நீங்கள் கோவிலுக்குள் சென்றால், எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
ஆனால், இன்றோ பெயரளவில் ஓரிரு முறை வலம் வருதல் அல்லது பொதுவாக
எல்லா தெய்வங்களையும் மூன்று முறை வலம் வருதல் என்று வழக்க மாகிவிட்டது.
எல்லா தெய்வங்களையும் மூன்று முறை வலம் வருதல் என்று வழக்க மாகிவிட்டது.
ஆனால், இது தவறு. கீழே பாருங்கள் ஒவ் வொரு தெய்வத் தையும் நாம் எத்தனை வலம் வர வேண்டும் என்று பட்டியலிடப் பட்டுள்ளது.
விநாயகரை நீங்கள் வணங்கி அவரை ஒருமுறை தான் வலம் வர வேண்டும்.
ஈஸ்வரனையும், அம்மனையும் வணங்கி 3 முறை வலம் வர வேண்டும்,
அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,
நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,
சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்