Friday, 18 November 2016

மிக்கிக்கு மவுசு குறைவதே இல்லை! உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு..!

குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர், வால்ட் டிஸ்னி.
கோபக்கார அப்பாவுக்கும் அன்பான அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர் டிஸ்னி. சிறு வயதில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்துவந்தார். இவருக்கு படங்கள் வரைவது ரொம்பப் பிடிக்கும்.
அதனால், ஓவியம் கற்றுத் தரும் தனி வகுப்பில் தன்னை சேர்த்துவிடச் சொல்லி அடம்பிடிக்க, அம்மாவும் சேர்த்துவிட்டார்.
அங்கே, ஓவியத்தோடு, புகைப்படம் எடுக்கவும் கார்ட்டூன்கள் வரையவும் ஆர்வம் மிகுந்தது..
நாளடைவில் கார்ட்டூன் மீது தனி கவனம் குவிந்தது. அவர் வரைந்த புதுமாதிரியான ஓவியங்கள் யாரையும் கவரவில்லை.
அதனால், '
உனக்குச் சரியாகப் படம் வரையத் தெரியவில்லை' என்று பலரும் சொன்னார்கள். 'இனி நான் வரையப்போகும் கார்ட்டூன் கதாபாத்திரம், உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும்' என மனதில் சபதம் கொண்டார்.
அதற்காக பலவிதமான உருவங்களை வரைந்தும் மனம் நிறைவுறாமல் அவற்றையெல்லாம் ஓரம்கட்டிவிட்டார்.

அப்போது, தன் அறையில் அங்கும் இங்குமாக தாவித் திரியும் எலி, அவரது கவனத்துக்கு வந்தது. இதற்குமுன் அந்த எலியின் சேட்டைகளைப் பார்த்து ரசித்திருக்கிறார். தான் சாப்பிடும்போதெல்லாம் அதற்கும் கொஞ்சம் கொடுப்பார். அதையே கார்ட்டூனாக வரைந்தார். தனது நண்பர், ஐவர்க்ஸுடன் சேர்ந்து 'மிக்கி மவுஸ்' கேரக்டரை உருவாக்கினார். அதற்குள் மனிதர்களின் குணங்களைப் புகுத்தினார்.
அவர் ஓவியங்களை யாரும் விரும்பாததைப் போலவே, அனிமேஷன் குறும்படங்களும் செல்லுபடியாகவில்லை. எந்த இழப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் மனம் தளராத டிஸ்னி,
1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது.
கலங்கவில்லை  வால்ட் டிஸ்னி
'ஸ்டீம் போட் வில்லீ' என்ற படத்தை உருவாக்கினார். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள். உலகம் எங்கும் வரவேற்கப்பட்டது. படம் வெற்றியடைந்த 1928, நவம்பர் 18-ம் நாளே மிக்கி மவுஸ் பிறந்த நாளானது. உலகமெங்கும் உள்ள கார்ட்டூன் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.
படங்களில் வரும் கதாபாத்திரங்களை குழந்தைகள் நிஜம் என்றே நம்பினார்கள். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் சந்தோஷங்களும் நிறைந்த கற்பனையான ஊரை நிஜமாக்க வேண்டும்என டிஸ்னி விரும்பினார்.
அப்படித்தான் அமெரிக்காவில் 'டிஸ்னி லேண்ட்' என்ற பிரபல பொழுதுபோக்குப் பூங்கா உருவானது.

கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது.
 .அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகளாக உருவாகின. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.
மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை நாயகன் வால்ட் டிஸ்னி, ''தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.'' என்ற வாழ்க்கை அனுபவத்தைத் தரக் காரணமாக இருந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

Thursday, 27 October 2016

திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக்கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக்கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு
திட்டம் போட்டார். கிருஷ்ணர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக திரௌபதியிடம் விளக்கினார். நீ எப்படியா வது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நம ஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றா ல் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார். என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி, திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.
கும்மிருட்டான இரவு நேரத்தில் பாச றையில், கட்டிலில் படுத்துக்கொண் டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண் களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்க ளைத் தொட்டு வணங்கியவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடு க்கிட்டு எழுந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி மீண்டுமொரு முறை அவரது பாதங்களை கண்களில் ஒத் திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர், திரௌபதியை ஆசிர்வதித்து, தீர்க்க சுமங்கலி பவ! என்றுசொல்லிவிட்டார். பிறகுதான் பீஷ்மர், விளக்கின் ஒளி யைத் தூண்டிவிட்டு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திரௌபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ் மாச்சாரியரே ஆசிர் வதித்த பிறகு, இனி அவர் அர்ச்சுனனை எவ்வாறு கொல்ல முடியும்? முடியாதே!
இவ்வாறு, தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல்ஸ்ரீகிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌ பதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார். அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு பகவானே! இவ்வுலகமே தங் கள் திருவடிகளை வணங்கு ம்போது தாங்கள் திரௌபதி யின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ பீஷ்ம ரே! திரௌபதியும் அர்ச்சுன னும் என் பக்தர்கள். என் பக் தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித் தார். ஆம்! அது உண்மை தான் ! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யா ராயிருந்தாலும் கைவிடாமல் தக்க சமயத்தில் துணையிரு ந்து காப் பாற்றுவார்.

பகவானின் மேன்மை..!
வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, 

கிருஷ்ணா?
கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!
வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.
பெருமானே நீ சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"
புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
அதுதான் பகவானின் மேன்மை...

Tuesday, 25 October 2016

தம்பி என்று நம்பி அவன் உன்னில் வளர்ந்தான்..!
தாய் என்றும் தந்தை என்றும் உன்னை நினைத்தான்..!!
அக்கா,
அது உனக்காக வாழ்கின்ற உள்ளம் அல்லவோ.!!

Sunday, 9 October 2016

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி பற்றி படிக்க படிக்க ஆச்சர்யத்தின் எல்லைக்கே போன செய்தி!! உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது... ஒரு சிறப்பு பார்வை..

25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இன்னிக்கு வரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறதுங்கிறது நம்முடைய அறியாமைன்னு நினைச்சுக்கனும், அதனால நாம நம்மள மாத்திக்க வேண்டிய சூழலுக்கு நெருங்கிகிட்டு இருக்கோம்.
கீழே சொல்லப்பட்டுள்ள கருத்தில் மாற்றுக் கருத்துக்கள் நமக்கு நிச்சயமா இருக்கத்தான் செய்யும். ஆனா சொல்லப்பட்டுள்ள செய்தியை ஆராய்ஞ்சு பாக்கும்போது பல விஷயங்களில் அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்த‍ை உருவாக்கும் என்று நம்பத்தான் வேண்டியுள்ளது..
1998 ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. Film industry photo industry ல் இப்போ ஃபிலிம்களே கிடையாது..
ஃபிலிம் மற்றும் பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் இந்தப்பதிவு மூலம் சொல்லப்படுது.
தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?? இப்படி பலதரப்பட்ட தொழில்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உலகளவிலே காணாமலேயே போய்டுச்சு. எதை எல்லாம் நாம இதுக்கு மேல புதுசா எதுவம் வராதுன்னு நினைச்சோமோ அது எல்லாமே மாறி மாறி பழசு எல்லாம் காணாமலேயே போய்க்கிட்டு இருக்கு..
எதனால ? ஏன் இப்படின்னு கேட்டா?
டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்ப்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இவைங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது... கமிஷனோட...! இல்லீங்களா..?
'Ubar' ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!
இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?
அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: நமக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வோம்? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்போம்...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ நம்ம கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!
இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் ஈசியா செஞ்சு கொடுத்தா ? நம்முடைய சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Section னோட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!
IBM Watson, அப்படீங்கற நிறுவனம் இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!
அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்குப்படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க இனி யாருக்கு டீ போட்டுக் கொடுப்பாங்க ?
ஆடிட்டர்கள், டாக்டர்கள்ல இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts' ன்னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்...!
2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா ஒட்டுமொத்த ஆட்டோ மோட்டிவ் சம்பந்தப்பட்ட எல்லா நேரடியான, மறை முகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.
அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..நம்ம செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல நம்ம முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நாம போகவேண்டிய எடத்துக்கு அழகா கொண்டு போய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நாம காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.
இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நாம நெனைச்சா..? நம்‍மோட நினைப்பை மத்திக்கனும்... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்ஃபோன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?
முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருந்தா ஓக்கே. இல்லன்னா கூகுள்ல தேடும்போது அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.
விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ. 
'Moodies'ங்கற ஒரு App, இப்பவே நம்ம முகத்தை scan செஞ்சு நம்ம மூடு என்னன்னு சொல்லுது...2020ல நாம பொய் சொல்றோமா இல்ல உண்மைய சொல்றோமானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.
இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. நம்ம செல் ஃபோன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, நம்மளோட கண்ணை ஸ்கேன் பண்ணும். நம்மளோட ரத்த மாதிரியை ஆராயும். நம்ம மூச்சு காத்தை அலசும். நம்ம உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் சாதாரணமா விஷயமா மாறிடும்.
அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும். மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும்! புரிஞ்சு நடத்துக்கனும்..

இந்த

உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது...

சிறந்த 25 பொன்மொழிகள்


1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த
பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்
வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால்
வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற
கொள்கையை மேற்கொள்கிறான்.

7. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. 
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச்
செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம்
இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு
கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.

25.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

வெற்றிக்கு வழி காட்டும் சிந்தனைகள்

01. வெற்றியின் விதிகள் வகுப்பறையில் கற்பிக்கப்படுவதல்ல, வாழ்க்கையுடன் முட்டி மோதித்தான் அதைக் கற்க முடியும்.

02. எல்லாவிதமான கல்விகளும் கற்கப்பட்டாலும், ஆசிய நாட்டு பாடசாலைகளில் வெற்றியின் அறிவியல் கற்பிக்கப்படாமல் தந்திரமாக நீக்கப்பட்டுள்ளதை புரிதல் அவசியம்.

03. உலகக் கோடீஸ்வரர்களில் 80 வீதமானவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர்களே.

04. ஒரு புதிய சமுதாயத்தை படைக்க வேண்டுமானாலும், உங்களை நீங்களே ஒரு புதிய மனிதராகப் புத்தாக்கம் செய்ய வேண்டுமானாலும் முதலாவது தேவை வெற்றியைப்பற்றிய அறிவியலாகும்.

05. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இலட்சிய வெறியுடன் உறங்கச் செல்பவர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளில் தீர்வு கிடைக்கும்.

06. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யப் போகும் மாபெரும் சாதனையை கனவு காணுங்கள். அந்தத் துறையின் முன்னோடிகள் உங்களுக்கு மாலையிடக் காண்பீர்கள்.

07. எந்தத் துறையில் பணி செய்வது உங்களுக்கு இனிமையான அனுபவமாகத் தோன்றுகிறதோ அந்தத் துறையை நீங்கள் சாதிப்பதற்கான துறையாக தேர்வு செய்யுங்கள்.

08. பணம் சேர்ப்பதுதான் உங்கள் இலக்கு என்றால் எதற்காக சேர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்காக சேர்க்கிறீர்கள் என்றால் அந்தப் பணம் தமக்கு எதற்காக கிடைக்கிறது என்ற தெளிவு அவர்களுக்கு வேண்டும். இரண்டுமே இல்லாமல் பணத்தைச் சேர்த்து எதுவுமே இல்லாமல் மடிவோரே மனதரில் அதிகம்.

09. கால் போன போக்கில் அலையும் மனதை தெளிவான திட்டமிட்டு செலுத்த முதன்மையான ஒரு திட்டம் வேண்டும்.

10. இலக்குகளை உருவாக்கத் தெரிந்தவர்கள், குறி நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணை போல செயற்படுகிறார்கள். நடைப்பிணமாய் வாழ்வோரில் இருந்து இவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.

11. உங்களது முதன்மை இலக்கு பிரமாண்டமானதாக இருந்தால் அதைப் பகுதி பகுதியாக பிரித்து எழுதிக் கொள்ளுங்கள். பின் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.

12. ஒருவரது எதிர்காலம் அவருடைய அன்றாட வேலை முறையால் தீர்மானிக்கப்படுகிறது.

13. எதை மேம்படுத்த வேண்டும், ஏன் மேம்படுத்த வேண்டும், எப்படி மேம்படுத்த வேண்டும், என்ன காலத்திற்குள் மேம்படுத்த வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடி வையுங்கள்.

14. இனிப்பாக இருந்தாலும், கசப்பாக இருந்தாலும் திட்டத்தை மனதில் வைத்து முன்னேற வேண்டும்.

15. சரியாகத் திட்டமிடத் தவறும் அனைவரும் தோல்விக்காக திட்டமிடுகிறார்கள் என்பது தோல்வியின் விதிகளில் ஒன்றாக இருக்கிறது.

16. ஆங்கிலப் பேரறிஞர் ஜேம்ஸ் போஸ்வெல்ஸ் 1763ம் ஆண்டு அக்டோபர் 13 ம் திகதி எழுதிய கடிதம் திட்டமிடலின் அவசியத்தை உணர்வு பூர்வமாக வலியுறுத்துகிறது.
அருமையான இதயமும், ஒளிமயமான உடலும் கொண்ட மனிதன் நீ. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நீ சோம்பேறியாகவும், சோர்வாகவும், முட்டாள்தனமாகவும், மகிழ்ச்சியின்றியும் காணப்படுகிறாய்.
இருண்ட ஆண்டுகள் இன்றோடு முடியட்டும், உன்னை ஆற்றல் மிக்க மனிதனாக மாற்ற இப்போதே முடிவு செய்துகொள். உனது பின்னடைவுக்குக் காரணம், உன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாததே என்பதை உணர்ந்து கொள். அறிவுபூர்வமான திட்டத்தை உருவாக்கிக் கொண்டு தயாராகு. நடைமுறைக்கு செல்லும் போது உனது திட்டம் விரிவாக்கம் பெறலாம். ஆனால் மனம் போன போக்கில் செல்வதையும், திட்டமின்றி செயற்படுவதையும் இப்பொழுதே நிறுத்திவிடு. இந்த உறுதி மொழயை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள்.

17. பலூன் விற்ற வெள்ளை அமெரிக்கரிடம் ஒரு கறுப்பின சிறுவன் ஐயா கறுப்பு பலூன்களும் மேலே பறக்குமா என்று கேட்டான். அதற்கு அவர் தம்பி பறப்பிற்கும் நிறத்திற்கும் தொடர்பில்லை உள்ளே இருப்பதுதான் பறப்பை தீர்மானிக்கிறது என்றார். உடனே கறுப்பு பலூனை வேண்டி பறக்க விட்ட சிறுவனே மாட்டின் லூதர் கிங். ஆகவே உனக்குள்ளே இருக்கும் சரக்கை அதிகரித்தால் நீயும் உயரப்பறக்கலாம். நீ கீழே கிடப்படதற்கு பறக்கும் சரக்கு இன்மையே காரணம் என்பதை உணர்.

18. உங்களிடம் எவ்வளவு அழகு, பணம், அதிகாரம் இருந்தாலும், உலகம் உங்கள் செயலை வைத்தே உங்களை எடை போடுகிறது. உங்கள் மனதிற்குள் இருக்கும் உழைப்பற்ற உயர்வான சுய மதிப்பீடு மக்களிடம் உங்களைப்பற்றிய உயர்வை உருவாகாது.

19. நம்மில் பலரும் நம்மைப்பற்றி குறைவாக மதிப்பிடக் காரணம், சிறுவயதிலேயே நம்மிடம் விதைக்கப்படும் எதிர்மறையான நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள் என்பவைதான்.

20. இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

21. விரும்பும் தகுதியை பெறுவதற்கு அது ஏற்கெனவே இருப்பது போல நடிப்பதும் ஒரு வழி என்று உளவியல் கூறுகிறது. நீங்கள் எந்தளவு சமூக அந்தஸ்த்து பெற விரும்புகிறீர்களோ அது வந்துவிட்டதாக நினைத்து நடவுங்கள்.

22. உங்கள் மனத்திரையை தொலைக்காட்சி திரையாகவும், பெருவிரலை ரிமோட் கன்ரோலை அமத்தும் கருவியாகவும் கருதி சரியான காட்சிகளை மனத்திரையில் விழுத்துங்கள்.

23. இலட்சியத்துடன் இணைக்கப்படாத உழைப்பு மெய் வருந்தக் கூலி தருமேயல்லாது சிறப்பான பலன்களை அள்ளித்தராது.

24. ஒரு பணியை தொலை நோக்குடன் அணுகத் தெரியாதவருக்கு அதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.

25. உங்களது உழைப்பு சரியான விளைவை தரவேண்டுமானால் ஒரு பணியை தொடங்க முன்பாகவே, அதனை உங்கள் மனதிற்குள் பயிற்சி செய்து நிறைவேற்றுவது ஒரு சிறந்த யுக்தி.