறைவாலோ அல்லது பயம் காரணமாகவோ அழுவார்கள். ம்மா, ப்பா, த்தா என ஓரிரண்டு வார்த்தைகளை பேச ஆரம்பிப்பார்கள். பெற்றோர் சொல்வதை புரிந்து கொள்வார்கள். தவழ்ந்து செல்வார்கள். சில குழந்தைகள் நடக்கவும் செய்யும்.

2 வயது
தாய்ப்பால் தவிர பிற உணவுகளைச் சாப்பிடத் துவங்கும் வயது. இதரக் குழந்தைகளையும் அடையாளம் கண்டு கொள்வார்கள். சக குழந்தைகளை பார்த்துச் சிரிப்பது, விளையாட, பிறர் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். டாய்லெட் வருகிறது என்று சொல்லத்தெரியாது. 50 வார்த்தைகள் வரை பேசுவார்கள். எல்லாவற்றையும் புதிதாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முயல்வார்கள். புத்தகங்களை பிரித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள். வீட்டைச் சுற்றி வருவார்கள். படிகளில் இறங்கவோ, ஏறவோ முயற்சிப்பார்கள்.

3 வயது
பிறரை பார்த்தால் புன்னகைப்பார்கள். அழுவது குறையும். சரளமாக, வார்த்தைகளைக் கோர்வையாகப் பேச ஆரம்பிப்பார்கள். பந்தை பிடித்து விளையாடுவது, பொம்மையை வைத்து சோறூட்டுவது, நிஜ மனிதர்களாக அவற்றை பாவித்து பேசுவது எல்லாம் நடக்கும். அவர்கள் எந்த கை பழக்கமுள்ளவர்கள் என்பதை நமக்கு உணர்த்தும் காலமிது. இடதோ அல்லது வலதோ எதுவாக இருந்தாலும் அதை அங்கீகரித்துக் கொள்ளுங்கள். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் காலமிது. சில குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். 

4 வயது
எழுத்துக்களை அதிக அளவில் கற்றுக் கொள்ளும் காலமிது. பெற்றோரை விட மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர் கண்காணிப்பு இல்லாத நேரங்களில் தவறுதலாக கீழே விழுந்து காயம் ஏற்படுத்திக் கொள்வார்கள்.

5 வயது
பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் அல்லது பள்ளியில் சக நண்பர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள். பிற குழந்தைகள் அணிந்து கொள்ளும் உடை, சாக்லேட், விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஊடகங்களில் வரும் விளம்பரங்களையும் கவனிக்கத் தொடங்குவார்கள். பாடப்புத்தகங்களை சரளமாகப் படிப்பார்கள்.

6 வயது
உடல் ரீதியாக வளர்ச்சியடைவார்கள். சக குழந்தைகளிடம் ஆண், பெண் என்ற வித்தியாசத்தை காண்பார்கள். நண்பர்கள், விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் சக குழந்தைகளுடன் தங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்வார்கள்.

7 வயது
பாலின ரீதியாக தங்களை அடையாளம் காண்பார்கள். இந்த வயதில் சில குழந்தைகள் ஆசிரியர் மீது மிகவும் 'அட்டாச்' ஆக இருப்பார்கள். சில குழந்தைகள், பெற்றோரில் அம்மா அல்லது அப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.

8 வயது
இந்த வயதில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அப்பா, அம்மா சொல்வதுதான் சரி என்பது குழந்தைகளுக்கு புரிய ஆரம்பிக்கும் வயது இதுதான். சில நேரங்களில்  மட்டும் அடம்பிடிப்பார்கள்.
9 வயது
உடல் ரீதியாக பெரும் மாற்றங்கள் ஏற்படும். இளம் பருவத்துக்கும், குழந்தைப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவம் என்பதால், ஒரு சில குழந்தைகள் மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடும்.

10 வயது
பெரிய மனிதர்கள் போல பேசுவார்கள். சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெற்றோர்களிடம் அதிகம் கேள்விகள் கேட்பார்கள். உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்.

உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. நாம் மிகவும் சத்தானவை என கருதும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை விட வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும்.


உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை.
இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை
பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அமிலம் அதிகம் உள்ளது.
நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக
செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.
இதில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு
நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை
உண்பது நல்லது.
நம் உணவில் இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால்
ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கலாம்.
தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும்.
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால்
என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய நரம்புகளை பாதுகாக்கிறது. இதயநோயை தடுக்கிறது.
மாரடைப்பு அபாயத்தை கட்டுப்படுத்துகிறது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில் உள்ள தீமை செய்யும்
கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இளமையை பராமரிக்க
உதவுகிறது. இதில் உள்ள நியாசின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.
நாம் மிகவும் சத்தானவை என கருதும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை விட வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும்.
பெண்களுக்கு
தேவையான போலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12, உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.